தீராவெளி

Monday, November 21, 2022

அப்துல் ரசாக்

 

அப்துல் ரசாக்..

அக்கரைப்பற்று


தீரனை எங்கள் காலத்து தீராக் கதைசொல்லி என்றே அழைக்க விரும்புகிறோம். எளிமையும் இனிமையும் நிறைந்த கிராமங்களே தீரனின் கதைக்களங்கள். சாதாரண மனிதர்களே அவரது கதை மாந்தர்கள். தீரன் பற்றிய தங்கள் பார்வை மகிழ்வளிக்கின்றது.

Sunday, November 20, 2022

Saturday, November 19, 2022

Commands



 

பிஸ்தாமி அஹமட்....

 பிஸ்தாமி அஹமட்....

முகநூலில்

சாகித்திய விருது பெற்ற வெள்ளி விரலால் மட்டுமே எனக்குள் தங்க நினைவுகளைத்தந்த கிழக்கிழங்கையின் சிறந்த நாவலாசிரியர்களுள்ஒருவரான தீரன் R.M. Nowsaath அவர்களது முக்கிய ஐந்து நூல்கள் இவை


தீரன் எல்லோரையும் போன்ற எழுத்துக்களைக்கொண்டவரல்ல.

அவரது எழுத்துகளில்உயிர் உள்ளதுஉயிர்ப்பும் உயிரோட்டமும் உள்ளதுஉணர்வுள்ளது


இனசௌஜன்யத்தை

பேசும் உறவுப்பாலமாக அவை உள்ளன

ஆயிரம் உரைகளால் உபன்னியாசங்களால்

ஆக்க முடியாததை அவர் ஒரு கதைக்கூடாக

ஆக்கிவிடுவார்

அவரது எழுத்துக்களை

மக்கள் மயப்படுத்துவதால்

சகவாழ்வை

இன சௌஜன்யத்தை

அமைதியை

நல்லுறவை

வளர்க்கலாம்

இனங்களுக்கிடையிலான

நல்லுறவுக்கான

கலந்துரையாடல்களாக

ஆக்கலாம்

எழுத்தின் வலிமையை

உணர்த்தலாம்

எழுதப்படாமல் விடுபட்டவற்றை குறைநிரப்பு செய்யலாம்

அவரது கதைகளின்

கரு பாத்திரம்

சூழல்

மொழி என அத்தனையும்

உயர்ந்தவை

உன்னிப்பாக அவதானிக்க வேண்டியவை

வரலாற்றின் தவறுகளை

விடுபடல்களை

விபரீதங்களை

விளைவுகளை

மொழிவழியாக

இலக்கியம் வழியாக

எவ்வளவு சிறப்பாக

பகிரலாம் பதியலாம் என்பதற்கு தீரனின் எழுத்தும் சிறந்த சான்று

தீரன் நௌஸாத் இலக்கிய உலகில் மட்டுமன்றி ஈழத்திலும் தவிர்க்க முடியாத தன்னிகரற்ற நாமம்


தீரன் எழுதிதித்தீர்க்க

ஒரு மந்திரக்கோல்

மந்திர மொழி

மந்திர பாத்திரங்கள்

அவர்முன்னே

புதிது புதிதாக குவிந்து கிடக்கின்றன

Friday, November 11, 2022

பிஸ்தாமி அஹமட்

Bisthami Ahamad..

மாவணெல்ல 


 2 வருடங்களுக்கு முன் வெள்ளி விரலை மட்டும் தற்செயலாக வாங்கினேன்

அதன் பிறகு எதுவும் காணக்கிடைக்கவில்லை

கொழும்பில் இருப்பதை அனுப்புங்கள்

நிச்சயம் வாசித்து கருத்துரைப்பேன்

உங்கள் எழுத்து வினோதமானது

அது

பயான்களில் பேசப்படாத

நுண்மையான சகவாழ்வை பேசுகிறது

ஒரு காலத்தில் திக்வல்லை கமால் போன்ற கலைஞர்கள் தெற்கில் செய்த பணியை ஒத்தது உங்கள் நவீன எழுத்துக்கள்

