தீராவெளி

Wednesday, February 1, 2017

யாழ்.கோமகன்


யாழ்.கோமகன் -நேர்காணல் -நடு
Tuesday, November 29, 2016


ராசிக் காரியப்பர் முகம்மட் நௌஷாத் என்ற தீரன் ஆர் எம் நௌஷாத் கிழக்கிலங்கையின் ஒரு சிறந்த இலக்கிய ஆளுமையாகக் கருதப்படுகின்றவர். தபால் திணைக்களத்தில் கடமையாற்றிய தீரன் 1979ஆம் ஆண்டுகளில் இருந்து தீவிர இலக்கிய செயற்பாட்டாளராகத் தன்னை இனம் காட்டியவர். பலர் விருதுகளை தேடி ஓடுகின்றகாத்தில் பல விருதுகள் இவரது வீட்டு வாசற் கதவைத்தட்டின. ஓர் கவிஞனாகவும்,சிறந்த கதை சொல்லியாகவும், பல வானொலி நாடகங்களை எழுதியவராகவும் எம்மிடையே அடையாளப்படுத்தப்பட்ட தீரன், இதுவரை , கொல்வதெழுதுதல்-90, (நாவல்) வௌ்ளி விரல்(சிறுகதை தொகுதி ),நட்டுமை(நாவல் ), வல்லமை தாராயோ...( சிறுகதை தொகுதி) அழித்தாயே ஆழித்தாயே ..(கவிதைத்தொகுப்பு ), ரமழான் ஸலவாத்- (பக்தி இலக்கியம்), ,அபாயா என் கறுப்பு வானம் (கவிதைகள்), வானவில்லே ஒரு கவிதை கேளு ..(குறுநாவல்), ஒரு சிற்றெறும்புக்கும் நிழல் இருக்கிறது (பாவலர் பஸீல் காரியப்பர் பற்றிய பத்தி ) என்று பல படைப்புகளை தமிழ்ப்பரப்பிற்கு தந்திருக்கின்றார். தனது வௌ்ளி விரல் சிறுகதை தொகுதிக்கு 2011இல் இலங்கை அரசின் சாஹித்திய விருது பெற்றவர்..
காலம் வாசகர்களுக்காக , நான் செய்த நேர்காணலில் இலக்கியம்,அரசியல், சமூகம் என்று தனது குரலை இங்கே ஆழமாகப் பதிவு செய்கின்றார் தீரன் ஆர் எம் நௌஷாத்.
கோமகன்


01 ஈழத்து இலக்கிய உலகத்தில் நீங்கள் யாராக இருக்கின்றீர்கள்? (உங்கள் விபரம் உள்ளடக்கப்பட வேண்டும்)
நல்லது..நான் தொழிலால் ஒரு தபால் அதிபர். இலங்கையின் பற்பல பகுதிகளிலும் சுமார் 30 வருடங்கள் சேவையாற்றிய பின் தற்போது ஓய்வு பெற்றுள்ளேன் .. மூன்று பிள்ளைகளின் தந்தை.. மனைவி பாத்திமா றிபாயா..
இலக்கிய உலகத்தில் ஒரு திருப்தி அடையாத படைப்பாளியாகவே இருக்கிறேன்.. இதுவரை அறியப்படாத தளங்களில் இருந்தும் அறியப்பட்ட தளங்களில் உள்ள தெரியப்படாத பக்கங்கள் பற்றியும் கூடுதலாகச் சிந்திக்கிறேன்.... புதிய எழுத்துக்களின் தீவிர வாசகனாக இருக்கிறேன்... தமிழகம் புலம்பெயர் ஈழம் என்றில்லாமல் கைக்குக் கிடைப்பதையெல்லாம் வாசித்து விடுவதுண்டு.. முன்னரெல்லாம் நமக்குத் தொழில் வாசிப்பு.. யோசிப்பு என்றிருந்தேன்.. இப்போதெல்லாம் தேர்ந்தெடுத்தே வாசிக்கின்றேன். வலைப் பூக்களிலும் இணைய தளங்களிலும் கொஞ்சம் வலம் வருகின்றேன்.. தற்போது சூபித்துவ மெய்ஞான தமிழ்மொழி இலக்கியங்களை ஆய்ந்து வருகின்றேன்..


02 எழுத்து எப்படி உங்களை வசப்படுத்தியது?
என் பெற்றோர் இடையறாத வாசகர்கள்... அந்தக் காலத்திலிருந்தே என் தாயார் ஆனந்த விகடன் குமுதம் கல்கி வாசகி..என் தந்தையார் ஆங்கில நாவல்கள்தான் படிப்பார்... அதன் கதைகளை குடும்பத்தில் எம்முடன் பகிர்ந்து கொள்வர்.. உம்மாவும் தான் வாசித்த தொடர்கதைகளை சொல்வார்... இப்படி மாலைப் பொழுதுகளில் குடும்பமே வாசிப்பும் பகிர்வுமாக இருப்போம்... வாப்பா எல்லா தினசரிப் பத்திரிகைகளுக்கும் தவறாது சந்தா கட்டி விடுவார்.. விடிய பேப்பர்கள் வீட்டுக்கே வந்து விடும்... இப்படித்தான் எழுத்துகளின் மீதான என் தொடர்பு ஆரம்பித்தது....
~கல்முனை ஸாஹிறா| இலக்கியப் பண்ணையில்தான் இது ஆரம்பமாயிற்று. 1975ல் பாடசாலை வெளியீடான ~அம்பு| சஞ்சிகைக்கு ஒரு வாசகர் கடிதம் எழுதியதன் மூலம் எழுத்துலகில் உட்பிரவேசித்தேன். அப்புறம் துணுக்குகள்ää கேள்வி பதில்...உருவகக் கதை.. குறுங்கதை... ஒன்றிரண்டு சிறுகதைகள்.. அப்படி இப்படியென்று கொஞ்ச காலம்... 1990க்குப் பின்னர் ஒன்றும் எழுதாமல் ~இலக்கிய நெடுந்தூக்கம்.|... இக்காலப்பகுதி முழுவதும் படிப்புää தொழில்..திருமணம் குடும்பம்..என்று போயிற்று.. இருப்பினும் தோன்றும் போதெல்லாம் எழுதி எழுதி வைத்துக் கொண்டும் செவ்வை பார்த்துக் கொண்டும் அநேகமாக புத்தகங்கள் வாசித்துக் கொண்டும்தானிருந்தேன்.. இலக்கிய நெடுந்தூக்கத்திலிருந்து மீண்டெழுந்து ..2000ம் ஆண்டில் ~வல்லமை தாராயோ!| சிறுகதைத் தொகுதியை கொணர்ந்தேன்.. அதிலிருந்து தொடர்ச்சியாக எழுதி வருகின்றேன்
03 உங்கள் நாடக அனுபவங்களை சொல்லுங்கள்?
நாடகம் என்றால் மேடை நாடகங்கள் இல்லை... வானொலியில் முஸ்லிம் சேவையில் 1985 களில் பல நாடகங்கள் எழுதியிருக்கிறேன்...ஆ..அது ஒரு பொற்காலம்.! இப்போது தமிழக தொலைக்காட்சி நாடகங்களுக்கு நேயர்களிடம் இருக்கும் வரவேற்பு அப்போது இலங்கை வானொலி நாடகங்களுக்கு இருந்தன.. வானொலி நாடகங்களுக்காக நேயர்கள் காத்துக் கிடந்தனர்.. வானொலி நாடக குறியீட்டொலி கேட்டே தம் கைக்கடிகாரங்களை திருப்பி வைக்கின்ற காலம் அது..! 1985ல் எனது முதல் வானொலி நாடகம் ~வாக்கு|முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பானது. தொடர்ந்து 1990 வரை சுமார் 12 வானொலி நாடகங்கள் கலைமாமணி எம். அஸ்ரப்கான் அவர்களின் நெறியாழ்கையில் எழுதியிருக்கின்றேன். கிழக்குப் புற நாட்டார் பாடல்களை வானொலி நாடகங்களில் கலந்து கொடுத்து சில பரீட்சார்த்தங்களை செய்து பார்த்ததுண்டு.. இவற்றில் ~ஒரு கிராமத்தின் கவிதை| சுமார் 25 தடவைகள் ஒலிபரப்பானது.. வானொலி நாடகப் போட்டியில் ~காகித உறவுகள்| நாடகத்திற்கு தினக்குரலும் பிரான்ஸ் தமிழ் வானொலியும் இணைந்து 3ம் பரிசளித்தது. தத்துவஞானி உமர்கையாமின் வாழ்வியலின் ஒரு துளியாக ஒலிபரப்பான ~விண்மீன் வீடு| என்ற நாடகத்திற்கு நேயர்கள் பொழிந்த பாராட்டுமழையை நினைந்துää இப்போதும் நனைந்து மகிழ்கிறேன்..


நடிகமணி கேஎம் ஜவாஹர்ääஞெய்ரகீம் ஸஹீத்ää ஸில்மியா ஹாதிää நூர்ஜஹான் மர்ஸ_க்ää அஸ்ரப் சிகாப்தீன்ää ஸனோஸ் முகம்மத் பெரோஸ்ää ஏ.எல்.ஜபீர்ää ஏ.ஆர்.எம். ஜிப்ரிää எம். தாஜ்ää எம்.எம்.ரவ்ப்ääஹ_ஸைன்ää லத்தீப்ää புர்கான்பீ இப்திகார்ää என்று ஒரு கலைஞர் பட்டாளமே ~குரல் நடிக நட்சத்திரங்களாக| திகழ்ந்த காலத்தை எண்ணி வியக்கிறேன்.


ஓலிபரப்பாகிய நாடகங்களில் கைவசம் உள்ள 10 நாடகங்களின் தொகுப்பு ~முஸ்லிம் நிகழ்ச்சியில் அடுத்ததாக....| என்ற பெயரில் இறுவட்டுத் தொகுதியாக அடுத்த மாதமளவில் வெளிவருகிறது.
.
04 சமகாலத்தில் கிழக்கிலே கூத்துக்கலையின் வளர்ச்சிப்போக்கு எப்படியாக இருக்கின்றது?
05 ‘கொல்வதெழுதல்90’ நாவல் உருவாகவேண்டியதன் பின்னணி என்ன?
~பள்ளிமுனைக் கிராமத்தின் கதை| என்ற பெயரில் தொடர்ச்சியாக 2003 தொடக்கம் முஸ்லிம் குரலில் 40 அங்கங்களாக ஒரு அரசியல் விவரணத் தொடராக 1990 களின் தென் கிழக்கின் யுத்த காலத்தைப் பின்புலமாகக் கொண்டதாக பிரசுரமானது இது.. அக்காலத்து யுத்த அரசியல் போக்கினால் பாதிக்கப்பட்ட ஒரு அப்பாவிக் கிராம மக்களின் வாழ்வியல் பற்றிய இவ்விவரணம் பின்னர் நண்பர்களான எம். பௌசர்.. எம்.எம்.எம்.நூறுல்ஹக் ஆகியோரின் ஊக்குவிப்பினால் தனி ஒரு முழுநாவலாக உருவெடுத்தது. இது மேலும் செவ்விதாக்கப்பட்டு ~கொல்வதெழுதுதல். 90| என்ற தலைப்பு மாற்றத்துடன் காலச்சுவடு நிறுவனத்தினால் வெளியிடப்பட்டது..
இந்நாவலுக்கு தமிழ் நாடு அரசின் தெரிவில் 1000 பிரதிகளுக்கான நூலக ஆணை கிடைத்தது...... மேலும் 2014இன் இலங்கை சாஹித்திய விருதுக்கான போட்டியில் இறுதிச் சுற்றுக்கு தெரிவானது...
தமிழ் நாட்டில் எஸ். ராமகிருஷ்ணன் 2000க்குப் பின் வெளியான முக்கியமான தமிழ் நாவல்களில் இதுவும் என்று என சிலாகித்துப் பேசியிருக்கிறார்..
ஆயின் இலங்கையில் .... ? இதன் உள்ளடக்கம் கிழக்கு முஸ்லிம் அரசியல் என்பதால் சில "யாழ்-விற்பன்னர்களால்" ஒதுக்கப்பட்டது...நம்ம "பேராசிரியர்களாலும்" ஒரு வித்துவப் பெருமை காரணமாக கண்டுகொள்ளப்படாமல் ஆனது......இப்படி இன்னும் சில "பெரிய (?)எழுத்தாளர்களின்" புறக்கணிப்புகளாலும் பொறாமைத்தனங்களாலும் மனம் காய்ந்து போன நான் கோபத்துடன் இன்னமும் சிரித்துக் கொண்டிருக்கிறேன்...... http://kolvatheluthuthal.blogspot.com/ இத்தளத்தில் இந்நாவல் பற்றி விரிவான தகவல்கள் பெறமுடியும்


‘நட்டுமை’ நாவலுக்கான உருவாக்கம் பற்றி...?
என் மூன்றாவது முழு நாவல் ~’நட்டுமை’| இது கிழக்கு மண்ணின்1940க்கு முந்திய விவசாய மக்களின் வாழ்வியலைப் பேசுகிறது. கிழக்கு முஸ்லிம் மக்களின் வட்டார வழக்குப் பேச்சோசையில் ஒலிக்கும் இந்நாவல் கடல்கடந்து தமிழ்நாட்டில் சுந்தரராமசாமி நினைவு நாவல் போட்டியிலும் முதற்பரிசு பெற்றது. 2009ல் காலச்சுவடு வெளியீடாக வந்தது.
ஈழத்தினுள் முடங்கிக் கிடந்த இலங்கை நாவல் துறையை தமிழ் நாட்டை நோக்கி நகர வைத்த பெருமை இந் நாவலுக்குண்டு என பேராசிரியர் ரமீஸ் அப்துல்லாஹ் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மொழித் துறையில் தமிழ் சிறப்புக் கலைமாணி இறுதித் தேர்வுக்காக, ‘கிழக்கு முஸ்லிம்களின் பாரம்பரிய வாழ்வியலைத் தெளிவுறுத்தும் நட்டுமை நாவல் சமூகவியலடிப்படையிலான விமர்சன நோக்கு “ என்ற தலைப்பில் இந் நாவல் மாணவன் முகமத் அஸ்மத் தினால் ஆய்வு செய்து சமர்ப்பிக்கப்பட்டுள்ளது
சில ~இலக்கிய இருட்டடிப்புகளையும்| மீறி எனக்கு ஓரு ஒளிவட்டம் தந்தது இந்நாவல். http://naddumai.blogspot.com/ என்ற தளத்தில் நட்டுமை பற்றிய முழு விபரத்தினையும் காணலாம் ..


