தீராவெளி

Sunday, December 3, 2023

தாஸிம் அஹமது


மலரும் நினைவுகள்...

      -தாஸிம் அகமது-


காப்பியக்கோ ஜின்னா ஷரிபுத்தீன் சிரேஷ்ட ஊடகவியலாளர் பன்னூலாசிரியர் கவிஞர் அஷ்ரஃப் ஷிஹாப்தீன் தாஸிம் அகமது ஆகிய நான் மூவரும் இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடுகள் நூல்வெளியீட்டு நிகழ்வுகள் மற்றும் தமிழ் இலக்கிய ஒன்று கூடல்கள் என இயங்கிக்கொண்டிருந்தோம்


காத்திராப் பிரகாரமாக ஒரு சூபி ஞானியும் எம்முடன் இணைந்து கொண்டபோது எடுக்கப்பட்ட நிழற்படம் தான் இங்கு இணைப்பில் காணப்படுவது


அவர் யாருமல்ல கிழக்கு மாகாணத்தின் தென்கிழக்கில் வசித்துக் கொண்டு பல சூபி ஞானக் கவிதைகளை முகநூலில் அடிக்கடி பதிவிட்டு வருபவரும் 


காலத்தால் போற்றப்படும் சிறுகதை நாவல்கள் எழுதி பிரபலமானவரும் அயலக ஆய்வு அறிஞர்களதும் விமர்சகர்களதும் பாராட்டுகளைப் பெற்றவரும்


தீராப் பெருமையுடன் பேசப்பட்டாலும்

தன்னடக்கத்தைத் தன்னகத்தே கொண்டவரும்


எனது முகநூல் பதிவுகள் அனைத்தையும் பாராட்டி தவறாது பின்னூட்டமிட்டுவருபவரும்


எனது இதயத்தில் இடம்பிடித்து நகைச்சுவை ததும்பும் கருத்துக்களை பகிர்ந்து வருபவருமாவார்


அத்தீர சூபி ஞானி எம்முடன் இணைந்து

எடுத்துக்கொண்ட இந்நிழற்படத்தை

முகநூல் உறவுகளுடன்பகிர்ந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி யடைகிறேன்




எனது நிழற்பட திரட்டைப்(Photoshop) புரட்டிக் கொண்டிருக்கும்போது இந்நிழற்படம் என் கண்ணில் பட்டதும் தீராத மகிழ்ச்சி எனக்கு ஏற்பட்டது.


03.12.2023.