உண்மையில் சர்வதேச தன்மை வாய்ந்தவை

Sunday, November 6, 2022

சமம்..நூல் வெளியீடு





அன்புடையீர்,

அஸ்ஸலாமு அலைக்கும்,/வணக்கம்

உருவகக் கதைகளை நோக்கிய ஒரு வழிகாட்டற் குறிப்பு

என்னும் பொருளில் செங்கதிரோன் த.கோபாலாலகிருஷ்ணனின் சமம் என்ற உருவகக்கதை நூல் பற்றிய ஓர் கலந்துரையாடல்,

2022.11.05
சனி
காலை 9.30 மணிக்கு

செங்கதிரோன்
த.கோபாலகிருஷ்ணன்
ஏ. பீர்முகம்மது
சிராஜ் மஹ்ஷூர்

ஆகியோரின் பங்கு பற்றுதலுடன்,


சாய்ந்தமருதில், என் இல்லத்தில் நிகழ்த்த உள்ளோம்.

குறிப்பிட்ட சிலருக்கே இந்த பிரத்தியேக அழைப்பை விடுக்கின்றோம்..

கட்டாயம் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்

இவ்வண்ணம்

அபாபீல்கள் கவிதா வட்டம்
தீரன்/உவைஸ் முஹமட்


சிராஜ் மஸ்ஹூர் 


'செங்கதிரோன்' த.கோபாலகிருஷ்ணன் எழுதி, சமீபத்தில் வெளியிட்ட 'சமம்' உருவகக் கதைகள் பற்றிய கலந்துரையாடலொன்று, நேற்று சனி (05.11.2022) காலை சாய்ந்தமருதிலுள்ள தீரன் R.M. Nowsaath இன் இல்லத்தில் இடம்பெற்றது.

அபாபீல்கள் கவிதா வட்டம் இதனை ஏற்பாடு செய்திருந்தது. சாய்ந்தமருதைச் சேர்ந்த மறைந்த எழுத்தாளர் கலாபூஷணம் யூ.எல்.ஆதம்பாவாவை நினைவுகூரும் அரங்கில் இது இடம்பெற்றது. 'நாங்கள் மனித இனம்' என்ற அவரது உருவகக் கதை நூல் பற்றியும் இதன்போது பேசினோம்.

எழுத்தாளர் ஏ.பீர்முகம்மது இதற்குத் தலைமை வகித்தார். பொதுவாக உருவகக் கதைகள் குறித்தும், எழுத்தாளர் யூ.எல்.ஆதம்பாவா குறித்தும், 'சமம்' குறித்தும் செங்கதிரோன் பற்றியும் தலைமையுரையில் பேசினார்.

பெரிய மீன் சிறிய மீன் என்ற ரஷ்ய உருவகக் கதை, எப்படி பலராலும்  வெவ்வேறு உருவகக் கதைகளாக வளர்த்தெடுக்கப்பட்டன என்பதை அழகாக உதாரணம் காட்டிப் பேசினார். 
உருவகக் கதையும் நீதிக் கதையும் வேறுபடும் விதத்தையும் அழகுற விளக்கினார்.

அதன் பின்னர் 'சமம்' குறித்தும் உருவகக் கதைகள் குறித்தும் பேசினேன். வல்லிக்கண்ணன் , எஸ். முத்துமீரான் போன்றோரின் உருவகக் கதைகள் குறித்தும் கதைத்தோம்.

விபுலானந்த அடிகளின் சமூக நல்லிணக்கப் பரிமாணம் குறித்தும், அவரது பன்முக ஆளுமையை மக்கள்மயப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் பேசினேன்.

அடுத்து நூல்கள் வழங்கி வைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து பொறியியலாளர் செங்கதிரோன் பேசினார். நூலாசிரியர் காரைதீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தற்போது மட்டக்களப்பில் வசித்து வருகிறார். தனது கதைகள் குறித்தும் சமூக உறவுகள் குறித்தும் சிறப்பாகக் கருத்துரைத்தார்.

அதனையடுத்து தில்லை அறிவாலயத்திற்கு, செங்கதிரோனின் நூல்கள் கையளிக்கப்பட்டன. அவற்றை கதன் காரையன் பெற்றுக் கொண்டார்.

பின்னர் கலந்துரையாடல் இடம்பெற்றது. வந்திருந்தோர் அதில் உற்சாகமாகப் பங்கேற்றனர்.