உங்கள் நாவல் முயற்சிகளைப் பற்றிக் கூறுவதானால்...?
நாவல் எழுதுவது தனி ஒரு நுட்பம். மிக நீண்ட சிறுகதையை ஒரு முழுநாவலாக்கி விடுவோரும் ஒரு நாவலையே ஒரு சிறுகதையாக்கி விடுவோரும் இந்த நுட்பம் தெரியாதோரே... இந்த நாவல்த் தொழிநுட்பத்தை நான் கற்றுக் கொண்டு கையாள ஆரம்பித்த போது வாசகர்கள் பொதுவாகää நாவல்கள் வாசிப்பதையே பெரும்பாலும் நிறுத்தியிருந்தனர்....
இந்த தேக்க நிலையிலும் இப்போதும் நாவல்கள் வந்து கொண்டுதானிருக்கின்றன.. வாசிக்கப்பட்டுக் கொண்டுமிருக்கின்றன.. ஒரு சிறுகதைக்குள் அடக்கி விட முடியாமல் திணறிக் கொண்டிருக்கும்~கரு எச்சங்கள்| வியாபித்து வெடிப்பது நாவலில்தானே...அந்தப் பிரசவம் தரும் வலி இனிது. அதன் வடிவமைப்புகள் பெரிது.. அதனூடான சஞ்சாரம் ஒரு ஆபத்தான அழகு.. ஓரு நாவலைப் படித்த பின் அக்கதை மாந்தருடன் வாசகர் வாழும் காலமெல்லாம் அந்நாவலும் அதன் தயாரிப்பாளியும் நித்திய ஜீவியமடைகிறார்கள்; என்பதே உண்மை.
என் முதல் குறுநாவல் ~வானவில்லே ஒரு கவிதை கேளு..| ஈழநாதம் பத்திரிகையில் 2005 தொடக்கம் ஏழு தொடர்கள் ஏழு வண்ணங்களாக வெளியாயிற்று- மற்றும் “:வக்காத்துக்குளம் “யுத்த பிக்குகள் “என்பனவும் தற்போது உருவாக்கத்தில் உள்ளன....

06 உங்கள் கதைகள்/கவிதைகள் எதைத்தான் சனங்களுக்கு சொல்ல முயலுகின்றன?
இந்த மிலேனிய யுகத்திலும் கூட இப்போதும் உயிர்ப்புடன் இருக்கும் தூய கிராமங்களில் வாழ்கிற மக்களின் “குணாதிசய “ தன்மைகளை..ஒழுக்கமான வாழ்வியலை ... எதிர்கால ‘எந்திர மக்களுக்கு’ ஓரளவேனும் என்னால் சொல்ல முடிந்தால் பேறடைவேன்... அதற்காகவே எழுதிக் கொண்டுமிருக்கிறேன்...
முதலில் நுகர்பவரை கதைக்குள்ளே வரவைக்;கிறேன். அப்புறம் அவர் என்னை வாங்காமல் போக முடியாதபடி செய்து விடுவது என் கதைத் தந்திரம். இதில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை. எல்லோரும் ஒரே விதமாக ~கதை|த்துக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. இக்காலத்தில் கூட என்னால் இன்னும் வெகுசுதந்திரமாக எழுத முடியவில்லை என்றே விசனிக்கிறேன்;.


07 தாயகத்து இலக்கியப் பரப்பில் உங்களால் சுதந்திரமாக வலம் வர முடிந்ததா?
இல்லை.... தமக்குத் தாமே “தமிழ் புலமை”க் கிரீடங்கள் சூடிக் கொண்டு இலக்கிய குறுநில மன்னர்களாக வலம் வருவோரும்...பச்சை தூஷணம் எழுதிக் கொண்டு அது நவீன கட்டுடைப்பென்று கதை விட்டுக் கொண்டு உலவும் பாலியல் வியாபாரிகளும்... இஸ்லாத்துக்கே சம்பந்தமில்லாத அடி மூட நம்பிக்கைகளை இஸ்லாமிய நெறிமுறை என்று உபதேசம் செய்துகொண்டு பத்வா (தீர்ப்பு) சொல்கிற சில அத்தர்தாடி-ஜுப்பா வேஷதாரிகளும் என்னை சுதந்திரமாக எழுத விடுகிறார்கள் இல்லை....
08 ஈழத்து தமிழ் இலக்கியப்பரப்பில் முஸ்லீம்களின் பங்களிப்பு எப்படியாக இருந்தது?
இது விரிவாக சொல்ல வேண்டிய விடயம்.. ஈழத்து . முஸ்லிம்களின் தமிழ்ப் பணிகளின் வரலாறு மிக நீண்டது... ஈழத்தின் முதல் தமிழ் நாவலை எழுதியவர் அறிஞர் சித்திலெப்பை... யாழ்ப்பாண புலவர் பெருமக்களால் போற்றிப் புகழப்பட்ட ‘அருள்வாக்கி’ அப்துல் காதிர் புலவர்.... சுமார் இரண்டாயிரம் இஸ்லாமிய தமிழ் நூல்களை வெளிச்சத்துக்குக் கொணர்ந்த அல்லாமா ம.மு. உவைஸ்... என்று எத்தனையோ இஸ்லாமியர் தம் தமிழ்ப்பணியை இங்கு ஆற்றியிருக்கின்றனர்...
பல்சந்தமாலை ,ஞானகுறவஞ்சி , ஆயிரம் மசாலா, திருநெறி கீதம்,சாது விநாயகம் என்று சுத்தமான இலக்கணத் தமிழில் அவர்கள் செய்த தமிழ்ப்பணிகள் இன்று இஸ்லாமிய தமிழாராய்ச்சி மாநாடுகளில் ஆய்வுக்குட்படுகின்றன... இது மிக விரிவான விடயம்... ஒரு ‘கொசுறு’த் தகவலாக இதைச் சொன்னேன்...




09 படைப்பாளிகள் தங்கள் படைப்பு ஒன்று வெளிவந்தததின் பின்னர் வேறு படைப்புகளை வெளிக்கொண்டு வராது தாங்கள் வெளிக்கொண்டு வந்த ஓர் படைப்பின் புகழின் பேரால் தாங்களும் ஓர் இலக்கியவாதி என்று வலம்வருவதை நீங்கள் எப்படிப் பார்க்கின்றீர்கள்?
உள்ள கைச்சரக்கு அவ்வளவுதான்... அதுவும் செலாவானியாகி விட்டது.. இனி கற்பனைக்கும் விற்பனைக்கும் ஒன்றுமில்லை... பெட்டியைக் கட்டிக்கொண்டு புறப்படுவதை விட்டுவிட்டு தன பண்டமாற்றை எண்ணிஎண்ணி ஏங்குவதும் தன்னைத் தானே புகழ்வதுமாக சில ‘பிரதி’கிருதிகள்... அலைகிறார்கள்.... சிரிப்பாக இருக்கிறது... அனுதாபம் வருகிறது...
10 பின்நவீனத்துவம் அல்லது கட்டுடைப்பு என்ற போர்வையில் படு பச்சை தூசணங்களை தங்கள் கதைகள் மூலம் இலக்கிய வெளியில் எழுத்தாளர்களால் பரப்பபடுகின்றது. இது பற்றி.............?
ஆமாம்....யோனியின் மீது சத்தியமாக ..... என்றும் கொங்கைகளை ஆராதிக்கிறேன் என்றும்.... தன அடிமனத்தின் பாலியல் வக்கிரங்களை வெட்கமின்றி எழுதி விட்டு இது கட்டுடைப்பு என்றால் ....இதை எப்படி ஏற்றுக் கொள்வது...? இதை வாசிக்கின்ற வாசகனின் கற்பனை இதை எழுதியவரின் மனைவி பெண் பிள்ளைகளின் அங்கங்கள் மீதே மொய்க்கின்றன.. இந்த எழுத்துக்கு எவ்வகையிலும் சம்பந்தமில்லாத அந்தப் பெண்களின் நிர்வாணம் இந்தப் புத்தகங்களில் பளிச்சிடுகிறது... இதை தன அம்மாவோ சகோதரிகளோ பெர்த்திகளோ வாசித்து தன மகன் சகோதரன் பேரன் இத்தனை பாலியல் வக்கிரனாக இருந்திருக்கிறானே என்று காறித் துப்புதுகள்....
நாங்கள் கட்டுடைக்கிறோம் என்றால்....? எதைக் கட்டுடைக்கிரீர்கள்...? பாலியல் சமாச்சாரங்களை பக்காவாக வெளிப்படுத்துகிறீர்கள்... பாலியல் எழுதக் கூடாது என்று யாரும் சொல்லவில்லை.... இதிகாசங்களில் சொல்லாத பாலியல் விஷயங்களையா நீங்கள் சொல்லப் போகிறீர்கள்...? நயமாக...நாகரீகமாக சொல்லுங்கள்...என்றுதானே வேண்டுகிறோம்...இல்லை இப்படியும் நாங்கள் எழுதலாம்தானே என்றால் கடைகளில் தொங்கும் “ஜகஜகா சுந்தரி “ கூட இலக்கிய நூல்தான் என்று கொள்ள வேண்டும்...
11 போரிலக்கியம் பற்றிய உங்கள் பார்வை எப்படியாக இருக்கின்றது?
போரிலக்கியம் தனி ஒரு கூறாக காலூன்றி விருட்சமாகிவிட்டது... போரிலக்கியம் என்றாலே தமிழில் மட்டும்தான் இருக்கிறது என்றோ தமிழர் மட்டுமே போரிலக்கியத்தின் சொந்தக்காரர்கள் என்றோ வரைவிலக்கணம் செய்பவர்கள் உண்டு,,, இலங்கையில் வாழும் எல்லா இனங்களும்தான் போரில் பாதிக்கப்பட்டன.. சிங்களத்தில் மஞ்சுள வெடிவர்த்தனே தொடக்கம் நிஷாந்த தென்னக்கூன் வரை ஆயிரக்கணக்கில் போரிலக்கியங்கள் படைக்கப்பட்டுள்ளன.... முஸ்லிம் களைப் பொறுத்தவரையில் 1980 களில் கிழக்கின் முஸ்லிம் கிராமங்களில் இருந்து எழுத்துக்கு வந்த இளையோரில் போரிலக்கியம் படைத்தோரே அநேகர்.. ஞானம் போன்ற சஞ்சிகைகள் தமிழரின் போரிலக்கியம் வெளியிட்டு உலகளவில் கொண்டு சென்ற அளவுக்கு இலங்கை முஸ்லிம்களின் போரிலக்கிய படைப்புகள் கொண்டு செல்லப்படவில்லை...
12ஈழத்திலே வெளியாகிய போரிலக்கியப் படைப்புகள் பற்றிய உங்கள் அவதானிப்புகள் எப்படியாக இருக்கின்றன?
13 ஓர் கவிதையானது எப்படியாக இருக்க வேண்டும்?
கவிதையின் மூலப் பொருட்கள் வட்டார வழக்காக இருக்கட்டும் அல்லது அம்மண வார்த்தையாயிருக்கட்டும்ää அல்லது மரபுப் பர்தாவைப் போர்த்திக் கொண்டிருக்கட்டும்ää எதுவாயினும்ää ~பெருகிய உணர்வின் இறுகிய சிந்தனைச் சிறைப்பிடிப்பே கவிதை| என்று எனது குருநாதர் பாவலர் பஸீல் காரியப்பர் கூறுவதை விடவும் அவை வேறானதல்ல என்றே இன்னமும் உணர்கிறேன்.... அவரது காலப்பகுதியில் அது சரிதான்... ‘’ஒற்றைச் சொல்லிலும் ஒரு கவிதை’’ என்பதே இக்கால வழக்கு.
14 போரியல் இலக்கியத்தில் கவிதைகளின் பங்கு எப்படியாக இருந்தன?
15 பிரமிள் பற்றிய உங்கள் அவதானம் எப்படியாக இருக்கின்றது?
தமிழகத்துக்கு தாரை வார்க்கப்பட்ட பிரமிள் அவர்களின் படைப்புக்களை எனக்கு இரண்டாம் விஷ்வாமித்திரனே அறிமுகப்படுத்தினார்... அவரது ‘லங்காபுரி ராஜா ‘ விலுள்ள கதைகளே என்னை அவர்பால் ஈர்த்தன. அவரின் ‘கைப்பிடியளவு கடல்’ நூலில் துருத்திக் கொண்டிருக்கும் ஆன்மிகம் என்னால் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு ஆழமாக இருந்தது ..... பிரமிளின் ஆத்மீக உணர்ச்சி படைப்புனர்ச்சியை விடவும் மேலோங்கியது என்பர்.. முப்பது வயதிலேயே மௌனியின் நூலுக்கு முன்னுரை எழுதும் தகுதி பெற்றவர் என்றால் அவரது எழுத்தாண்மை பற்றி என்ன சொல்ல...? பிரமிளின் ஓவியங்கள் அவரது இன்னொரு அசாத்தியமான வீச்சு என்கிறார்கள்... எனக்கு அன்னாரின் ஓவிய உலகம் தெரியாது... மைக்கல் கொலினின் மகுடம் இதழ் பிரமிள் சிறப்பிதழை கொண்டு வந்து தன் தரத்தையும் இருப்பையும் மேம்பாடுடையதாக்கிற்று .....
16 கவிதை இனி மெல்லச் சாகும் என்று கூறுவோர் பற்றி நீங்கள் என்ன சொல்கின்றீர்கள்?
சிறுகதை செத்துக் கொண்டு வருகிறது என்கிறார்கள்...நாவல் செத்தே விட்டது என்கிறார்கள்..இப்போது கவிதை இனி மெல்லச் சாகும் என்றால் பிழைத்திருப்பது என்ன,,, விடுகதைகளும் துனுக்குக்களுமா...? தமிழ் உயிரோடு உள்ளவரை அதன் படைப்புக் கூறுகள் ஒரு போதும் சாகா... வடிவங்களும் சொல்முறைகளும் மாற்றமடையலாம்...
17 உங்களுக்கும் பேராசிரியர் எம்.ஏ. நுஃமான்-க்கும் இடையிலான தொடர்புகள் எப்படியாக இருந்தன ?
பேராசிரியர் நுஹ்மான் சேர் என் “நட்டுமை” நாவலுக்கு காலச்சுவடு நிறுவனத்தின் வேண்டுகோளின் பேரில் ஒரு விரிவான முன்னுரை அளித்துள்ளார்... என் ஊர் அவர்.. தூரத்து உறவினரும் கூட... நுஹ்மான் சேரின் எழுத்துக்களை எப்போதும் விடாமல் பயில்பவன் நான்.. அவரது ‘அழியா நிழல்களி’ல் அழிந்தவன் நான்.. எங்கள் பகுதிக்குக் கிடைத்த ஒரு மொழி முதுசம் அவர்... முழுக்க முழுக்க வெளியூர்களிலே அவரது காலங்கள் கழிந்ததால் ஒருமுறை கூட அன்னாரை நேரில் நான் சந்தித்ததில்லை என்பது ஒரு பெரிய மனக்குறை.


