தீராவெளி

Wednesday, July 26, 2017

சிராஜ் மஷூர்

Siraj Mashoor


நூலின் தலைப்பு பிரமாதம். உள்பெட்டிக்கு வராதீர்கள், தபால் பெட்டியூடாக வாருங்கள் என்று சொல்ல தீரனுக்கு அதிக உரிமையுண்டு. காலம் காலமாக தபால் பெட்டியோடு மல்லுக்கட்டியவர் அவர்.

ஆற்றலும் மண்வளமும் கலந்த எழுத்தின் சூட்சுமம் தெரிந்தவர் தீரன். அவருடைய பல புத்தகங்கள் இந்தியப் பதிப்பாக வந்ததால் அவருடைய எழுத்து பரவலாக இங்கு அறிமுகமாகியிருக்கவில்லை. இதனை அவரிடமே ஒரு குறையாகவும் சொல்லியிருக்கிறேன். இப்போது அந்தக் குறை நீங்க அவரே வாய்ப்பளித்திருக்கிறார்.

இலக்கிய நண்பர்களும் வாசகர்களும் இதற்கு கைகொடுக்க வேண்டும் என்பது என் அன்பான வேண்டுகோள். எழுத்தாளனே தன் புத்தகத்தைக் கூறி விற்க வேண்டும் என்பது நமது இலங்கை எழுத்தாளர்களின் தலைவிதி. பதிப்பகங்களால் பாதிக்கப்பட்ட பலரின் சோகக் கதைகளை அடிக்கடி கேட்ட வண்ணமே இருக்கிறோம். தீரனுக்கு இவ்வாறான கையைக் கடிக்கும் சோதனைகள் வரக் கூடாது என்று பிரார்த்திக்கிறேன்

No comments:

Post a Comment