நிகழ்வின் நிறைவில்

1.உருவகக் கதைகள் பற்றிய தெளிவு கிடைத்தது. உருவகக் கதைகளை எழுதும் ஆர்வமும் பலரில் வெளிப்பட்டது.

2.மாணவர் மத்தியில் இந்த நூலைக் கொண்டு சென்று சேர்ப்பதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.

3.உருவகக் கதை நூலுக்கு விருது வழங்கி ஊக்குவிப்பதன் முக்கியத்துவம்  சுட்டிக்காட்டப்பட்டது.

4.சற்று இடைவெளிக்குப் பிறகு, சாய்ந்தமருதில் இலக்கிய நிகழ்வொன்று நடைபெற்றது பற்றியும் குறிப்பிடப்பட்டது.

5.விபுலானந்த அடிகள் பற்றிய புதிய தகவல்கள் பரிமாறப்பட்டன.

6.நூல்களை சந்தைப்படுத்துவது குறித்தும் பேசப்பட்டது.

மொத்தத்தில் மனநிறைவான நிகழ்வாக அமைந்திருந்தது. ஏற்பாட்டாளர்களான ஏ.பீர் முகம்மது மற்றும் தீரன் நௌஷாட் ஆகியோருக்கு நன்றிகள்.

"எளிமையாக, செலவுச் சிக்கனத்தோடு இலக்கியக் கூட்டமொன்றை நடத்தலாம் என்பதை செய்து காட்ட வேண்டும்" என்று பீர் முகம்மது சேர் பேசும்போது குறிப்பிட்டார். அதற்கு நல்ல உதாரணமாக இந்நிகழ்வு அமைந்திருந்தது.

'சமம்' நூல் குறித்தும் அதிலுள்ள கதைகள் குறித்தும் இங்கு பேசப்பட்டது. 

"பொத்துவிலில் நடைபெற்ற வெளியீட்டு விழா திருப்தி தந்தது. என்றாலும், இந்தக் கலந்துரையாடல் அதைவிடத் திருப்தியாக இருந்தது" என்ற நூலாசிரியரின் கருத்து மனங்கொள்ளத் தக்கது.

பத்துப் பேர்தான் வந்திருந்தார்கள். கலந்து கொண்ட எல்லோருக்கும் அதே மனநிறைவு இருந்தது குறிப்பிடத்தக்கது.

படங்கள்: நண்பர் காரையன் கதன்.



காரையன் கதன்

அபாபீல்கள் கவிதா வட்டம் ஏற்பாடு செய்த த.கோபாலகிருஷ்ணன் அவர்களின் சமம் (உருவகக் கதைகள் ) அறிமுகமும்
உருவகக் கதைகள் நோக்கிய ஒரு வழிகாட்டல் குறிப்பு நிகழ்வு இன்று தீரன் அவர்களின் இல்லத்தில் மர்ஹீம் கலாபூசணம் யூ.எல்.ஆதம்பாவா நினைவிரங்கில் மிகவும் மனதுக்குப் பிடித்தால் போல சிறப்பாக நடந்து முடிந்தது.
இந்நிகழ்வின் போது தில்லை அறிவாலயத்திற்கும் கோபாலகிருஷ்ணன் அவர்களால் அவரது படைப்புக்கள் வழங்கி வைக்கப்பட்டது.


மூர்ஷித்

செங்கதிரோன் எனும் மூத்த கலை, இலக்கிய மற்றும் சமூக  செயற்பாட்டாளர் த.கோபாலகிருஷ்ணன் அவர்கள் எழுதிய "சமம்" எனும் உருவகக் கதைகள் நூலின் அறிமுக நிகழ்வும் கருத்தாடலும்  அபாபீல்கள் கவிதா வட்டத்தின் ஏற்பாட்டில் மூத்த எழுத்துச் செயற்பாட்டாளர் தீரன் ஆர்.எம். நெளசாட் அவர்களின் இல்லத்தில் மர்ஹூம் கலாபூசணம் யூ.எல்.ஆதம்பாவா அரங்கில் நேற்று (5) இடம்பெற்றது. 