18 புலம் பெயர் சூழல்களில் வாழுகின்ற படைப்பாளிகள் எப்படியான கதைக்களங்களைத் தெரிவு செய்யவேண்டும் எனஎதிர்பார்க்கின்றிர்கள்?
கதைக் களங்கள் தெரிவு செய்யப்படவேண்டும் என்பதில் எனக்கு அவ்வளவு உடன்படமுடியவில்லை... கதை களங்கள் உருவாகின்றன என்பதே சாத்தியமானது.. புலம் பெயர் சூழல்களில் வாழுகின்ற படைப்பாளிகளுக்கு விரிவான களங்கள் திறந்து விடப்பட்டுள்ளன..கதைக்கருக்கள் தம் முதிர் நிலை அடையும் போது இதுவரை அறியாத தளங்களிலும் பிரசவங்கள் நிகழலாம்...
19 உலகமயமாக்கலும் அதன் வழியே வந்த தொடர்பாடலின் ஊதிப்பெருத்த வளர்ச்சியும் சனங்களின் வாசிப்பு மனநிலையை வெகுவாகப் பாதிக்கின்றன. இப்படியான ஓர் இலக்கிய சூழலில் சிற்றிதழ்களின் பங்கு அத்தியாவசியம் எனக்கருதுகின்றீர்களா?
20 ஈழத்து இலக்கியப் பரப்பில் சிறுவர் இலக்கியம் எவ்வளவு தூரத்துக்கு பேசப்பட்டு இருக்கின்றது?
21 இணையத்தின் அசுர வளர்ச்சியால் தமிழ் இலக்கியத்தின் எதிர்காலப் போக்குகள் எந்தவகையில் மாற்றங்களுக்கு உள்ளாகும்?
அசாத்தியங்கள் என்று கருதப்பட்ட மாற்றங்கள் சாத்தியமாகி விட்டன...புலம் பெயர் நாடுகளில் தமிழரின் இனக்கலப்புகள் ஒரு புதிய இனத்தை தோற்றுவித்துள்ளன... “கனகரெத்தினம்” என்ற பெயரில் ஒரு வெள்ளைக்காரனும் ..’’மகாலெட்சுமி’’ என்று ஒரு வெள்ளைக்காரியும் வளர்கிறார்கள்... அதே போல்தான் தமிழ் இலக்கியத்திலும் புதிதாக ஒரு வகையான ‘’எந்திரத் தமிழ்’’ உருவாகி வருகிறது.. இணையத்தின் அசுர வளர்ச்சியால் தமிழ் தன் சுய எழுத்து வடிவை இழந்து வருகிறதோ என ஐயப்பாடு ஏற்படுகிறது .. தமிழ் மொழி தன் சுய வடிவில் எழுதப்படாமல் ஆங்கில லிபிக்களினால் தட்டச்சு செய்யப்படுவதனால் தமிழ் மொழி ஒரு “பார்வைப் புலனுக்கு” மட்டுமே உள்ளது... ஒரு மொழி எழுத-வாசிக்க-பேச என்று இருந்த நிலை மாற்றம் பெறுகிறது... எழுத என்பது இனி இருக்காது... பேச- வாசிக்க மட்டும் உதவப் போகிறது..அதிலும் மாற்றங்கள் ஏற்படவும் கூடும்... .
22 மல்லிகை சிரித்திரன் போன்ற சஞ்சிகைகள் ஏற்படுத்திய இலக்கிய வெளியில் அதிர்வைப் போன்று இப்பொழுது உள்ள சஞ்சிகைகளால் ஏன் ஓர் பாரிய அதிர்வை ஏற்படுத்த முடியவில்லை?
மல்லிகை –சிரித்திரன் காலங்களில் இணைய வசதி இருக்கவில்லை.. அவை மட்டுமே அக்காலத்தில் “இலக்கிய ஏகோபித்த ஜாம்பவான்களாக “ இருந்தன.. இலக்கியவாதிகள் அவற்றை மட்டுமே இலக்கியச் சிற்றிதழ்கள் எனக் கொண்டனர்.. எல்லோரும் அதிலேயே எழுத வேண்டியிருந்தது.. எனவேதான் இலக்கிய வெளியில் அவை அதிர்வுகளை ஏற்படுத்தின...இப்போது அப்படியில்லையே... எழுத்துகளின் தளம் இணையவெளியில் வியாபித்து விட்டது... அதிர்வுகளின் தளமும் அகலமாகிவிட்டது...


23 அண்மையில் மறைந்த எஸ்பொ மட்டக்களப்பில் வாழ்ந்த காலத்தில் நீங்களும் இருந்திருக்கின்றீர்கள். அவருடனான தொடர்பு உங்களுக்கு எப்படியாக இருந்தது?
எஸ்.பொ. அவர்கள் இங்கு வாழ்ந்த காலத்தில் நான் பயிலும் சிறுவன்.. அன்னாரை சந்தித்ததில்லை... ஆயின் எஸ்.பொ விடம் எழுத்துப் பயின்ற ஏ. பீர்முகம்மது சேர் அவர்கள் எனது ஆசிரியர்.. அவர் எனக்கு வாசிக்கத் தந்த எஸ்.பொ வின் “வீ “ மற்றும் ‘சடங்கு’ , ‘தீ’ , ‘இஸ்லாமும் தமிழும்’ போன்ற நூல்களில் அவரது எழுத்துகளில் காந்தமாக ஈர்க்கப்பட்டு ஓட்டிக் கொண்டவன்....’பாலீர்ப்பு’ விடயங்களை எத்தனை நுணுக்கமாக கையாண்டிருக்கிறார் என்பதை எண்ணி மலைப்பாக இருக்கிறது....
24 எழுத்துக்கள் மூலமாக ஓர் சமுதாயத்தில் படிமுறை மாற்றங்களைக் கொண்டுவரலாம் என்பதில் உங்களுக்கு நம்பிக்கை உள்ளதா?
25 உங்கள் எழுத்துக்களுக்கு யாராவது ஆதர்சமாக இருந்திருக்கின்றார்களா?
குறிப்பிட்ட ஒருவர் என்றில்லை.... காலங்களுக்கு ஏற்ப ஆதர்சங்கள் மாறுகின்றன... சிறு வயதில் பரணில் வைத்து கதை சொன்ன மூத்தப்பாவிலிருந்து பின்னர் மருதூர்க்கொத்தன்..வ.அ. இராசரெத்தினம்... எஸ். நசீருதீன் ... தமிழகத்தில் மேதாவி... சுஜாதா.. இப்போதைய எஸ்ரா,சோபாசக்தி..விமல் குழந்தைவேல் வரை எல்லோருமே ஒவ்வொரு காலகட்டத்து ஆதர்சங்கள்தாம்...
26 யுத்தகாலத்துக்குப் பின்னரான சமகால ஈழத்து/புலம்பெயர் இலக்கியச் சூழல்கள் உங்களுக்குப் புதிய நம்பிக்கைகளைத் தருகின்றவா?
ஆமாம்..நிறைய நம்பிக்கைகளை தருகிறது... தலைமுறை தலைமுறையாக ‘கன்னித் தமிழை’ உருப்போட்டுக் கொண்டிருந்த நாம் ‘கணினித் தமிழை’ கையாண்டு கொண்டிருக்கிறோம்... ஈழத்துப் போரிலக்கியம் - –புலம்பெயர் பேரிலக்கியம் என்று புதிய ‘எறிகை’கள்..பாய்ச்சல்கள் நிகழ்கின்றன...
27 ஒப்பீட்டளவில் பரந்த இலக்கிய அறிவும் பன்முகப்படுத்த வாசிப்பு அனுபவங்களையும் கிழக்கு மாகாணம் கொண்டிருக்கின்றது. ஆனால் அங்கிருந்து ஊடகங்கள் என்று அதிகளவு வெளிவரமுடியவில்லை. இதற்கு நேர்எதிராக வடக்கு மாகாணத்தில் பாரிய அளவு ஊடகங்கள் வெளிவந்தும் இலக்கிய அறிவையோ இல்லை பன்முகப்பட்ட வாசிப்பு அனுபவத்தை எட்ட முடியவில்லை. ஓர் மூத்த இலக்கியவாதியான நீங்கள் இதை எவ்வாறு உள்வாங்குகின்றீர்கள்?
‘’வடக்கு மாகாணத்தில் பாரிய அளவு ஊடகங்கள் வெளிவந்தும் இலக்கிய அறிவையோ இல்லை பன்முகப்பட்ட வாசிப்பு அனுபவத்தை எட்ட முடியவில்லை.’’ என்ற இந்தக் கருத்தில் என்னால் உடன்பட முடியவில்லை... விரும்பியோ விரும்பாமலோ வடக்குத்தான் தமிழிலக்கியத்தின் வள வேர். கிழக்கு அதன் கிளைதான்... போர்க்காலம் தாய் வேரை கொஞ்சம் அசைத்து விட்டிருக்கலாம்... ஆனால் அதுதான் ஆணி வேர். பன்முகப்பட்ட வாசிப்பு அனுபவம் யாழ்.மண்ணுக்கே உரித்தான சொத்து... இதை ஏன் சும்மா மறுதலிக்க வேண்டும்...?
28 இலக்கியப்பரப்பில் ஓர் படைப்பாளிக்கு வழங்கப்படும் விருதானது எத்தகைய தாக்கத்தை உருவாக்குகின்றது?
சங்ககாலம் தொட்டு இலக்கியமும் விருதுகளும் தொடர்புற்றே உள்ளன.. எழுத்துக்காக வழங்கப்படும் விருதுகள் பெறுமதிமிக்கவை.. விருதுக்காக எழுதுபவை செல்லாக்காசுகள்... துரதிர்ஸ்டவசமாக இப்போதெல்லாம் எழுத்தாளர்கள் விருதுகளால் முதுகு சொரிந்து கொள்வதைத்தான் தினமும் பார்க்கிறோமே...
29 அண்மைக்காலமாக படைப்பாளிகள் விருதுகளை மறுதலித்தலும்,அவர்கள் வாங்கிய விருதுகளை மீள்கையளிப்பதும் நடக்கின்றதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. இது ஆரோக்கியமான போக்காக உங்களுக்குத் தெரிகின்றதா?
ஆரோக்கியம் என்பது இங்கு முற்படுத்தப்படக் கூடாது... தன் எதிர்ப்புணர்வின் வெளிப்பாடு அது... என்னை நீ விருது தந்து கௌரவம் செய்தாய்..சரி.. ஆனால் நீ கௌரவமாக நடந்து கொள்ளவில்லையே என்ற தார்மீகக் கோபம் அது.. சமூகவியலின் மீதான அக்கறை அது... தன்னையும் பேசட்டும் என்றில்லாமல் உண்மையான சமூக அக்கறை கொண்டு தந்த விருதை தூக்கி எறிவது படைப்பாளியின் உரிமை.. அந்த உணர்வை அந்த போராட்டத்தை நான் மதிக்கிறேன்....
30 தமிழகத்து படைப்பாளிகள் ஈழத்து படைப்பாளிகளை தங்களுக்கு சமனாக வைத்துப் பார்பதில்லை என்றவோர் குற்றச்சாட்டு உண்டு. இதுபற்றி…..?


