தீராவெளி

Wednesday, July 26, 2017

எஸ், நளீம்

எங்கள் தேசம்- நேர்காணல் -எஸ், நளீம் 
தீரன். ஆர்.எம். நௌஸாத்

௦௦-- ~வல்லமை தாராயோ.. (2000) ~வெள்ளிவிரல்| (2011) ஆகிய இரண்டு சிறுகதைத் தொகுதிகள்
௦௦-- ~நட்டுமை| (2009) கொல்வதெழுதுதல்90 (2௦13)—ஆகிய இரு நாவல்கள்
௦௦-- தமிழ்நாடு ~காலச்சுவடு|  இதழ் நிறுவுனர் சுந்தர ராமசாமி 75 பவழவிழா இலக்கியப்போட்டியில்  ~நட்டுமைநாவலுக்கு முதற் பரிசு
௦௦-- அக்கினிக் குஞ்சு இணையம் நடத்திய எஸ்.பொ. நினைவு நாவல் போட்டியில் வக்காத்துக் குளம் நாவலுக்கு மூன்றாம் பரிசு
௦௦-- கொல்வதெழுதுதல்90 நாவல் தமிழக அரசின் ஆயிரம் பிரதிகளுக்கான ஆணை பெற்றது.
௦௦-- ~வெள்ளிவிரல்சிறுகதைத் தொகுதிக்கு  2011ல் இலங்கை அரசின் தேசிய அரச சாகித்திய விருதும் கிழக்கு மாகாண சாகித்திய விருதும்
௦௦-- 1998ல்  ~தினக்குரல்நாளிதழும் பிரான்ஸ் தமிழ்வானொலியும் இணைந்து நடத்திய சில்லையூர் செல்வராசன் ஞாபகார்த்த உலக வானொலி நாடகப் போட்டியில் ~காகித உறவுகள்என்ற தனது வானொலி நாடகத்திற்கு 3ம் பரிசு
௦௦-- 1983---1989காலப்பகுதியில் தூது என்ற கவிதைச சிற்றிலக்கிய ஏடு 16  இதழ்கள் வெளியீடு.
௦௦-- ~நல்லதொரு துரோகம்|  என்ற சிறுகதைக்கு பேராதனை பல்கலைக் கழக தமிழ்சங்கம்  முதற்பரிசாக தங்கப் பதக்கம் அளித்தது..
௦௦-- ~சாகும்-தலம்.சிறுகதை தமிழ்நாடு எழுத்தாளர் சுஜாதா அறக்கட்டளை நிறுவனம் நடத்திய அறிவியல் புனைகதைப் போட்டியில் முதற்பரிசு பெற்றது.
௦௦-- ~ஞானம்சஞ்சிகை நடத்திய புலோலியூர் க. சதாசிவம் நினைவுச் சிறுகதைப் போட்டியில்  ~தாய்-மொழிசிறுகதைக்கு முதற்பரிசு

௦௦-- தீராவெளி என்னும் வலைப்பூவில் மேலும் தகவல்கள் பெறலாம்
-------------------------------------------------------------------------------------------------------------------------------



01.நீங்கள் இலக்கியத்துக்குள் நுழைவதற்கு பின்புதான் இருந்தவரை எவை?
யாரும் ‘டிக்கட்’ பெற்றுக் கொண்டு இதற்குள் நுழைவதில்லைதானே...
என்னைப் பொறுத்தவரைக்கும் என் குடும்பப் பின்னணிதான் ஒரு பெரிய தூண்டுகோலாக இருந்தது..  என் பெற்றோர்,உடன் பிறந்தோர் அனைவருமே வாசிப்பதில் தீவிர நாட்டம் கொண்டவர்கள்..தாய் வீடு ஒரு நூலகமாகவே இருந்தது...நான் பத்து வயதில் வீட்டில் ஒரு கையெழுத்துச் சஞ்சிகை கூட  தயாரித்து நடத்தினேன்.. வாப்பா என்னை ‘எழுத்தாளரே..” என்றுதான்  அழைப்பார்.. உம்மா என் முதல் வாசகியாக இருந்தார்... இதன் பின்னணி என்னை எழுத்தை விட்டும் விலக முடியாதபடி செய்துவிட்டது...