மூத்த எழுத்துச் செயற்பாட்டாளர் பீர்முஹம்மட் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஆய்வாளர், செயற்பாட்டாளர் சிராஜ் மசூர் அவர்கள் சிறப்புரையாற்றியதோடு, வருகைதந்த அனைவரும் பல்வேறு பரப்புக்களில் தங்களது கருத்துக்களைப் பரிமாற்றிக் கொண்டனர். 

இதன்போது செங்கதிரோன் த.கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கும் எனக்கும் இடையிலான தொடர்பு, தமிழ் மொழிச் சமூகமான தமிழ்-முஸ்லிம் மக்களின் நல்லுறவு மற்றும் அதற்காக உழைத்த சுவாமி விபுலானந்தர் உள்ளிட்டவர்களின் பங்களிப்புக்கள், வாசிப்புக் கலாச்சாரத்தினை பரவலாக்கவேண்டியதன் அவசியம் மற்றும் உருவகக்கதைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் என்னால் கருத்துக்களை பகிர்ந்துகொள்ள முடிந்தது.

இந்நிகழ்வில் தில்லை அறிவாலயத்திற்கு த.கோபாலகிருஷ்ணன் அவர்களால் அவரது படைப்புக்கள் அடங்கிய நூல்களின் தொகுதி அதன் பிரதம செயற்பாட்டாளர் காரையன் கதன்   அவர்களிடத்தில் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

#முர்ஷித்




 

Tuesday, November 1, 2022

ஜிஃப்ரி ஹாசன்

 ஜிஃப்ரி ஹாசன் தாய்வீடு மின்னிதழில்...








Monday, October 31, 2022

அஸ் செய்த் இர்பான் மௌலானா



 

தாசிம் அஹமட்


 

அபூ நஜாத்(எம். பெளஸ்தீன்) சம்மாந்துறை



ஆர்.எம். நௌஸாத்-தீரன் 
மீதான எனது பார்வை:

அபூ நஜாத்(எம். பெளஸ்தீன்)
சம்மாந்துறை



தீரனின் கவிதைகள் திகட்டாத ஞானக் கருவூலம். 

ஞானச் சுவை என்பது நானிலம் சுற்றி, ஏழுவானம் கடந்து எம்மை ஏகனிடம் சமர்ப்பிக்கும் கலை.

இந்தக் கலையினை சின்னச்சின்ன வார்த்தைகளுக்குள் சிறப்பாக அடக்கி பென்னம்பெரிய ஞானக் கடலை தன் சிறு கவிதைகளுக்குள் தரும் பாணி தீரனின் பெரும் பணி. 

வெளிப்படையான நகைச் சுவைக்குள் பொருட்சுவை நிறைத்து அதனையும் பொரித்து சுவைகூட்டி எமக்கு உண்ணக் கொடுப்பவர் இந்த தீரன். 

ஆழிக்கடலைச் சுத்திகரித்து பானையில் சேர்த்து அதற்குப் பல்சுவையும், வாசனைகளும் சேர்த்து அதுவும் போதாதென்று வானவில்லின் வர்ணங்கள் சேர்த்து உயர் குடிபானமாக்கி போத்தலில் அடைத்து எமக்குப் பருகத் தருவார் இந்த சூரன். 

நாவுக்கு ருசி, மூக்கிற்கு வாசனை, கண்ணிற்கு காட்சி,  இவை அனைத்தும் எம் ஆன்மாவிற்கு விருந்து தருவதற்கான தீரனின் யுக்திகள். 

சமகால இலக்கிய ஆளுமைகளுக்குள் தீரன் ஒரு கவிஞன், சிறுகதையாளன், நாவலாசிரியர், பத்திரிகையாளன், கதை சொல்லி, விகடகவி, கட்டுரையாளன், ரசிகன்.... என்ற பல்பரிமாண-  பன்னூலாசிரியர். 

 கொக்கரிக்கும் கோழிகளிடையே ஆரவாரமற்ற ஆயிரம் முட்டை ஆமை. 

Friday, October 7, 2022

சேனன்


T.U. சேனன் உடனான கலந்துரையாடல்...