இது ஒரு உளநோய் என்பேன்.. தமிழகத்துப் படைப்பாளிகளுடன் ஒப்பிட்டு திருப்திப்படவும்,, எங்களையும் மதியுங்கள் என்று பல்லிளிக்கவும் நமக்கு என்ன அவசியம் வந்தது..? ஈழத்துப் போரிலக்கியம் ஏற்படுத்திய அதிர்வு தமிழகத்தின் ஒட்டு மொத்தப் படைப்பாளிகளையும் நம் பக்கம் திரும்பிப் பார்க்க வைக்கவில்லையா...? நமக்கென்று ஒரு இலக்கியப் போக்கு இருக்கிறது... நமக்கென்று ஒரு எழுத்து இருக்கிறது... திறமை நம்மிடம் இருந்தால் தமிழகம் வணங்கும் என்பது திண்ணம்.. புலம் பெயர் தளங்கள் முழுவதும் ‘எழுத்து ஆட்சி’ செய்து கொண்டிருப்போர் அனைவரும் ஈழத்தோரே .... ‘’நீங்கள் ஈழத்தின் ஜெயகாந்தன்...’’ என்று எஸ்.பொ விடம் கூறிய போது “இல்லை...ஜெயகாந்தன்தான் தமிழகத்தின் எஸ்.பொ .” என்று சீறிய ‘’பொன்னுத்துரைத்தனம்’’ நமக்குள் இருக்க வேண்டும்..


.
31 ஓர் விமர்சகனுக்கும் படைப்பாளிக்குமான உறவுநிலைகள் / ஓர் படைப்பாளிக்கும் வாசகனுக்குமான உறவுநிலைகள் எந்தவிதத்தில் அமையவேண்டும்?
32 ஓர் எழுத்தாளனுக்கும் அல்லது கவிஞனுக்கும் படைப்பு சம்பந்தமான அறம் என்று நீங்கள் எதைக்கருதுகின்றீர்கள்?
33 சமகாலத்தில் தாயகத்தில் சனங்களிடம் படைப்பாளிகள் பற்றிய இருப்பானது எப்படியாக இருக்கின்றது?
34 புலம் பெயர்ந்தோர் இலக்கியமானது தாயகத்தில் எந்தவகையான அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது?
35 ஈழத்து இலக்கியப்பரப்பில் தலித்திய மற்றும் எழுத்துகளுக்கான அத்தியாவசியங்கள் இருப்பதாக உணருகின்றீர்களா?
36 உங்கள் படைப்புகள் மீது வருகின்ற விமர்சனங்கள் அல்லது எதிர்வினைகளை எப்படியாகப் பார்க்கின்றீர்கள்?
படைப்பது என் ஆன்மீகப் பணி.. விமர்சனங்கள் –எதிர்வினைகள் என்பன என் பணியை செப்பம் செய்பவை. வரவேற்போம் .... ஆயின் ஒரு படைப்பின் மீது காழ்ப்புணர்வோடு செய்யப்படும் எதிர்வாதங்களை நான் கண்டு கொள்வதில்லை.. என் ‘நட்டுமை’ நாவலை விமர்சனம் செய்த ஒரு பெருந்தகை ‘இதில் இன்னின்ன பிழை இருக்கிறது..இதை இப்படியிப்படி சொல்லியிருக்க வேண்டும்.. இதில் இது இதுவெல்லாம் காணப்படவில்லை...” என்று அடுக்கிக் கொண்டே போனார்.. எனக்கென்றால் இது ஒரு கோமாளித்தனமாகவே தென்பட்டது.. நீ சொல்வது போல் ..நீ விரும்புவது போலெல்லாம் எழுதுவதற்கு நான் ஒரு எழுதுவினைஞன் அல்லவே.....நான் ஒரு படைப்பாளி... இந்த மாதிரி இலக்கியச் சண்டித்தனம் செய்தால்....? என் படைப்பில் உன் விருப்பங்களை பூர்த்தி செய்ய முடியாது அன்பரே..!
ஒரு கணத்தில் மின்னி மனதில் வீழ்படிகின்ற கருவைப் படைப்பதில் எத்தனையோ விசயங்களை நான் யோசிக்கின்றேன். பாத்திர வார்ப்பு,கதா மாந்தர், நிகழ்தளம் யாதர்த்தப் பூச்சு, மொழிநடை, உரையாடல் என்றெல்லாம் படைப்பின் முன்னுள்ள நிலை குழப்பமானது. எல்லாவற்றையும் கருத்திற் கொண்டு உருவாக்கிய படைப்புரு என்னை இலேசில் திருப்திப்படுத்துவதில்லை. மீண்டும்,, செவ்விதாக்கல் என்ற செதுக்கும் தொழிற்சாலையிலிட்டு (அது எத்தனை நாளாகுமோ தெரியாது) கடைச்சல் வேலை செய்கின்றேன். அது ஒரு தனிக்கலை. உண்மையில் படைப்புலகம் ஒரு இருள். படைப்புத் திறமை ஒரு அருள். அது எல்லோருக்கும் அருளப்படுவது கிடையாது.
இவ்வளவு சிரமங்கள்-வலிகளை எல்லாம் புறந்தள்ளி நீ நினைப்பதை எப்படி நான் எழுத..?




37 ஈழத்து இலக்கியப் பரப்பில் உங்களை அதிகம் பாதித்த இலக்கிய ஆளுமைகள் யார்?
பலர் இருக்கிறார்கள்... ஒரு பெரும் பட்டியலே உண்டு... கவிதை-கதை-நாவல்-நாடகம் என்று ஒவ்வொரு துறையிலும் என்னைப் பாதித்த ஆளுமைகள் உளர். பாதிப்பு இல்லாத படைப்பாளி யார்...?
38 இலக்கிய கலகக்கார்கள் பற்றிய உங்கள் மதிப்பீடு எப்படியாக இருக்கின்றது?
நன்றாகச் சொன்னீர்கள் ‘இலக்கிய கலகக்காரர்கள் ‘ என்று.... இதை விட இலக்கிய வன்முறையாளர்கள் என்றால் இன்னும் பொருந்தும்.. இவர்கள் செய்யும் வன்முறைகள் பலவகைப்படும்... தனது முதுகைச் சொரிபவனை தூக்கிப் பிடித்தல்... தனக்குத் தெரிந்தோரை மட்டுமே பட்டியல் இடல்..(யாராவது ஆட்சேபித்தால் என் ஞாபத்துக்கு எட்டியவரை என்று தற்பாதுகாப்புக் கவசம் அணிந்து கொள்ளல்). தன் படைப்பை மட்டுமே எழுதும்படி தூண்டுதல்... உலக-தமிழக எழுத்தாளர் சிலரது பெயர்களை இணையத்தில் வாசித்துக் குறித்துக் கொண்டு அவர்களை மேற்கோள் காட்டிக் காட்டி வித்துவம் காட்டுதல்... இப்படி அநேகம்..
எனக்குத் தெரிந்த ஒரு ‘’எழுத்தாளர்’’ பற்றி ஆரம்பகாலங்களில் அவரது உரைகள் கேட்டு வாசித்து நல்லபிப்பிராயம் கொண்டிருந்தேன்... எனக்கும் ஓரளவு எழுத்து பிடிபட்டு புகழ் வரத் தொடங்கியதும்தான் அவரது ‘நிஜ முகம்’ தெரியலாயிற்று... எனக்கு சில இலக்கியப் பரிசுகள் கிடைத்த இடத்திற்கெல்லாம் சென்று ‘மூட்டி’விட்டுக் ‘கூட்டிக் கொடுக்க’ தொடங்கி விட்டார்.. என்னைக்கண்டால் என்னிடம் புகழ்கிறார்...இத்தனை வயதாகிவிட்டும் இன்னும் தன் மதத்தின்பாலான ஆன்மீக உணர்ச்சி ஏதும் இல்லாது ‘இளந்தாரி’யாக திரிகிற இவரது இந்த ‘இலக்கிய வேஷை’த் தனம் இவரை நிச்சயம் பாவச் சிலுவையில் அறைந்து விடும்...
புகழ் என்பது இறைவனின் அருட்கொடை.. அவன் நாடியோருக்கு அது கிடைக்கும்... யாராலும் அதைத் தடுக்கமுடியாது ....




39 நடந்து முடிந்த போர் கிழக்கில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியது?
40 கிழக்கில் இப்பொழுது உள்ள நிலையில் ஒரே மொழியை பேசினாலும், மதத்தால் வேறுபட்ட தமிழர்கள் மத்தியில் படைப்பாளிகளும் சரி சமூக ஆர்வலர்களும் சரி எப்படியான மனநிலையில் இருக்கின்றார்கள்?
வேற்றுமைகள் குறைந்து உறவாடுதல்கள் அதிகரித்துள்ளன... இலக்கிய பரிவர்த்தனைகள் நன்கு முன்னெடுக்கப்படுகின்றன... இலக்கியக் கூட்டங்களில் தமிழரும் முஸ்லிம்களும் பங்கேற்கிறார்கள்.. தூர இடங்களில் இருந்தெல்லாம் வந்து கலந்து கொண்டு நலம் விசாரிக்கிறார்கள்.. ஒரு நல்லாரோக்கிய உறவு நிலை உருவாகின்றது...
41 தமிழ் முஸ்லீம் முரண்களை ஓர் இலக்கியவாதி என்றவகையில் எவ்வாறு உணருகின்றீர்கள்?
தமிழ் முஸ்லிம் முரண்கள் என்று சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை... ஒரு குடும்பத்துள் அண்ணன் தம்பி பிரச்சினைகள் வரலாம்...போகலாம்... நீங்கள் சொல்லும் முரண்கள் வக்கற்ற அரசியல்வாதிகளால் செயற்கையாக உருவாக்கப் படுபவை... என்னைப் பொருத்தவரைக்கும் எனக்குத் தமிழ் கற்பித்த கொக்கூர்கிளான் கா.வை. இரத்தினசிங்கம் ஐயா... க. நவம்.. தொடக்கம் எத்தனையோ தமிழர் என் வளர்ச்சியின் பின்னணியில் இருக்கிறார்கள்...
என் இலக்கியக் குருநாதர் பாவலர் பசில் காரியப்பர் தமிழ் முஸ்லிம் உறவுக்கு ஒரு முன்மாதிரியாக திகழ்ந்தவர்... தன நூலை சில்லையூர் செல்வராசனுக்கே சமர்ப்பணம் செய்தவர். என் ஆசிரியர் ஏ. பீர்முகம்மது சேர் ‘’விபுலானந்த அடிகளும் முஸ்லிம்களும்’’ என்ற நூல் எழுதியவர்... இவர்களின் பாசறையில் பயின்றவன் நான்... நானும் என் ‘நட்டுமை’ நாவலை சு.ரா. வுக்கே சமர்ப்பணம் செய்துள்ளேன்...
தமிழ் முஸ்லிம் இனக்கலவரங்கள் –பகைமைகள் கிழக்கில் மூண்டபோதெல்லாம் செய்வகை இன்றி கைசேதப்பட்டு கண்ணீர் விட்டுப் புழுங்கியவன் நான்... யாழ்.முஸ்லிம்களின் வெளியேற்றத்திலும் பள்ளிவாசல் படுகொலைகளிலும் கலங்கிப் போன தமிழர்களும், முள்ளிவாய்க்கால் தமிழர் துயரில் மனவேதனைப்பட்டு கண்ணீர்விட்ட முஸ்லிம்களும் இப்போதும் உள்ளனர்... யுத்தம் தமிழ் முஸ்லிம் உறவுகளை சிதைத்த போதிலும் இப்போதுள்ள புரிந்துணர்வில் மீண்டும் தமிழ் முஸ்லிம் உறவுகள் துளிர்விட்டு செழிக்கின்றன...
42 அண்மையில் மீள்உருப்பெற்ற ‘கிழக்கின் வசந்தத்தை’ எப்படியாகப் பார்க்கின்றீர்கள்?
43 ஓர் இலக்கியவாதி என்ற வகையில் யாழ்ப்பாணத்தில் இருந்து ஓர் இரவில் முஸ்லீம்களின் கட்டாய வெளியேற்ரத்தை எவ்வாறு பார்கின்றீர்கள்?
நான் ஏற்கனவே சொன்ன படி ..... ஒரே இரவில் சொந்த வாழ்விடங்களை விட்டும் துரத்தப்பட்ட மக்களின் துயரம் சகித்துக் கொள்ளக் கூடிய ஒன்றல்ல. இதை செய்தவர்களை நான் ஆதரிக்கவில்லை... கண்டிக்கிறேன்... இந்த நடவடிக்கையை கண்டித்த தமிழ் மக்களும் இல்லாமலில்லை... உயிர்ப்பயம் காரணமாக வெளிப்படையாக கண்டிக்காமல் மனதுக்குள் இதனை வெறுத்த தமிழர்களும் இருக்கின்றனர்... வெளியேற்றப்பட்ட மக்கள் மீது அனுதாபம் கொண்ட தமிழர்களை நான் சந்தித்திருக்கிறேன்...
தொன்மைமிக்க நட்புறவுடன் வாழ்ந்த சில தமிழ்-முஸ்லிம் குடும்பங்கள் அடைந்த வேதனையை ஒரு தபால் அதிபர் என்ற வகையில் நான் அறிவேன்... இலங்கை தபால் திணைக்களம் நீண்ட காலமாக யாழ்ப்பாண தமிழரின் ஆதிக்கத்தில் இருந்தது.. அதில் கடமை செய்த தமிழர்களுடன் எத்தனையோ வித தொடர்புகள் எனக்குண்டு,,நான் ஒரு முஸ்லிமாக அவர்களுடன் இருந்தும், என் மீது நட்புரிமை கொண்டோரே அதிகம்...
தமிழ்-முஸ்லிம் பிரச்சினையில் குளிர்காய்ந்த சில குல்லா நரிகளும் குள்ள நரிகளும் மகிழ்ந்ததையும் அறிவேன்...அவற்றைப் புறந்தள்ளி... ‘’மனங்கள் வெளுத்தே நாம் பேசிடுவோம்....நாமெல்லாம் மனிதர் அன்றோ....’’ என்றான் நம் பாவலன்...
44 பெரும்பான்மை சிங்கள சமூகத்தால் முஸ்லீம்கள் மீது வன்முறைகள் /அடக்குமுறைகள் ஏவப்படும்பொழுது கள்ள மௌனம் சாதிக்கின்ற முஸ்லீம் சமூகமானது விடுதலைப்புலிகள் தங்கள் செய்த தவறுக்குப் பகிரங்கமாக மன்னிப்புக் கோரிய பின்னரும் யாழ் வெளியேற்றத்தை ஒவ்வருவருடமும் முன்நிலைப்படுத்துவது எதற்காக?


