தீராவெளி

Wednesday, July 26, 2017

உக்குவளை அக்ரம்

Ukuwelai Akram
https://www.facebook.com/profile.php?id=100008242998047&fref=ufi

தீரன் ஆர்.எம்.நவ்சாத்

படைப்புலகில் புகுந்த நேரம் அறியாத பெயர்.பண்ணாமத்துக்கவிராயருடன் கலந்துரையாடும்போது, அடிக்கடி உச்சரிப்பார் என்னமா எழுதறார், வட்டார பேச்சுவழக்கில் ஒவ்வொரு கதையும் புது அனுபவம்.இப்படித்தான் தீரனின் பெயரை உச்சரிப்பார்.
இலக்கிய ஆளுமைகளுடனான குறைவான சகவாசம், சந்திப்புகள் அற்று ஒதுங்கியிருந்தபோது.அவரின் புத்தகத்தை பல புத்தகசாலைகளில் கேட்டு நொந்து போயிருக்கிறேன்.பெயர் மாத்்திரம் ஜெபிக்கப்படும மந்திரம் போல் மனதில் சுழன்றே வந்தது.
சில மாதங்களுக்கு முன்பு தமிழ் மிரரில் தீரனின் கதையை கண்டு வாசித்து இன்புற்ற திளைப்பால் சிறு குறிப்பிட்டேன்.அதற் பிற்பாடே அவருடன் முகநூலில் நட்பாகும் சந்தர்ப்பம் கிடைத்தது.
அதன் பிறகு அவரின் ஹாஸ்யம் கலந்த பதிவுகளையும், தனித்துவமாக அவரிடும் புகைப்படங்களையும் உவப்புடன் உள்வாங்கியே நகர்ந்திருக்கிறேன்.
இன்று தமிழ் மிரரில் அவருடைய நேர்காணலை, பக்கத்திலிருந்து உரையாடுவதைப்போன்ற இயல்பு தன்மையோடு, மனதோடு ஒண்றித்துப்போன வார்த்தைகளுடன் அவர் வெளியில் உலாவினேன்.அவரின் மன உணர்வுகள் போன்றே.என் இலக்கியப்பாதையை அடியொட்டி நகர்ந்திருக்கிறேன்.திறமை பல கண்டிருந்தும் இயல்பாக தன் எளிய வாழ்வை எளிமையாக கடந்துபோகும் மனமும் பங்குவமும்.
அவருக்கு நிகர் அவரே.

No comments:

Post a Comment