அக்கரைப்பற்று..செப்டம்பர் 2022




 

Thursday, October 6, 2022

ரியாஸ் குரானா

Riyas kurana

 

அக்கரைப்பற்று புத்தக காட்சியில் தோழர் ஆர்.எம்.நௌசாத் (தீரன்) அவர்களுடைய “வக்காத்துக் குளம்” மற்றும் “ முத்திரையிடப்பட்ட மது” போன்ற நுால்கள் கிடைக்கும். 

முத்திரையை உடைத்து மது அருந்துவோம். 

“ஊக்க மது கைவிடேல்”







Friday, September 23, 2022

Muhseen

 ‘தீரனுடன்’ ஒரு தீரா உரையாடல்.


பண்ணூலாசிரியர் அ.வா.முஹ்சீன் அவர்கள்

Abthul Wahid Muhseen


20.09.22 மாலை 6.00 மணியளவில் ‘தீரன்’ ஆர்.எம். நௌசாத்தை அவருடைய வீட்டில் சந்தித்தேன். அதன் பின்னரான ஆறு மணித்தியாலங்களும் அடுத்த நாள் காலை 6.00 மணியிலிருந்து 9.00 மணி வரையிலான மூன்று மணித்தியாலங்களும் உரையாடல்களால் நிரம்பின. 


இந்த நூற்றாண்டில், இலங்கை முஸ்லிம்களின் நாவல் எழுதியலை ஒரு புதிய தளத்திற்கு எடுத்து சென்றிருக்கின்ற நௌசாத்தை சந்தித்து உரையாட வேண்டும் என்ற என்னுடைய அவா அன்று நிறைவேறியது. நௌசாத்! நான் அனுபவித்த சிறந்த தருணங்களில் உங்களுடனான உரையாடலும் ஒன்று. 


வாய் ஓயாமல் நான் கதைத்த அனைத்தையும் பெரு மனது கொண்டு, தூக்கத்தையும் கட்டுப்படுத்தியவாறு கேட்டுக் கொண்டிருந்த நண்பர் நௌசாத்திற்கு நான் பெரும் நன்றி சொல்ல வேண்டும். உண்மையாகவே, இப்போது என் தலையின் பாரம் சற்றுக் குறைந்திருப்பதுபோல உணர்கிறேன்.


கடற்கரைப் பள்ளியூடாக என்னை அழைத்துச் சென்று, அப்பள்ளிவாசலை நான் பார்ப்பதற்கு உதவியமைக்கும் நன்றிகள்! பல் பிடுங்கிய வலியுடனும், எனை உபசரிப்பதற்காக கடுமையாக முயன்ற உங்கள் துணைவியாருக்கு என்னுடைய விசேட நன்றிகள்!

Wednesday, May 25, 2022

Kandasamy R

 

இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் ஆர். எம். நௌசாத் இன்று முகநூல் நட்பில் இணைந்துள்ளார். இவருக்கு எனது நன்றிகள். இவரைப் பற்றி இணையத்தில் படித்தது
ஆர். எம். நௌசாத் (பிறப்பு: செப்டம்பர் 5, 1960) இலங்கையின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த கவிஞரும், சிறுகதை, புதின எழுத்தாளரும் ஆவார். தீரன் என்ற புனைபெயரிலும் எழுதுபவர்.
வாழ்க்கைக் குறிப்பு
நௌசாத் சாய்ந்தமருது ஊரில் ராசிக் காரியப்பர், ஹாஜரா ஆகியோருக்குப் பிறந்தவர். அஞ்சல் அதிபராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். மனைவி பெயர் பாத்திமா றிபாயா, இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். 1978 ஆம் ஆண்டு முதல் எழுதி வரும் இவர் தூது என்ற பெயரில் கவிதைச் சிற்றிதழ் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
எழுதிய நூல்கள்
வல்லமை தாராயோ.. (சிறுகதைத் தொகுதி, 2000)
வெள்ளிவிரல் (சிறுகதைத் தொகுதி, 2011)
பள்ளிமுனைக் கிராமத்தின் கதை (2003)
வானவில்ல்லிலே ஒரு கவிதை கேளு (2005)
நட்டுமை (புதினம், 2009)
கொல்வதெழுதுதல் 90 (புதினம், 2013)
வக்காத்துக் குளம் (குறுநாவல். 2021 )
தீரதம் (சிறுகதை தொகுப்பு. 2019)
ஆழித்தாயே அழித்தாயே... (சுனாமி. காவியம்.2014)
குறு நெல். (குறும்பாக்கள்.2021)
அபாயா என் கறுப்பு வானம்.(கவிதைகள்..மின்நூல்..பிரதிலிபி வெளியீடு)
பரிசுகளும் விருதுகளும்
நட்டுமை நாவல் காலச்சுவடு சுந்தர ராமசாமி 75 பவழவிழா இலக்கியப்போட்டியில் முதற் பரிசு பெற்றது.
வக்காத்துக் குளம் நாவல் அக்கினிக் குஞ்சு இணையம் நடத்திய எஸ்.பொ. நினைவு நாவல் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்றது.
வெள்ளிவிரல் சிறுகதைத் தொகுதிக்கு 2011ல் இலங்கை அரசின் தேசிய அரச சாகித்திய விருதும் கிழக்கு மாகாண சாகித்திய விருதும் கிடைத்தன.
சாகும் தலம் சிறுகதை எழுத்தாளர் சுஜாதா அறக்கட்டளை நிறுவனம் நடத்திய அறிவியல் புனைகதைப் போட்டியில் சிறப்புப் பரிசு பெற்றது.
தாய் மொழி சிறுகதை ஞானம் மாசிகை நடத்திய புலோலியூர் க. சதாசிவம் நினைவுச் சிறுகதைப் போட்டியில் முதற்பரிசு பெற்றது.