45 தமிழர் வாழும் பகுதிகளில் இறுகிய சாதீயக்கட்டமைப்புகள் இப்பொழுதும் உள்ளது என்ற வாதத்தை நீங்கள் எப்படியாகப் பார்க்கின்றீர்கள்?
46 ஈழத்திலே மாற்றுப்பால் இனத்தவர்களினுடைய புரிதல்கள் எப்படியாக இருக்கின்றன? அவர்கள் பற்றிய உங்கள் எண்ணப்பாடு என்ன?
47 நீங்கள் மாற்றுப்பால் திருமணங்களை அங்கீகரிக்கின்றீர்களா?
48 துப்பாக்கிகள் பேசியபொழுதும் அதன்பின்னர் மௌனிக்கப்பட்ட பொழுதும், பேனைகளின் போக்குகள் எப்படியாக இருந்தன அல்லது இருக்கின்றன?
துப்பாக்கிகள் பேசியபொழுது பேனைகள் மௌனித்தன.. துப்பாக்கிகள் மௌனிக்கப்பட்ட பொழுது, பேனைகள் பேசுகின்றன...




49 கிழக்கு மாகாணத்தில் சாதீயத்தின் வீச்சானது குறைவாகவே இருக்கின்றது என்ற எண்ணப்பாடு உண்டு. இதுபற்றி..............?
சாப்பிட்ட இலையிலும் சாதீயம் பார்க்கும் உலகம் என்று அருந்ததியன் சொல்வது எத்துனை கொடுமையானது... ஒரு குறிப்பிட்ட ஊரில் ஒரு கடையில், சாப்பிட்டு விட்டு தாமே சாப்பிட்ட இலையை எடுத்துச் சென்று குப்பைத் தொட்டியில் போட்டுவிடல் வேண்டும்... என்பது எழுதப்படாத ஒரு சட்டமாகவே இருக்கிறது.....அவரவர் கழிவு இலையை அவரவர் எடுத்து விடுதல் இது நல்லதுதானே...என்று மேம்போக்காகத் தெரிகிறது... இதன் பின்னணியில் இருப்பது பயங்கரமான சாதீய வெறி... என்னவென்றால் அந்தக் கடை முதலாளி சொல்வது.... இந்தக் கடையில் சில வேளைகளில் “கீழ்மக்கள்” சாப்பிட வருவினம்..அவங்க சாப்பிட்ட இலையை எங்கள் சிற்றூழியர்கள் எப்படி ஐயா எடுத்துப் போடுவது...?
அந்தக் கீழ்மக்கள் தரும் பணத்தை எடுத்துக் கல்லாவுக்குள் போடும் முதலாளி சாப்பிட்ட இலையை எடுக்க ஒரு சிற்றூளியனை நியமிக்காமல் இருக்கிறார்...
போருக்குப் பின் யாழில் மீண்டும் தன் கொடூர முகத்தைக் காட்டிக் கொண்டு உட்பிரவேசிக்கும் சாதீயம் கிழக்கில் முனைப்புக் கொள்ளவில்லை... இதன் காரணங்கள் பல.. கிழக்கின் பல்வேறு சாதிக் கட்டமைப்புகள் ஏற்கனவே உருவழிந்து விட்டதும்...ஒரு சாதிக்கென நீண்ட செறிவான நிலத் தொடர்பு அற்றிருப்பதும் ...ஒன்றுவிட்டொன்றாய் முஸ்லிம் ஊர்கள் அடுத்தடுத்து அமைந்திருப்பதும் ... படைப்பாளிகளின் இடையறாத பரப்புரைகளும் படித்த இளைஞர்களின் மேலெழுகையும் ...மேலும் பல காரணங்களும் சாதீயத்தின் கோர முகத்தை கிழக்கில் எழ விடாமல் செய்கின்றன...


50 முஸ்லீம் சமூகத்தில் சாதீயங்கள் உள்ளனவா ? இருந்தால் அவை எப்படியாக இருக்கின்றன?
முஸ்லிம் சமுகத்தில் சாதீயங்கள் இல்லை. சகோதரத்துவமே இஸ்லாத்தின் தாரக மந்திரம்.. இலங்கை முஸ்லிம்களிடத்தில் இந்துக்களின் முதுசமான கலாசார செல்வாக்கு காரணமாக மாற்றின மக்களிடையே உள்ள சாதீயத்தை அந்த இனத்தின் மீதே பயன்படுத்துகின்றனர்.. தமக்குள் முஸ்லிம் எவரும் சாதீயம் பார்ப்பதில்லை...பார்க்க முடியாது... விஷயம் தெரிந்திருந்தால் யாரும் பள்ளிவாயிலில் தொழுகைக்கு தலைமை தாங்கி நடத்தலாம்..ஒன்றும் பிரச்சினையில்லை...
51 உங்களுக்கென்று இலக்கிய ஆரசியல் ஏதாவது உண்டா?
உண்டு... இலக்கியத்தை அரசியல் ஆக்காமல் அரசியலை இலக்கியமாக்குதல்தான் என் இலக்கிய அரசியல்.. இங்கு நானே சனாதிபதி-பிரதமர்-அமைச்சர் எல்லாமே...
52 இறுதியாக வளர்ந்துவருகின்ற இளைய தலைமுற்ப படைப்பாளிகளுக்கு என்ன சொல்ல விளைகின்றீர்கள்?
இது ஒரு மாமூலான கேள்வி... ஒரு பேட்டியின் இறுதியில் இப்படிக் கேட்பதை அநேகமானோர் ஒரு மரபாகவே வைத்திருக்கின்றனர்.. ஒரு போதும் மூத்த படைப்பாளிகளுக்கு என்ன சொல்ல விளைகின்றீர்கள்?என்று கேட்டதாக இல்லை... கேட்டதற்காகச் சொல்கிறேன்... இளையோரே! எழுதும் முன், வாசியுங்கள்...வாசியுங்கள்...வாசியுங்கள்.....!


எம்.ஆர்.ஸ்டாலின்


Thursday, December 22, 2016

M R Stalin Gnanam


"நட்டுமை" கடந்த ஒரு சில வருடங்களில் நான்படித்த புனைவுகளில் மிகசிறந்தது. சகோதரர் நௌசாத்தின் அருமையானபடைப்பு.



















கருமுகில் தாண்டும் நிலவு

ஞானம் பரிசுக் கதைகள் 
கருமுகில் தாண்டும் நிலவு 
புலொலியூர் க.சதாசிவம் ஞாபகார்த்த சிறுகதைப் போட்டியில் வெற்றிபெற்ற கதைகளின் தொகுப்பு 2007







Thursday, December 22, 2016


தினகரன்-31.05.1979



தினகரன்-31.05.1979






தினகரன்-16.11.1980




தினகரன்-16.11.1980








தினகரன்- 15.11.1981




தினகரன்- 15.11.1981



சிறிபாலபுர மாத்தையா -1994






சிறிபாலபுர மாத்தையா 
சிறுகதைத் தொகுப்பு 
இலங்கை சுற்றாடல் வெகுசனத் தொடர்பாளர் பேரவை.
1994



பிரகாசம்-2010



பிரகாசம்- 2010
அரச ஊழியர்களுக்கிடையிலான ஆக்கற் திறன் போட்டியில் வெற்றி பெற்ற ஆக்கங்களின் தொகுப்பு 



பிரகாசம் --2009




பிரகாசம்-2009
அரச ஊழியர்களுக்கிடையிலான ஆக்கற்திறன்  போட்டித் தொடரில் வெற்றி பெற்ற ஆக்கங்களின் தொகுப்பு   







முஸ்டீன்---- தமிழ் மிரர் (1)


முஸ்டீன்----  தமிழ் மிரர் (1)

தீரன்- பதில்கள் 



01. உங்களைப் பற்றிய உங்களின் மதிப்பீடு என்ன?


என் பட்டோலைகளை  மீசானில்  போட்டுள்ளேன். காலம் மறு தட்டில்  படிக் கற்களை வைத்துக் கொண்டிருக்கிறது. எடை போட தாமதமாகும்


02. நீங்கள் எத்தனை பேருடன் முரண்பட்டுள்ளீர்கள்?

ஒரே ஒருவருடன்.... நபசுல் அம்மாராவுடன் மட்டுமே.


03. இலக்கியவாதிகளுக்கிடையேயான முரண்பாடுகளில் உங்களைக் கவர்ந்த நிகழ்வு எது?
இலக்கிய மேடைகளில்  அவர்களின்  ஓரங்க ஈரங்க நாடகக்  கூத்துக்கள் என்னை  மிகவும்  கவர்வதுண்டு,

04. உங்களைப் பற்றி உங்கள் இலக்கிய நண்பர்கள் யார்யார் எழுதியிருக்கின்றார்கள் பெயர் விபரங்களுடன்?
இதற்குப் பிறகு  எழதவே  மாட்டார்களா.!!!

05. நீங்கள் யார் யாரைப் பற்றி அல்லது படைப்புக்களைப் பற்றி எழுதியிருக்கின்றீர்கள்?
விரல் விட்டு எண்ணி விடலாம்

06. யாரை மிகவும் மதிக்கின்றீர்கள்
தீரன் என்ற உள் மனிதனை

07. இதெல்லாம் ஒரு புத்தகமா என்று எதை வாசிக்கும் போது தோன்றியது?
நட்டுமை நாவலை  வாசிக்கும் போது

08. இதுவல்லவோ புத்தகம் என்று எதை வாசிக்கும் போது தோன்றியது?
நட்டுமை நாவலை  வாசிக்கும் போது

09. உங்களுக்குப் பிடித்த இலக்கிய சஞ்சிகை?
தூது

10. உங்கள் எழுத்தின் பொருளாதார மதிப்பு என்ன? ஒரு கவிதைக்கு, சிறுகதைக்கு, ஆய்வுக்கு அல்லது வேறேதுமோர் படைப்புக்கான விலை என்ன?
சாகித்திய விருதுக்காக  ரூபா 55000- தந்தார்கள்

11. இலக்கியத்துக்கான நோபல் பரிசு பற்றிய தங்களின் அபிப்பிராயம்?
நாய்க்கு  ஏன்  தோல் தேங்காய்..?

12. உங்களக்கு என்னென்ன மொழிகளில் பாண்டித்தியம் இருக்கின்றது?
பழங்கால  சுரியானி  மொழியில்..

13. முகநூல், வலைப்பூ, இணையம் போன்ற இலத்திரணியற் பரப்பில் மலிந்துகிடக்கும் எழுத்தாக்கங்கள் குறித்து?
ஒவ்வொரு  இணையக்  கடையாக ஏறி ஒன்றும்  வாங்கப் பிடிக்காமல் இறங்கிக் கொண்டிருக்கிறேன் ..

14. உங்களின் குடும்பம் பற்றி மிகச் சுருக்கமாக ஐந்தாறு வரிகளில்?
சரியாக கேட்டீர்கள் ஐந்தாறு  வரிகளில் என்று-  ஆறே பேர்தாம். நான்-- மனைவி- மூன்று பிள்ளைகள்—ஒரு  வரிப் பூனைகுட்டி

15. எந்த இலக்கியவாதியின் முகத்தில் ஓங்கிக் குத்த வேண்டும் என்று தோன்றும்?
தானே  அச்சடித்த தனது  நூல் வெளியீட்டு  விழா  அழைப்பிதழில் தன பெயருக்கு முன்னால்   பிரபல எழுத்தாளர் என்ற அடைமொழி சேர்த்தவனை  இப்போதும்  தேடிக் கொண்டிருக்கிறேன் ...



பன்னூலாசிரியர். எம்.எம்.எம். நூறுல்ஹக்.---செந்தூரம்- நேர்காணல் -

செந்தூரம்- நேர்காணல் -

செந்தூரம்-(27.02.2011 ) 

போட்டிகளில் பரிசுபெறாது திரும்பிவந்த
எனது சிறுகதைகளை  
அதிகமாக நேசிக்கின்றேன்.

நேர்காணல்.- பன்னூலாசிரியர். எம்.எம்.எம். நூறுல்ஹக்.



சாய்ந்தமருதைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட  தீரன்.ஆர்.எம். நௌஸாத் ஆளுமைமிக்க ஒரு புனைவாளர் ஆவார். தபால் அதிபராகத் தொழில்புரியும் இவர் சுமார் முப்பது வருட எழுத்துலக வாழ்வில் இருப்புக் கொண்டவர்.  ~வல்லமை தாராயோ..| (2000) சிறுகதைத் தொகுதிää ~நட்டுமை| (2009) நாவல்ää  ஆகிய இரு நூல்களை தனது அடையாளமாகத் தந்திருக்கும் இவர்  கவிதைகளுக்காள தனிச் சிற்றிதழாக  தூது என்ற சஞ்சிகையின்  16 இதழ்களை வெளியிட்டதோடு தனது பிரதேசத்திலிருந்து  இதுவரை வெளிவந்த சிற்றிதழ்கள் எதுவும்  இவ்வெளியீட்டுச் சாதனையை முறியடிக்கவில்லை. 

நமது இலங்கையின்   தமிழ்மொழிப் படைப்பாளிகளுள் கவிதை சிறுகதை நாவல் கட்டுரை போன்ற  பன்முக ஆளுமை கொண்டு தடம் பதித்த எழுத்தாளர்கள் மிகக்குறைவு.  ஆந்த வரிசையில் தீரன்.ஆர்.எம். நௌஸாத் தன்னை இடம்பிடிக்கச் செய்தவர். 