02. உங்கள் "அபாபீல்" கள் இலக்கிய வட்டம்..மற்றும் ‘புகவம்” அதன் வெளியீடுகள்..செயற்பாட்டாளர்கள் இப்போது எங்கே?
எல்லாம் பொய்யாய் பழங்கனவாய் போயின.....1980 களில் கல்முனை புகவம் (புதிய கவிஞர் வட்டம்) என்ற பெயரால் நான், ராபீக், கபூர்  கல்முனை ஆதம்,கலீல், கல்முனை அபூ என்று  சிலர் ஒன்று சேர்ந்தோம்.. இளமை உற்சாகத்துடன் றோணியோ சஞ்சிகைகள்-போட்டோ பிரதிப் பிரசுரங்கள் வெளியிட்டோம்.. ‘’மின்னல்- வாஷிங்டன் கனவு- இன்னாலில்லாஹி- பாதா- விடியலை நோக்கி அவனுக்காக- இப்படி சில பிரசுரங்கள்....  யுத்தம் ஆரம்பித்த சூழலில் “தூது” என்ற பெயரில் கவிதை ஏடு ஒன்றினை கொணர்ந்தோம்...1989 வரை இடைவிடாது நடத்தினோம்.. அதன் பின் அபாபீல்கள் என்ற பெயரில் மீண்டும் ஜாபீர்நகீபு ஆகியோருடன் தொடங்கினோம்.. இரண்டாவது பக்கம் கவியேட்டை நடத்தினோம்..
யுத்தம் தீவிரம் பெற்ற போது தீவிரவாதிகளின் கவனிப்பு எங்கள் மீது விழுந்தது.. எம்மில் பலர் தலைமறைவாக வேண்டி வந்தது.. புகவம் அமைப்பின் தலைவர் ராபீக் நோய்வாய்ப்பட்டுக் காலமானார். கபூர் புலிகளினால் கொல்லப்பட்டார். ஷபீக் அகால மரணமானார்.. அபூ புலம் பெயர்ந்தார். கல்முனை ஆதம் தலைமறைவானார்.. நானும் தொழில் நிமித்தம் ஊரை விட்டுப் பிரிந்தேன்...
 காலக்குதிரையின் ஓட்ட வேகத்தில் மூச்சிரைத்துப் போய் திக்கொருவராய் பிரிந்தோம்..  எஞ்சியோர், இப்போ தனித்தனித் தீவுகளாய் வாழ்கிறோம்..

03. "சிவந்த பள்ளிகள்”” மற்றும் ‘’தூது" காலத்து தீரன் இன்னும் உங்களுக்குள் வாழ்கிறாராஇந்த முஸ்லிம் அரசியல் கொந்தளிப்புக் காலத்திலாவது வெளிவரமாட்டாரா?
முஸ்லிம் இளைஞர்களும் ஆயுதம் ஏந்தி சிங்கள-தமிழ் ஆதிக்கத்துக்கு எதிராகப் போராட வேண்டும்..நமக்காக ஒரு கட்சி, ஒரு நிலம், ஒரு நாடு.. வேண்டும் ..என்றெல்லாம் வெகு தீவிரமான சிந்தனைப் போக்குடன் இயங்கிய அந்தக் காலத் தீரன் ஓய்ந்து போய் விட்டான்... இப்போதிருப்பது வாழ்வின் காலச் சாட்டையடிகள் வாங்கிய 57 வயது கிழவன்... நடப்பது யாவும் லஹ்புள் மக்பூளில் எழுதப்பட்ட மாபெரும் படைப்பாளனின் கைவண்ணமே என்பதை உணர்ந்து கொண்ட ஒரு சிற்றெறும்பு...

04. உங்களுக்குள் இந்த நையாண்டிநகைச்சுவை உணர்வு எப்படி வந்ததுவிஷேச காரணங்கள் உண்டா?
நகைச்சுவை என்பது நிறமூர்த்தத்தில் ஊறிப் போனது,, வலிந்து உற்பத்தி செய்ய முடியாது.. அதுவாக வந்து விழுகிறது...