Thursday, March 17, 2022

சாதிர் அஹமத்

 Shathir Ahamed is with R.M. Nowsaath.


மொழி வழி கூடுகை 2022
வனம்- ஆதிரை
விருந்தினர் - 03 தீரன் நௌஷாத்


தீரன் ஆர். எம். நௌஷாத் கிழக்கின் நிலவியல் குறித்து மிக நேர்த்தியான கதைகளை வாசிப்புலகிற்கு தந்தவர். தனக்கான கதை மொழியினை வடிவமைத்ததிலும், மண்வாசனைச் சொற்களில் பிரத்தியேக கவனத்தினைச் செலுத்தியதும் தீரனின் தனித்த அடையாளமாக இலக்கியப் பரப்பில் விசாலமாகியது. தீரனின் கதைகள் முழுக்க உலாவித்திரிந்த மாந்தர்கள் வாசகர்களிடம் மிக அண்டிய உறவினை பேணிக் கொண்டார்கள். தீரனின் கதைகளைப் போல கவிதைகளும் மேம்பட்ட அரசியலினை கொண்டியங்கியது.
‘நட்டுமை’, ‘கொல்வதெழுதுதல் 90’ இவரது நாவல்கள். ‘வெள்ளி விரல்’, ‘தீரதம்’, ‘வக்காத்துக் குளம்’ ஆகியவை சிறுகதை தொகுப்புகள்.
நட்டுமை நாவலானது காலச்சுவடு அறக்கட்டளையின் 'சுந்தர ராமசாமி -75 ‘ இலக்கியப் போட்டியில் முதலிடம் பெற்றது. வெள்ளிவிரல் சிறுகதைத் தொகுதி 2011ல் தேசிய அரச சாகித்திய விருது பெற்றது. ‘கொல்வதெழுதுதல் 90’ காலச்சுவடு பதிப்பகத்தினால் வெளியிடப்பட்டு தமிழ்நாடு அரசின் ஆயிரம் பிரதிகளுக்கான நூலக ஆணை பெற்றது. 2017ல் அக்கினிக்குஞ்சு இணையம் நடாத்திய எஸ்.பொன்னுத்துரை நினைவு நாவல் போட்டியில் இவரின் ‘வக்காத்துக்குளம்’ குறுநாவல் மூன்றாம் இடத்தைப் பெற்றது. தினக்குரல் நாளிதழும் பிரான்ஸ் தமிழ் வானொலியும் இணைந்து நடத்திய சில்லையூர் செல்வராசன் ஞாபகார்த்த உலக வானொலி நாடகப் போட்டியில் ‘காகித உறவுகள்’ எனும் வானொலி நாடகம் மூன்றாம் பரிசு பெற்றது.