மட்டுமன்றி தனது சந்தக் கவிதைகளில்  ரசிகர்களைக் கட்டி வைத்து  கவிதை பாடிய ஒரு கவிஞருமாவார். மற்றும் வீரியமிக்க புனைவு இலக்கியத்தின் ஊடாக  தன்னைத் திரும்பிப் பார்க்க வைத்த வல்லவர். அவருடனான நேர்காணல் இது-


தீரன்.ஆர்.எம். நௌஸாத்





படைப்பு பற்றிய உங்கள் பார்வை…?

அது எவ்வகையான படைப்பாக இருந்தாலும் ஒருமின்னலைப் போல பளிச்சிட்டு  அது மனதில் கருக்கொள்கிறது. இனிஅதில் செய்ய வேண்டியதெல்லாம் செதுக்கல்களே..  இதற்கு வலிமையான ஒரு கருமென்பொருளும்  அதற்கேற்ற தனமமைப்பு நோக்குநிலை- வார்ப்புக்கள்-  போன்ற வன்பொருட்களும் தேவையாகின்றன.  ஏல்லாம் இயைந்து வருகின்றபோது  அது வெற்றிபெற்ற  படைப்பாகின்றது. 

உங்கள் சிறுகதைகள் கொண்டிருக்கும்  வித்தியாசமான கருப்பொருட்கள் தொடர்பில்…?

ஒரு சிறுகதையில் கையாண்ட உத்திகள் எவற்றையும் அடுத்த கதையில் நான் கையாள்வதில்லை. எழுதிய ஒரு சிறுகதையின்  கருவை விட்டும் முழுமையாக வெளிப்பட்டு இன்னொரு எழுதப்படாத கதையின் தளத்துக்குள் வருகின்றேன். தளமாறுபாடுகளும் வித்தியாசமான வார்ப்பு முறைகளும் பலவீனமான கருக்களைக் கூட  வன்மையடன் கட்டமைக்கின்றன. 
தவிரவும் வாசகனுக்கு சொல்லவேண்டிய  செய்தி என்னவாக இருப்பினும்  வாசகனைக் கதைக்குள் ஈர்த்தல் முக்கியமானது. அதற்கு வித்தியாசமான வாசல்கள் திறக்கப்படல்வேண்டும்.. வாசகனின் கவனம் நமது எழுத்தால் திருடப்படும் போது  நமது செய்தியை அவனது உள்ளத்தில் இலேசாக ஊன்றிவிட முடிகிறது..  இது எனது தனிப்பட்ட உத்திதான். கதை சொல்லிகளிடையே வேறுபாடுகள் உண்டு.. 

ஒரு படைப்பாளியின் இறதி எல்லை எதுவெனக் கருதுகிறீர்கள்..?

ஒரு மனிதனின் வரலாற்று எச்சம் அவனது மரணத்தின் பின் பெறப்படுகின்றது..  அதேபோல் ஒரு படைப்பாளியின் எச்சம்  அவன் எதைப்படைத்துவிட்டுச் செல்கின்றான் என்பதைப் பொறுத்தது..  காலஓட்டத்தில் அவன் விட்டுச்சென்ற படைப்புக்களின் ஊடாகNவு  அவன் மீண்டும் மீண்டும் உயிர்ப்பிக்கப்படுகின்றான்..  படைப்பாளிக்கு ஒருபோதும் மரணமில்லை..  அவன்தன்படைப்புக்கள் ஊடே வாழ்கிறான்..  பல தலைமுறை இடைவெளிகளிலும் சஞ்சரிக்கின்றான்.. அவை வாசிக்கப்படும் போதெல்லாம் வாழ்கிறான்.

உங்கள் நாவல்துறை முயற்சிகள்…?

முஸ்லிம் குரலில் வெளியான  ~பள்ளிமுனைக்கிராமத்தின்கதை|  நாவலின் தளம் ஒலுவில் கிராமத்தில் போடப்பட்டது..  பரிசுபெற்ற ~நட்டுமை| நாவலின் கரு  சம்மாந்துறையின் வயல்வெளிகளிலிருந்து கிடைத்தது..  ஈழநாதம் இதழில் வெளியான  ~வானவில்லே ஒரு கவிதை கேளு| குறுநாவலின் வார்ப்பு  கல்லடிப் பாலத்தில் உருவானது..  ~சாந்தமாமா| குறுநாவல்  தீகவாபி விகாரையில்  கருக்கொண்டது..  இப்படிப் பல கருக்கள்…பல தளங்கள்..  எனினும் இவை  வடிவத்தாலும் செதுக்குதல்களாலும்  ஒருபோதும் முழுமையுறுவதாயில்லை.. ஒன்றுமே எனக்கு நிறைவு தருவதாயுமில்லை…

சிற்;றிதழ் துறையில் உங்கள்  பங்களிப்பு எப்படி..? 

அப்படி ஒன்றும் பெரிதாக இல்லை.. 1985களின் போர்க்காலச்சூழலில்
உற்பவித்த ரோணியோக் கவியேடுகளில் ~அன்படன்ää| ~இன்னாலில்லாஹி|..ää~தீ.வை.|ää என்றெல்லாம் தூள்கிளப்பிக் கொண்டிருந்தாலும்  தூது என்ற பெயரில்  16 இதழ்களை அச்சில் கொண்டு வந்தேன்.. இது ஒரு கவிதைச் சிற்றிதழ்.  தூதில் ஆசிரியர் தலையங்கங்களை  குறும்பாää வெண்பா வடிவங்களில்  எழுதிப் பரிசோதித்தேன்..  மரபோ புதிதோ  ~கவிதை நமக்குத் தொழில்..| என்றாகி விட்டிருந்தது. 

புpன்னர் ஹைக்கூ கவிதைகளுக்காகவே  ~புள்ளி| என்ற இலங்கையின்  முதல் ஹைக்கூ கவியேட்டை  றாபிக்குடன் இணைந்து கொணர்ந்Nதூம்..  அதன் பின்னர் ~இரண்டாவது பக்கம்.|.. இதில் ஐhபிர்ääநகீபு நான்.. மிக வித்தியாசமான புதக்கவிதைகள் விதைத்தோம்..  இப்படிச் சில முயற்சிகள்.. 

உங்கள் வானொலி நாடகப் பங்களிப்பின் வகிபாகம் என்ன..? 

இலங்கை வானொலி முஸ்லிம் சேவையின்  வானொலி நாடகங்களுக்காக  மக்கள் காத்துக் கிடந்த காலமொன்று இருந்தது..  1982 தொடக்கம் ஏறக்குறைய 14 நாடகங்கள்தான்  எழுதியிருக்கிறேன்.. அவற்றில் ~ஒருகிராமத்தின் கவிதை..| நாடகம்ää  இன்றுவரை இடையிடையே மறுஒலிபரப்புச் செய்யப்பட்டு வருகின்றது.  ~காகிதஉறவுகள்| நாடகம்  2002 ல்.. பிரான்ஸ் தமிழ்வானொலியும் தினக்குரல் பத்திரிகையும் இணைந்து நடத்திய  உலக  வானொலிநாடகப் போட்டியில்  மூன்றாம் பரிசு பெற்றது.. 

பத்தி எழுத்துத் துறையோடு உங்களை பிணைப்பு  எவ்வாறு..?

விடிவெள்ளி வாரஇதழில் ~ஒரு சிற்றெறும்புக்கும் நிழல் இருக்கிறது..| என்ற தலைப்பில்  பாவலரின் படைப்புலகில் சஞ்சரித்தல் என்ற தொடரையும்  நல்லுறவு இதழில் ~விழித்திரையில் விரியும் வெண்திரை| என்ற தலைப்பில்  பிறமொழிச் சினமாக்களின்  அறிமுகத் தொடரையும் யாத்ரா சஞ்சிகையில் ~கொல்வதெழுதுதல|; என்ற சமுக விவரணப் பகுதியையும் சிலகாலம் எழுதிவந்தேன்..

உங்கள் புனைவுகள் பரிசுகளைச் சந்தித்த அனுபவம்..?

மலேசிய நண்பன் இதழ் நடத்திய சிறுகதைப் போட்டிää  தமிழ்நாடு சென்னை சுஐhதா அறக்கட்டளைääநடத்திய அறிவியல் விஞ்ஞானப் புனைவுபோட்டி நாகர்கோயில் காலச்சுவடு இதழ் நடத்திய சுந்தரராமசாமி 75 நாவல் போட்டி பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கீதம் இலக்கியப் போட்டிää  அரச ஊழியருக்கான ஆக்கற்திறன் போட்டிää  ஞானம்ää அமுது சஞ்சிகைகள் நடத்திய  சிறுகதைப் போட்டிகள்  போன்ற சுமார் 19 இலக்கியப் போட்டிகளில் பற்பல பரிசுகள் பெற்றிருப்பினும்  சில போட்டிகளில்  பரிசு பெறாது திரும்பிவந்த  எனது சிறுகதைகளை அதிகமாக நேசிக்கின்றேன்.. 


காரியப்பர்கள் வரலாறு எழுதுவதாக அறிகின்றோம்.. அதன் பின்னணி என்ன..? 

இது ஒரு தற்செயல் விபத்துத்தான்..  என் தொழில்நிமித்தம் நான் சந்தித்த  சிறிமைத்திதிரிபோதி நாயக்கரான  போகொல்லாநந்த தேரர் அவர்கள் இப்பகுதியிலுள்ள  காரியப்பர்கள் பலரை  என்னிடம் விசாரித்த போது  அவர்களில் பலரை எனக்குத் தெரிந்திரு;க்கவில்லை..  காரியப்பர்கள் பற்றி  அவர் பல வரலாற்றுத் தொடர்புகளைக் கூறியபோது  எனது அறியாமையின் மீது கோபமாக இருந்தது..  அக்கணமே இதனை அறியத் தீர்மானித்தேன்.. 

ஐந்துவருடகால சிரமமிக்க  தேடலகளின் முடிவில்  இலங்கை  முஸ்லிம்களுள்  காரியப்பர்கள் என்ற பெயருடன் விளங்கும் என் இரத்த உறவினர்ப் பரம்பரையை அறியமுடிந்தது..  கி;பி; 1400களில் ஆரம்பமாகும் இக்காரியப்பர்  பரம்பரை  புராதன காலத்து  சிங்கள மன்னர்  காலம் தொடக்கம்  இன்றுவரை  இலங்கை அரசியல் மற்றம்  சமுகவியலில்  அவர்களின் வகிபாகம் பற்றிய  விவரணமே  காரியப்பர்கள் வரலாற என்னும் எனது ஆய்வு நூல் ஆகும். இது தற்போது அச்சில் இருக்கிறது…





நவாஸ் சௌபி---‘ எதுவரை-இதழில்...


எதுவரை-இதழில்....

 ஷோபா சக்தியின் எம்.ஜி.ஆர் கொலை வழக்குச் சிறுகதையின் மொழிப் பயன்பாடு இன்னும் 20 வருடங்களாகக் கடந்து வாசிப்புச் செய்யக் கூடிய ஒரு எழுத்துப் பண்பாட்டை இப்போதே படம் போடுகிறது. ஷோபா சக்தியின் சிறுகதையை மொழிக் கையாள்கையின் ளுமையோடு நோக்குவது போல் 

தீரன் ஆர்.எம். நௌசாத் எழுதிய

‘விட்டு விடுதலையாகி’ எனும் சிறுகதையை கதை

 செல்லும் நுட்ப ஆளுமையாகவும் 


மதிப்பிடுகிறேன். 

இவ்வாறு எதுவரை சஞ்சிகையின் உள்ளடக்கம் மற்றும் வடிவமைப்புக் குறித்து நாம் விரிவாகப் பேசவேண்டிய இலக்கிய அரசியல்கள் எமக்குள் பல வழிகளையும் திறந்துவிடுகிறது. இத்தகைய காத்திரமான ஒரு இலக்கிய அரசியலை பேசும் எதுவரையின் குரல் நின்றுவிடாது அதனை யாரும் நசுக்கிவிடாது தொடரும் வல்லமைகளை கொள்ள வேண்டும்.

நவாஸ் சௌபி சாய்ந்தமருது

-முஸ்டீன்---------தீரன் என்ற சைலன்ட் டெரர் -

தீரன் என்ற சைலன்ட் டெரர்


--முஸ்டீன்--
http://simproduction2002.blogspot.com/

இலக்கிய உலகம் எத்தனையோ படைப்பாளிகளைக் கண்டுவிட்டது.
பம்மாத்துக்காட்டிப் பீத்தித் திரியும் பன்னிக் குட்டிகளையும், திருட்டு
ஆசாமிகளையும், வீர வசனமும் கோட்பாடுகளும் பேசித்திரியும்
போதகர்களையும், அவிழ்த்துப்போட்டு நிர்வானமாய் உடலை
வர்ணித்து ஆபாசமாய் எழுதிப் புகழ்பெறும் பெண்ணியக்
குஞ்சுகளையும், முதுகு சொரிந்தே விரல் தேய்ந்து ஊராப்பட்ட
வலிசல்களையெல்லாம் ஒன்று திரட்டி பட்டமும் சேலையும் போர்த்தி
தனிமரமாகும் அச்சத்தில் தோப்பு செய்து குறளி வித்தை காட்டும்
வித்துவர்களையும், முகாம் அமைத்து பேத்தைக் குட்டிகள் போல
தம்மைப் பெரியவர்களாகக் காட்டும் அற்பர்களையும் அப்பப்பா... இது போல
 இன்னும் பல.. முடியல .....இது இப்படியே இருக்க,

வீரியமிக்க வாசிப்பு, ஆழமான பார்வை, தேடிப்படித்தும் போதாமை
யை உணர்ந்து தம்மைச் சிற்றெறும்பாய் உணர்ந்து காரியமாற்றுகி
ன்ற, பேரையும் புகழையும் பாராட்டையும் எதிர்பார்க்காமல் அமைதியாகப்
 படைப்பிலக்கியத்தில் ஆழம் தேடிப் பாய்கின்ற பெரு நதிகளும்
தன்பாட்டில் சலசலப்பில்லாமல் ஓடிக்கொண்டேதான் இருக்கின்றன.
 அவை யாருடைய பார்வையிலும் உருத்திக் கொண்டிருப்பதில்லை.
ஓர் அழகிய சித்திரம் போல ஈர்க்கும் தன்மையோடு காலாகாலத்திற்கும்
 மொனாலிசா மாதிரி நின்று நிலைக்கும்.