05. கவிதை எழுதிக் கொண்டிருந்த நீங்கள் எப்படி சிறுகதைநாவல் என்ற வடிவங்களுக்குள் நுழைந்தீர்?
பெருகிய உணர்வின் இறுகிய வடிவம் கவிதை என்றார் என் குருநாதர் பாவலர் பசில் காரியப்பர்.  பல சமயங்களில் பெருகிய உணர்வை  என்னால் இறுக்கமாக கையாள முடியவில்லை... அது சிறுகதைகளாக நாவல்களாக பிரவாகித்து விட்டது..

06. உங்கள் நாவல்களுள் அதிக கவனிப்பைப்பெற்ற நாவல் எதுஏன்?
நட்டுமை நாவல்தான் அதிகமாக கவனிப்பை பெற்றது. காலச்சுவடு நடத்திய  சு.ரா. நினைவு நாவல் போட்டியில் அது முதற் பரிசை வென்றதும், அது அரச ஊழியர் ஆக்கற்திறன் போட்டியில் வென்றதும், 1930ஆம் ஆண்டு காலத்தைய அதன் கதைத் தளமும் காரணங்களாக இருக்கலாம்.

07. இந்திய வெளியீட்டகங்கள் மூலம் நூல்களைப் பதிப்பிப்பதில் நீங்கள் சந்தித்த சாதக பாதகங்கள் எவை?
தமிழகத்தின் நாவல் ஜாம்பவான்களை முந்திக் கொண்டு ‘இலங்கைஎழுத்து’ என்று அடையாளம் பெற்று ஒரு நாவலாசிரியனாக அங்கீகாரம் பெற்றதும்  ‘கொல்வதெழுதுதல்.90.’ என்ற என் நாவல் தமிழக அரசின் ஆயிரம் பிரதிகளுக்கான நூலக ஆணை பெற்று  ஆயிரம் நூலகங்களில் வைக்கப்பட்டதும் சாதகங்களே.. தமிழகத்தில் பதிப்பிக்கப் பெற்றதால் அதன் பதிப்புரிமை இழந்து விடுவதும், சொற்பளவு பிரதிகளே நமக்குக் கிடைப்பதும், நம் நாட்டு வாசகர்,எழுத்தாளர்களை அதிகளவில் சென்றடையாமையும்  ,  இலங்கையில் ஒரு போட்டிக்கும் அனுப்ப முடியாமையும் பாதகங்கள் ஆகின்றன....

08. முன்,பின் நவீனத்துவங்கள் பற்றி அதிகம் அலட்டிக் கொள்ள ப்படும் என்றில் உங்கள் எழுத்துக்கள் எந்த இடத்துக்குள் அடங்கும்?
நவீனம்  எழுதுவதே என் பணி.. அதை முன்-பின் நவீனத்துவங்களுள் வரையறை செய்வது என் வேலையல்ல....

09. தங்களின் புதிய நூல்கள் வெளிவரவிருக்கிறதாஅவைகள் பற்றி கூறுங்கள்?
அக்கினிக் குஞ்சு இணையம் நடத்திய எஸ்.பொ. நாவல் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்ற என் ‘வக்காத்துக் குளம்’ நாவல்  விரைவில்  வெளியிடப்பட இருக்கிறது. மேலும் ஒரு சிறுகதை தொகுதியும் கொண்டு வரும் முயற்சி ஒரு பிரபல பதிப்பகத்துடன் பேச்சுவார்த்தையில் இருக்கிறது .

10. முகப் புத்தகம் பற்றிய உங்கள் அபிப்பிராயம் என்ன?
தினசரிப் பத்திரிகைகள்-சஞ்சிகைகள் தவிர மேலதிக தளமாக இலக்கியங்கள் இப்போது முக நூல்களுக்குள் ஊடுபாய்ந்து விட்டது.. காலமாற்றத்தை வரவேற்றுப் பயன்படுத்துவோம்..
  
11. எழுத்தின் மூலம் நீங்கள் பெற்ற அசைவுகள், விருதுகள் பற்றிக் கூறுங்கள்?
ம்ஹ்ம்.... நான் அசையவேயில்லை..

12. புதிதாக எழுத வருபவர்களுக்கு தங்களின்ஆலோசனைகள் என்ன?
வாசியுங்கள்....யோசியுங்கள்...நேசியுங்கள் ...அவ்வளவுதான்..






No comments:

Post a Comment