‘நல்லதொரு துரோகம்’ என்ற சிறுகதைக்கு பேராதனை பல்கலைக்கழக தமிழ் சங்கம் முதற்பரிசாக தங்கப்பதக்கம் அளித்தது. ‘சாகும்-தலம்’ சிறுகதை எழுத்தாளர் சுஜாதா அறக்கட்டளை நிறுவனம் நடத்திய அறிவியல் புனைகதைப் போட்டியில் முதற்பரிசு பெற்றது. ஞானம் சஞ்சிகை நடத்திய புலோலியுர் க. சதாசிவம் நினைவுச் சிறுகதைப் போட்டியில் ‘தாய் மொழி’ சிறுகதைக்கு முதற்பரிசு கிடைத்தது.
"தானே பின்னிக்கொண்ட உலக வலைப்பின்னலில் தானே சிக்கிக் கொண்ட மனிதச் சிலந்திகளுக்கு, சில காலங்களின் பின்னர், இதனைவிட்டும் விடுதலையாகித் தம் ஆரம்பம் நோக்கிய எத்தனம் அடிமன ஏக்கமாக உறைகிறது. அது, தொடர்ந்து விஸ்வரூபமெடுத்து, தொடரான பின்னிணைவாக மனதில் ஆக்கிரமிக்கிறது" என்பார் தீரன். அவரது படைப்புக்களும் உரையாடலும் நினைவுகளின் வழியே ஒழுகும் நீர்ச்சுனைகளுக்கு சமாந்தரமானது.
நட்டுமை நாவலை வாசிக்க:-
வக்காத்துக்குளம் குறுநாவல் மற்றும் ‘கொல்வதெழுதுதல் 90’ வாங்க:-
தீரன் நேர்காணல்:



  • மருதூர் ஜமால்தீன்
    மிக அருமையான குறிப்புக்கள் மேலும் எழுதப்படவேண்டியவர்
    • Love
    • Reply
    • 4d
  • H.M. Farook
    மகிழ்ச்சி 
    வாழ்த்துக்கள்
    • Love
    • Reply
    • 4d
  • Meelaud Keeran
    தீரன் பற்றிய நல்ல வாசிப்பு...
    • Love
    • Reply
    • 4d
  • Abdul Jameel
    தீரன் கொண்டாடப்பட வேண்டிய பன்முக ஆளுமை அவரை வனம் தேர்ந்தெடுத்தது மனதுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி தருகிறது கூடுகையில் உரையாடுவோம் தீரனுக்கு நெஞ்சார்ந்த 
    வாழ்த்துக்கள்
     தோழர்
    • Love
    • Reply
    • 4d
  • R.M. Nowsaath
    கொஞ்சம் வெட்கமாகவும், கொஞ்சம் மகிழ்ச்சியாகவும் இருக்கு Dr... மிக்க நன்றிகள்.என்று சொல்வதை விட வேறென்ன கைமாறு செய்வேன்..
    4
    • Like
    • Reply
    • 4d
  • Mohamed Kaleel - adr
    வாசிக்கப்பட வேண்டிய இளந்தாரி..
    • Haha
    • Reply
    • 4d
  • Rathydevi Kandasamy
    சிறப்பு. மனமார்ந்த 
    வாழ்த்துகள்
    .
    • Like
    • Reply
    • 4d
  • எம் எம் நெளஷாத்
    நல் 
    வாழ்த்துக்கள்
     மகிழ்ச்சி அளிக்கிறது
    மண் மணம் கமழும் எழுத்துகளைத் தருபவர்
    • Like
    • Reply
    • 4d
    • Edited
  • Jalaldeen Mahakavi
    வாழ்த்துக்கள்
    • Like
    • Reply
    • 4d
  • Alex Paranthaman
    அங்கத எழுத்துகளை
    நமக்கு
    இங்கிதமாகத் தருபவர்.
    • Like
    • Reply
    • 4d
  • Sihan Mkm
    "கொல்வதெழுதுதல் 90" 🔥🔥🔥
    • Like
    • Reply
    • 4d
  • பாவேந்தல் பாலமுனை பாறூக்
    தீரன் நமது மண்ணின் சிறந்த கதை சொல்லி.
    • Like
    • Reply
    • 4d
  • Ayoob Seeni
    வக்காத்துக் குளம் மட்டுமல்ல அவருடைய எல்லா எழுத்துக்களும் அதிர்வுகளை அலைகளை வாசித்து முடித்த பின்னரும் எழுப்பிக் கொண்டே இருக்கின்றன.
    தீரன் தூக்கிப் பிடிக்க வேண்டிய ஆளுமை.
    • Like
    • Reply
    • 4d
  • Mohamed Ismail Mubaraque
    ஆன்மீகக் கவிதைளின் சொந்தக்காரர். தீராக் கத சொல்லி
    • Like
    • Reply
    • 4d
  • Thamby Lebby Jawferkhan
    நல்
    வாழ்த்துக்கள்
    • Like
    • Reply
    • 4d
  • Firoskhan Jamaldeen
    கால் மேலே கால் போடுவன்டா
    கோட் சூட் போடுவேன்டா
    காலாடா
    • Haha
    • Reply
    • 4d
  • Fahmiya Shareef
    ஆப்ரஹாம்லிங்கன் மாதிரியே இருக்கேள்...☺
    May be an image of monument and text
    • Haha
    • Reply
    • 4d
  • Abdulrazack Mohamedibrahim
    'தீரன்' கலையின் 'வீரன்'
    • Like
    • Reply
    • 4d
  • Ahamed Jinnahsherifudeen
    அடுத்த ஜனாதிபதிக்கான அழகிய விண்ணப்பம். நாங்கொண்டும் ஏமாறமாட்டம். இப்ப படுற பாடு போதாதா!
    2
    • Haha
    • Reply
    • 4d
  • Abdul Rasak
    எங்கள் தீரா ஆளுமை
    2
    • Like
    • Reply
    • 4d
  • Abdul Gaffoor
    எண்ணத்திலும் எழுத்திலும் தீராத
    உவகை கொண்ட தீரனவர் செயல் வீரனவர்.👍👍👍👍👍
    • Like
    • Reply
    • 4d
  • Bisthamy Ahamed
    தீரன் கொண்டாடித்தீர்க்க வேண்டிய வீரம் மிக்க இலக்கிய எழுத்தாளர்
    வாழ்த்துக்கள்
     sir
    2
    • Like
    • Reply
    • 4d
  • Fareed Amm
    நல்
    வாழ்த்துகள்
    • Like
    • Reply
    • 4d
  • Chandirasekaram Shakila
    நல் வாழ்த்துக்கள்
    • Like
    • Reply
    • 4d
  • Moosa Vijily
    சிறப்பு//
    • Like
    • Reply
    • 4d
  • Slm Hanifa
    தீரன் நமது பெருமைமிகு ஆளுமை.அவரைப்போற்றுவோம்
    2
    • Like
    • Reply
    • 4d
  • Thassim Ahamed
    தீரன் ஒரு கம்பீரன்(புதுச் சொல்)
    கதை சொல்வதிலும் கதை அளப்பதிலும் சொல் வீரன்
    நம்மூரன் நகைச்சுவைச் சூரன்… 
    See more
    2
    • Love
    • Reply
    • 4d
    • Edited
  • Smbm Anssar
    ஐனாதிபதி விண்ணப்பம் பற்றி சொல்லப்பட்டுள்ளது. என்ன? சுயேச்சை ஆகவா? சூப்பர்! ஆரு என்ன பாடு பட்டாலும் எனது முழு ஆதரவு தீரனுக்கே
    • Love
    • Reply
    • 4d
    • Edited
  • எழுகவி ஜெலில்
    தீரன் நமது அடையாளம்
    • Like
    • Reply
    • 4d
  • Murugan Sivalingam
    கதையுலகில். தனித்துவமான. எழுத்து நடை கொண்டவர். தீரன்!
    • Like
    • Reply
    • 4d
  • Mahdy Hassan Ibrahim
    மிகவும் சுவாரசியமான பல படைப்புகள் மூலம் மனதில் இடம் பிடித்தவர்!
    • Like
    • Reply
    • 3d
  • க. ஷியா
    தீரரே நீர் வாழி
    • Like
    • Reply
    • 3d
  • Mohamad Buhari Naleem
    தீரன்
    வாழ்த்தப்படவேண்டிய எழுத்து
    • Like
    • Reply
    • 3d