. தீரன் - இது ஒரு புது வகையரா.



எனக்குத் தீரனை அறிமுகப்படுத்தியது
முஸ்லிம் குரல் பத்திரிகையில்
 வெளிவந்த பள்ளிமுனைக் கிராமத்தின்
 கதை
 என்ற தலைப்பில் தொடராக
 வந்த நாவல்தான். அதில் ஒரு அத்தியாயம்
கூட
 மிஸ் ஆகிவிடக்கூடாது
 என்ற தீவிரத்துடன் நான் படித்துவிட்டு
அதை
 அப்படியே கிழித்து சேமித்து
 வைக்கும் அளவுக்கு ஈர்க்கச் செய்தவர்
 என்.ஏ.தீரன் என்ற ஆர்.எம். நௌசாத்

மிக அண்மையில் மீண்டும் ஞானம் சஞ்சிகையில் புத்தளத்தைச்
 சேர்ந்த பரோபகாரி ஒருவர் எனது ஹராங்குட்டி என்ற சிறுகதைத்
 தொகுதி மீதான
விமர்சனத்தை சிறுபிள்ளைத் தனமாக முன் வைக்க, அதற்கு நானும்
ஒரு பீரங்கி வேட்டுத் தீர்க்க, இன்னும் பலரும் பலதும் எழுத, இப்படியே
நான்கு மாதங்களாகிவிட்டது. அந்தத் தடுமல் பற்றி யாராவது
ஏதாவது எழுதிக் கொண்டுதான் இருக்கின்றார்கள். அதன் பயனாய்
விளைந்ததுதான் இவரின் நேரடித் தொடர்பு. அவராகவே பேசிய போது
அதுவோர் இன்ப அதிர்ச்சிதானே. நாம் முகம் காணாமல்
 நேசித்த படைப்பாளிகள் நம்மோடு தொடர்புகொள்ளும் போது
அப்படியொரு பேரின்பத்தை அனுபவிப்பது
 வாஸ்தவம்தானே.
இது போல பலரது தொடர்பையும் எனக்கு ஏற்படுத்தித் தந்த புத்தளத்துப்
பரோபகாரிக்கு எனது நன்றிகள்.

அறிந்திருப்பதும் அறிமுகமாகிக் கொள்வதும் பின்னர் நண்பராக
உறவாக குடும்பமாக இறுகி உணர்வதும் நடத்தையின்பால் விளையும்
 நேசத்தின் பிரதிபலிப்புக்களே, அப்படித்தான் என்னைவிட 23 வருடங்கள்
 மூத்த எனது தந்தையின் வயதையொத்த
ஆர்.எம்.நௌசாத் அவர்களின் தொடர்பும் எதிர்பார்ப்புகளில்லாத
 அன்பினால் அடைப்புக்குறியிடப்பட்டுத்
தொடர்கின்றது. 

அடெல்ஸ் ஒன்லி  என்ற வயது வந்தவர்களுக்கு மட்டும் எனச் சிறிதாகப்
பொறிக்கப்பட்டு நான்கெழுத்து விளக்கங்களுடனும் கவர்ச்சிப்
படத்துடனும் அடிக்கடி ஒட்டப்பட்டுக் கிழிக்கப்படும், கள்ளப்
பார்வைகளுக்கு மட்டும் தீனியாகும் நீலப்படப் போஸ்டர்கள் போல,
சிலரின்  இலக்கியமும் சில இலக்கியவாதிகளும் தொங்கிக் கொண்டிரு
க்கும் முகநூல் சுவர்களில் கூட இவர் இன்னும் ஒட்டப்படவில்லை.
அபோகலிப்டா, அவதார், ப்ளக், கலர் ஒப் பெரடைஸ் போன்ற
கருத்தியல், வசூல், தொழிநுட்பப் பிரமாண்டம், அழகியல், ஆகர்சனமிக்க
படங்களுக்கான போஸ்டர்கள் போலும் தரமான படைப்பும்
படைப்பிலக்கியவாதியும்  முகநூல் சுவர்களில் தொங்காமலில்லை.

எந்த முகாமுக்குள்ளும் அகப்பட்டுக் கொள்ளாமல் பயணித்துக்
கொண்டிருப்பவர். இரண்டு நாவல்களையும் ஒரு சிறுகதைத்
 தொகுதியையு
ம் தந்திருப்பவர். சோளப் பொறி போல கொஞ்சோண்டு
எண்ணெய்யில்
 பொரிந்து ஊதிப் பெருத்து வெண்மை காட்டி பார்வையைக் கவர்ந்து
பின்னர் கொஞ்ச நேரத்தில் காற்றேறி ஜவ்வாகி எதற்கும்
பிரயோசனப்படா
து குப்பைத் தொட்டியைத் தஞ்சமடையும் துரதிஸ்டத்திலிருந்து பல காத
தூரம் தள்ளியிருந்து தப்பித்து வாழும் ஓர் எளிமையான படைப்பிலக்
கியவாதி. யாருடைய சிபாரிசும் பரிந்துரையும் சேர்டிபிகட்டும்
இல்லாமலே
யே காலச்சுவடு பதிப்பகம் இவரது மூன்று நூல்களைப் பதிப்பித்து
இருக்கின்றது. 

காலச்சுவட்டின் பதிப்பு நேர்த்தியும் வாசகர் வட்டமும் கவனம்
பெறுபவை. சுந்தர ராமசாமி என்ற ஆளுமைதான் காலச்சுவட்டின்
 ட்ரேட் முத்திரை, தரச் சான்றிதழ் என்பது எனது அவதானம்.
சுந்தர ராமசாமியின் நினைவாக நடாத்தப்பட்ட நாவல் போட்டியில்
முதல்பரிசு பெற்றதுதான் நட்டுமை. பல்வேறு போட்டிகளில் பரிசு
 பெற்ற
சிறுகதைகளின் தொகுப்புதான் வெள்ளிவிரல், இவை வெளிவந்த
 பின்னர்
நௌஸாத்தின் புத்தகங்களை ஏன் பதிப்பித்தீர்கள் என்று கேள்வி
கேட்டு கண்ணனுக்கு நிச்சயம் இங்கிருந்து கடிதம் போயிருக்க
வேண்டும். அல்லது அவரைப் பற்றிக் கண்ணனிடம் தாறுமாறாக
மோசமான தரச் சான்றிதழ் வழங்கப்பட்டிருக்க வேண்டும். அதுவும்
 பிரதேச
 இலக்கியப் பொம்மைகளால் இவை மேற்கொள்ளப்பட்டிருக்கும்.
அப்படி நடந்ததா இல்லையா என்பதைக் காலச்சுவடு கண்ணன்தான்
 தெளிவுறுத்த வேண்டும். ஏனெனில் இங்குள்ள சில முக்கிய புள்ளிகளின் 
இரத்தத்தில் ஊறிப் போய் நாய் வாலைப் போல நிமிர்த்திட முடியாத பண்பு 
அது. ஆயினும் காலச்சுவடு இதெற்கெல்லாம் ஆட்டம்கண்டு
முடிவெடுக்கும் வக்கற்ற கூனல் நிலையில் இல்லையென்பதும் எனது
அவதானம். 

அண்மையில் கண்ணன் அவர்கள் வருகை தந்த போது பல்வேறு
குழுக்களைச் சந்தித்துவிட்டுச் சென்றதாக அறிந்தேன் நௌஸாதையம்
சோலைக் கிளியையும் சந்திக்க அவர் விரும்பியிருக்கக் கூடும்
 ஆயினும்
 அது நிறைவேறியிருக்காது என்று நம்புகின்றேன். இதனால்
தான் கிட்டத்தட்ட நான்கு மணித்தியாலங்கள் தொடர்ந்த சந்திப்பில்
முக்கால்வாசி என்னைக் கதைக்க வைத்துக் கேட்டுக்
கொண்டிருந்தார்.
விடைபெறும் போது அவரது நட்டுமை, வெள்ளிவிரல்,
கொல்வதெழுதுதல் 90 ஆகிய மூன்று புத்தகங்களையும்
அன்பளிப்புச் செய்தார். அன்றைய பிராயாணத்திலேயே
கொல்வதெழுதுதல் 90 நாவலைப்படித்து முடித்துவிட்டேன், அத்துடன்
பாதிச் சிறுகதைகளையும் கூட,

கொல்வதெழுதுதல்90

ஏற்கனவே பள்ளிமுனைக் கிராமத்தின் கதை
 என்ற பெயரில் முஸ்லிம் குரலில்
படித்ததற்கும் இப்போது புத்தகமாகப்
 படித்ததற்கும் நிறைய வேறுபாடுகளை
 உணர முடியுமாக இருந்தது. கதையிலும்
கூட மாற்றம் நிகழ்ந்திருக்கின்றது. பார்த்துப்
பார்த்துச் செதுக்கிச் சிற்பமாக்கி
இருக்கின்றார் என்பதை முதலிரு
அத்தியாயங்களைத் தாண்டும் முன்னரே
புரிந்து கொள்ள முடியுமாக இருந்தது.
பள்ளிமுனைக் கிராமத்தின் கதை ஏன்
கொல்வதெழுதல்90 ஆக மாறிப் போனது
 என்று தெரியவில்லை, செழுமை
பெற்ற படைப்புக்கு என்ன பெயர்
வைத்தால்தான் என்ன!
ஆரம்பித்தவுடன் முழுமையாகப் படித்துவிட்டே
மூட வைக்கும்
எழுத்துக்கள் இப்போதெல்லாம் வெகு குறைவு
அண்மையில் வாசித்த
 புத்தகக் குவியவில் மனதில் நிற்பது அஷ்ரப் சிஹாப்தீனின்
ஒரு குடம்
கண்ணீர் மற்றும் தீர்க்கவர்ணம், சோலைக்கிளியின்
பொன்னாலே
புழுதி பறந்த பூமி, யோகர்ணணின் சேகுவேரா இருந்த வீடு,
நாச்சியாதீவு பர்வீனின் பேனாவால் பேசுகின்றேன், ஜின்னாஹ்
ஷரிபுத்தீன் மொழிபெயர்த்த அல்லாமா இக்பாலின் ஜவாபே
ஷிக்வா
 ஜவாபே, சுதாராஜின் மனைவி மகாத்மியம், ஹாமித்
அன்சாரியின் எழுச்சியின் சரிதை ஆகியவைகள்தான். இவற்றின்
ஈர்ப்பு இன்னும் மனதில் இருக்கிறது. அது போன்றதொரு அலாதி
வாசிப்பனுபவத்தை ஆர்.எம். நௌஸாத்தின் கொல்வதெழுதுதல்90
உம், வெள்ளிவிரலும் தந்தன. அதிலும் கொல்வதெழுதுதல்90 அலாதி. 

ஒரு கதையினதோ அல்லது நாவலினதோ வெற்றியில் பங்காற்றும்
முக்கிய விடயம் பாத்திரங்கள் மனதில் பதிந்து போவது, பாடசாலைக்கா
லத்தில் படித்த வைரமுத்துவின் 'வானம் தொட்டுவிடும் தூரம்தான்'
நாவலில் வரும் அம்சவள்ளியும் வாஞ்சிநாதனும் இன்னும் மனதில்
அப்படியே அதே செழுமையுடன் இருக்கின்றார்கள்.
அப்படிப்பட்ட பாத்திரப்படைப்பினை கொல்வதெழுதுதல் 90 இல்
முத்து முகமதுவும், மைம்னாவும், தலைவரும், சப்பு சுல்தானும்
பெற்றுவிடுகின்றார்கள். 

முத்துமுகம்மது மீது நமக்கேற்படும் பரிதாபமும் பிடிப்பும் மைம்னாவின்
 மீதேற்படும் கழிவிரக்கமும் தலைவர் மீதேற்படும் மரியாதையும்
சப்பு சுல்தான் மீதேற்படும் பொல்லாத கோபமும் நாலலை
வெற்றியடைச் செய்துவிடுகின்றது. ஊர்ப்பாசை அப்படியே
நம்மை அந்த மண்ணுக்குள்ளேயே தள்ளிவிட்டு வேடிக்கை
பார்க்கின்றது. தென்னிலங்கைச் சமுகம் அந்தப் பேச்சுவழக்கில்
பரிச்சயமற்றுத் தள்ளிநிற்க முயன்றாலும் கதை வளர்ந்து செல்லும்
பாங்கு அப்படியே கட்டிப்போட்டு விடும் என்பதில் சந்தேகமில்லை.
சமுகத்தளத்தில் அப்போது மட்டுமல்ல இப்போதும் புரையோடிப் போய்
 நின்று மிரட்டிப் பார்க்கும் பல பிரச்சினைகளை இலாவகமாக
நகர்த்திச் சென்று ஆங்காங்கே போடப்படும் முடிச்சு அவிழ்க்கப்படும்
 வரை நமக்குள் பரவும் பரவசத்தின் வேகம் குறைவதில்லை.

