மருதூர் ஜமால்தீன்
மிக அருமையான குறிப்புக்கள் மேலும் எழுதப்படவேண்டியவர்
- Love
- Reply
- 4d
அப்துல் ரசாக்..
அக்கரைப்பற்று
தீரனை எங்கள் காலத்து தீராக் கதைசொல்லி என்றே அழைக்க விரும்புகிறோம். எளிமையும் இனிமையும் நிறைந்த கிராமங்களே தீரனின் கதைக்களங்கள். சாதாரண மனிதர்களே அவரது கதை மாந்தர்கள். தீரன் பற்றிய தங்கள் பார்வை மகிழ்வளிக்கின்றது.
பிஸ்தாமி அஹமட்....
முகநூலில்
சாகித்திய விருது பெற்ற வெள்ளி விரலால் மட்டுமே எனக்குள் தங்க நினைவுகளைத்தந்த கிழக்கிழங்கையின் சிறந்த நாவலாசிரியர்களுள்ஒருவரான தீரன் R.M. Nowsaath அவர்களது முக்கிய ஐந்து நூல்கள் இவை
தீரன் எல்லோரையும் போன்ற எழுத்துக்களைக்கொண்டவரல்ல.
அவரது எழுத்துகளில்உயிர் உள்ளதுஉயிர்ப்பும் உயிரோட்டமும் உள்ளதுஉணர்வுள்ளது
இனசௌஜன்யத்தை
பேசும் உறவுப்பாலமாக அவை உள்ளன
ஆயிரம் உரைகளால் உபன்னியாசங்களால்
ஆக்க முடியாததை அவர் ஒரு கதைக்கூடாக
ஆக்கிவிடுவார்
அவரது எழுத்துக்களை
மக்கள் மயப்படுத்துவதால்
சகவாழ்வை
இன சௌஜன்யத்தை
அமைதியை
நல்லுறவை
வளர்க்கலாம்
இனங்களுக்கிடையிலான
நல்லுறவுக்கான
கலந்துரையாடல்களாக
ஆக்கலாம்
எழுத்தின் வலிமையை
உணர்த்தலாம்
எழுதப்படாமல் விடுபட்டவற்றை குறைநிரப்பு செய்யலாம்
அவரது கதைகளின்
கரு பாத்திரம்
சூழல்
மொழி என அத்தனையும்
உயர்ந்தவை
உன்னிப்பாக அவதானிக்க வேண்டியவை
வரலாற்றின் தவறுகளை
விடுபடல்களை
விபரீதங்களை
விளைவுகளை
மொழிவழியாக
இலக்கியம் வழியாக
எவ்வளவு சிறப்பாக
பகிரலாம் பதியலாம் என்பதற்கு தீரனின் எழுத்தும் சிறந்த சான்று
தீரன் நௌஸாத் இலக்கிய உலகில் மட்டுமன்றி ஈழத்திலும் தவிர்க்க முடியாத தன்னிகரற்ற நாமம்
தீரன் எழுதிதித்தீர்க்க
ஒரு மந்திரக்கோல்
மந்திர மொழி
மந்திர பாத்திரங்கள்
அவர்முன்னே
புதிது புதிதாக குவிந்து கிடக்கின்றன
Bisthami Ahamad..
மாவணெல்ல
2 வருடங்களுக்கு முன் வெள்ளி விரலை மட்டும் தற்செயலாக வாங்கினேன்
அதன் பிறகு எதுவும் காணக்கிடைக்கவில்லை
கொழும்பில் இருப்பதை அனுப்புங்கள்
நிச்சயம் வாசித்து கருத்துரைப்பேன்
உங்கள் எழுத்து வினோதமானது
அது
பயான்களில் பேசப்படாத
நுண்மையான சகவாழ்வை பேசுகிறது
ஒரு காலத்தில் திக்வல்லை கமால் போன்ற கலைஞர்கள் தெற்கில் செய்த பணியை ஒத்தது உங்கள் நவீன எழுத்துக்கள்
உண்மையில் சர்வதேச தன்மை வாய்ந்தவை
Riyas kurana
அக்கரைப்பற்று புத்தக காட்சியில் தோழர் ஆர்.எம்.நௌசாத் (தீரன்) அவர்களுடைய “வக்காத்துக் குளம்” மற்றும் “ முத்திரையிடப்பட்ட மது” போன்ற நுால்கள் கிடைக்கும்.
முத்திரையை உடைத்து மது அருந்துவோம்.
“ஊக்க மது கைவிடேல்”
‘தீரனுடன்’ ஒரு தீரா உரையாடல்.
பண்ணூலாசிரியர் அ.வா.முஹ்சீன் அவர்கள்
Abthul Wahid Muhseen
20.09.22 மாலை 6.00 மணியளவில் ‘தீரன்’ ஆர்.எம். நௌசாத்தை அவருடைய வீட்டில் சந்தித்தேன். அதன் பின்னரான ஆறு மணித்தியாலங்களும் அடுத்த நாள் காலை 6.00 மணியிலிருந்து 9.00 மணி வரையிலான மூன்று மணித்தியாலங்களும் உரையாடல்களால் நிரம்பின.
இந்த நூற்றாண்டில், இலங்கை முஸ்லிம்களின் நாவல் எழுதியலை ஒரு புதிய தளத்திற்கு எடுத்து சென்றிருக்கின்ற நௌசாத்தை சந்தித்து உரையாட வேண்டும் என்ற என்னுடைய அவா அன்று நிறைவேறியது. நௌசாத்! நான் அனுபவித்த சிறந்த தருணங்களில் உங்களுடனான உரையாடலும் ஒன்று.
வாய் ஓயாமல் நான் கதைத்த அனைத்தையும் பெரு மனது கொண்டு, தூக்கத்தையும் கட்டுப்படுத்தியவாறு கேட்டுக் கொண்டிருந்த நண்பர் நௌசாத்திற்கு நான் பெரும் நன்றி சொல்ல வேண்டும். உண்மையாகவே, இப்போது என் தலையின் பாரம் சற்றுக் குறைந்திருப்பதுபோல உணர்கிறேன்.
கடற்கரைப் பள்ளியூடாக என்னை அழைத்துச் சென்று, அப்பள்ளிவாசலை நான் பார்ப்பதற்கு உதவியமைக்கும் நன்றிகள்! பல் பிடுங்கிய வலியுடனும், எனை உபசரிப்பதற்காக கடுமையாக முயன்ற உங்கள் துணைவியாருக்கு என்னுடைய விசேட நன்றிகள்!
Shathir Ahamed is with R.M. Nowsaath.