வெள்ளிவிரல்

இது போலவே வெள்ளிவிரல் சிறுகதைத்
தொகுதியும், ஒவ்வொரு கதையும் படிக்கத்
தூண்டும் சுவையை ரகசியமாகத்
தன்னுள் பதுக்கி வைத்திருக்கும் அதிசயத்தை
படிக்கும் போதுதான் உணர்ந்து கொள்ள
 முடியும். 
தமிழர் விடுதலைப் போராட்டம் ஆயுதம்
தரித்தது, ஊர்காவற்படை, அரச ஆயுதப்படை
 என்பவற்றின் பாலும் வெகு இலகுவாகப்
பயணித்து மீளும் கதை லாவகம் இவரது
எழுத்துக்களில் இயல்பாய் ஊடுறுவுகின்றது.
அத்துடன் முஸ்லிம் காங்கிரசின் தோற்றம்
சிதைவு வக்கற்ற போக்கு ஆகியவற்றிலும்
நிலைகுத்தி மீண்டு சுய விமர்சனம்
செய்கின்றது. தலைவர் அஸ்ரபின்
மரணத்திற்குப் பின்னர் என்னென்ன
கூத்தெல்லாம் நடந்து முடிந்தது
என்பதையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை
 உம்மாவாகச்சித்தரித்து
 நகர்த்தப்பட்டிருக்கும் கதை ஒரு வகையில் வரலாற்றுப்
பதிவும் கூட.
 அதில் சொல்லப்பட்டிருக்கும் பாத்திரங்களின் உண்மைப்
பெயர்களை
 நாம் ஊகித்துக் கொள்வது அவ்வளவு பெரிய கஸ்டமாக இல்லை. 

'தலைவர் வந்திருந்தார்' என்ற கதை படிக்கும் போது, உடனேயே
மனதில் தோன்றியவர், அரபு இஸ்லாமிய இலக்கியவாதியான நஜீப்
அல்கைலானிதான். அவரது 'உமர் யழ்ஹரு பில் குத்ஸ்' என்ற நாவல்
மிக முக்கியமானது. 'குத்ஸ்சில் உமர் தோன்றினார்' என்றோ
 'குத்ஸில் உமர் உதித்தார்' என்றோ தமிழ்ப்படுத்தலாம். தூங்கிக்
கொண்டிருக்கும் ஒருவனைத் தட்டியெழுப்புவதுடன் கதை
ஆரம்பிக்கிறது. யூதர்கள் பலஸ்தீனை ஆக்கிரமித்திருப்பது
பற்றியும் மஸ்ஜிதுல் அக்ஸாவை முஸ்லிம்கள் இழந்திருப்பது
பற்றியும் முஸ்லிம் உம்மத்தின் கையாளாகாத் தனத்தையும்
பிழவுகளையும் பலவீனங்களையும் அப்படியே சுயவிமர்ச
னத்திற்குட்படுத்துவதோடு அரபுத் தலைவர்களின் யோக்கியத்தையும்
தோலுரித்துக் காட்டும் நாவல் அது. நஜீப் அல்கைலானியின் அரபு
நாவலை ஆர்எம்.நௌசாத் படித்திருக்க வாய்ப்பில்லை. ஆயினும் ஒரே
 சிந்தனைப் போக்கு. உலக இஸ்லாமிய உம்மத்தின் மீது நஜீப்;
அல்கைலானி கொண்ட தீராக்காதலை, ஆர்எம் நௌஸாத் தனது
சமுகத்தின் மீதும் முஸ்லிம்களுக்காக உருவாக்கப்பட்டு, தியாகங்களால்
 செதுக்கப்பட்ட கட்சி மீதும் கொள்வதில் ஆச்சரியமில்லை. உண்மையான
கலப்பற்ற கவலை அவ்வாறு ஒத்த சிந்தனைகளை மனிதர்களில்
விதைப்பது அதிசயமானதுமல்ல. மரணித்த தலைவர் அஸ்ரப் ஒரு
 போராளியிடம் வந்திருக்கிறார் அதன் பின்னர் நடைபெற்ற, மற்றும்
நடைபெற்றுக் கொண்டிருக்கும் அனைத்துச் சித்து விளையாட்டுக்களை
யும் முஸ்லிம் கட்சிகளையும் அரசியல் வாதிகளையும் மக்களையும்
சேர்த்தே செருப்பால் அடிக்கின்ற மாதிரி ஒரு கதை. 

நல்லதொரு துரோகம் என்ற கதை இன்னுமோர் ஆய்வுக் கதவைத்
திறந்து விட்டிருக்கின்றது. ஆயுதம் தரித்த பேரின மற்றும்
ஆக்கிரமிப்புச் சக்திகளால் பெண்கள் வன்புணரப்படுவதை எதிர்க்கும்
கதை மாந்தர்கள் என்பதுதான் அது. அல் அஸூமத்தின் புறமுதுகுகள்
 கதையின் இறுதிப்பகுதி இப்படி வருகின்றது
ஒரு ஜவான் தனது துப்பாக்கியை கீழே போட்டுவிட்டுக் குப்புறக்
 கிடந்த அவளின் கையைப் பற்றியிழுத்து 
அவளை மல்லாக்கக் கிடத்தி...
'டேடேய்...' என்று கத்திக் கொண்டே ஓடினான் இவன்
அவள்மீது உட்கார்ந்தான் அவன்
'எந்திரிடா ' என்று கத்தினான் இவன். 'அந்த வெளயாட்டுக்கெல்லாம்
போய்றாதீங்க! அது ஒன்ன மட்டும் உட்டுட்டு மத்ததுகள வெளயாடுங்க'
என்று ஒரு பெண் வன்புணர்வுக்குட்படுத்தப்படுவதைத்
தடுக்கிறான் அதுவரை அனைத்தையும் வேடிக்கை பார்த்துக்
 கொண்டிருந்தவன்

ஆர்.எம்.நௌஸாத்தின் நல்லதொரு துரோகம் கதையின் இறுதிப் பகுதி
அய்யுபைக் கண்ட நிஸ்ஸங்க ஆத்திரம் பொங்க 
-அடோ ஹூத்திக்க புத்தோ... பளயாங்...பளயாங் என்று கத்தினார்.
ஆனால் அய்யுப் சிறுமியைக் காப்பாற்றும் உச்ச வேகத்தில் வர 
சட்டென எழுந்த நிஸ்ஸங்க, கைத் துப்பாக்கியால் சிறுமியின் தலை
மீது மிக இரக்கமின்றிச் சுட்டார். கூந்தல் பிய்ந்து தலை வழியாக, சிவப்புத்
துண்டங்கள் வெளிப்பறந்தன. அதே வேகத்தில் திரும்பி வெறியுடன் ஓடி
 வந்த அய்யுபை நோக்கி 
-உம்பத் பளையாங் ஹூத்தோவ்...!
என்று கத்திக் கொண்டே கைத் துப்பாக்கியை நீட்...டிய, சரியாய் அதே
 கணத்தில், அய்யுப், மின்னல் வேகத்தில் எஸ்எல்ஆரை உயர்த்தி, ஒரே
குறியில்... அந்தத் துரோகத்தைச் செய்து முடித்திருந்தான்.
இங்கு அய்யுப் என்பவன் ஒரு ஊர்காவற்படை வீரன். நிஸ்ஸங்க என்ற
பொலிஸ் அதிகாரியின் கையாள் போன்ற ஒரு மிகச்
சாதாரனமானவன். அதிகாரி  ஒரு தமிழ்ச் சிறுமியை வன்புணர்வதை
அவன் விரும்பவில்லை அதைத் தடுக்க முயல்கின்றான் இறுதியில்
 தனது அதிகாரியையே சுட்டுக் கொல்கின்றான். 

அல் அஸூமத் கதையில் வரும் கதா பாத்திரமும் அதைத் தடுக்கப் பாய்து
 ஓடுகின்றது, நௌஸாத்தின் பாத்திரமும் அவன் குடிகாரனாக
இருந்தாலும் கூட இந்த விடயத்தைத் தடுக்க பாய்ந்து வருகின்றான்.
அதுதான் முக்கியமானது. பல்வேறு ஈழத்துக் கதைகளிலும் இது ஒரு பேசு
 பொருளாக கதை புணையும் அம்சமாக மாறிப் போகும்அளவுக்கு பெண்கள்
 சீரழிக்கப்பட்டிருக்கிறார்கள். அதற்கு கால வரையறை கிடையாது.
இந்திய அமைதிப்படையும் அதைச் செய்தது, இராணுவமும் அதைச்
செய்தது, இயக்கம் உடைந்த போது விடுதலைப் புலிகளும்
வெருகலில் அதைச் செய்தார்கள், கருணாவுடன் பிரிந்தவர்களும்
அதைச் செய்தார்கள். இப்படி ஒரு தரப்பும் வன்புணர்ச்சி விடயத்தில் சுத்தம்
 என்று சொல்வதற்கில்லை.

காலவட்டம் கதை மிகவும் வித்தியாசமான புனைவு. ஆச்சரியமிக்க
கதையுக்தி. மிக வித்தியாசமாகச் சிந்தித்திருக்கிறார். கதை வளர்த்துச்
 செல்லப்படும் பாங்கு இன்னும் நம்மை அதிசயிக்க வைக்கிறது. காலச்
 சுழற்சியில் ஒவ்வொரு நிகழ்வும் அற்புதமாகக் கோக்கப்பட்டுள்ளன.
அது போல மீள்தகவு கதை மனதைக் கனக்கச் செய்கின்றது.
நீலாவணிண் போதியோ பொன்னியம்மா என்ற கவிதை ஞாபகத்திற்கு
 வந்து போகின்றது. பிச்சைச் சம்பளத்திற்காக பத்து வருடங்கள் அலைந்து
 திரிந்து இறுதியில் பிச்சைச் சம்பளம் கிடைக்கும் போது பொன்னியம்மா
 செத்துப் போயினாள். அது போலவே இந்த ஏழையும் இழப்பீடு
பெறுவதற்காக அலைவது. ஆயினும் நிறைந்த அரசியல்
விவகாரங்களை அடுக்கடுக்காகச் செருகிச் செல்கின்றார். தமிழ்
அதிகாரிகளிடமும் சிங்கள அதிகாரிகளிடமும் சிக்கித் தவிக்கும்
விசயம் தெரியாத முகம்மது யூசுப் அப்துல்லாவின் பரிதாபம் மனதில்
சோகத்தை விதைத்துவிடுகின்றது.  இந்தக் கதையை நேரடியாக ஒரு
குறும்படமாக்கவுள்ளேன். இந்தக் கதையை வைத்து இந்திய
சினமாப் பானியில் ஒரு சீர்திருத்த ஹீரோவைக் கொண்டு முழுநீளத்
திரைப்படமாகவே ஆக்க முடியும். அவ்வளவு விசயம் புதைந்து
கிடக்கிறது அதற்குள். பாவம் பொதுமகன்.

ஸீனத்தும்மா கதையின் முக்கிய நிகழ்விலிருந்துதான் எனது
இரத்தக்குளியல் எனும் நாவல் பிதுங்குகின்றது. ஸீனத்தும்மாவில்
ஆக்ரோசமாகத் தொனிக்கும் அதே விடயங்கள் கொஞ்சம் வேறுபட்ட
வார்த்தைகளில் இரத்தக் குளியல் நாவலிலும் தொனிக்கிறது. இப்படிப்பட்ட
 பெண்கள் மீது நௌஸாத்தும் நானும் கொண்டிருக்கும் நிலைப்பாடு
ஒன்றுதான் என்பதற்கு இது நல்ல சான்று. நௌஸாத்தின் ஸீனத்தும்மா,
 இரத்தக் குளியலில் வரும் எனது ஹூதா ஆகிய இரண்டு பாத்திரங்களும்
 விபச்சாரக் குற்றச் சாட்டில் கொல்லப்படுதல் என்பதுதான் விடயம்.
 பின்னாட்களில் வரும் ஓர் ஆய்வாளன் ஸீனத்தும்hவின் கருவில்
இருந்துதான் இரத்தக் குளியல் பிறந்தது என்று சொன்னாலும்
ஆச்சரியப்படுவதற்கில்லை. அப்படியொரு ஒற்றுமை. ஸீனத்தும்மா
பிறந்தது 1989ல் இரத்தக்குளியல் பிறந்தது 2011ல் ஆக மொத்தத்தில்
 சும்மா இருக்கும் வாய்க்கு அவள் கிடைத்தமாதிரி. 

நாட்டுப்புறப் பரிசாரிகள் மீதான குருட்டு நம்பிக்கைதான் இன்னும்
 அவர்களை ஜாம்பவான்களாக வைத்திருக்கின்றது. பாலியல்
மன்னர்களாக அவர்கள் திகழ்வதற்கு மக்கள்தான் வழிவகுக்கின்றார்கள்.
இந்தியாவில் மலிந்திருக்கும் போலிச் சாமியார்களுக்கும் நமது
 பரிகாரிமார்களுக்கும் பெரிதாக இந்த விடயத்தில் வித்தியாசம் கிடையாது.
அன்மையில் பரிகாரிமாரிடம் சிக்கிக் கொள்ளும் நிகழ்வினை
மையப்படுத்தி ஒரு நீண்ட கவிதையை பொத்துவில் கிராமத்தான்

கலீபா வகவக் கவியரங்கில் வாசித்திருந்தார். கிழக்கு மாகாணப்
 பரிகாரிகள் மட்டுமல்ல நாடு முழுவதுமுள்ள எல்லாப் பரிகாரி
 மார்களுக்கும் ப்ரேமானந்தா, சங்கராச்சாரியார், நித்தியானந்தா
என இது போன்ற எல்லா வகையறாக்களும் செய்யும்
சில்மிசம்தான் வெள்ளிவிரல் பரிகாரியும் செய்கின்றார். இதன்
பின்னரும் பெண்களைக் கூட்டிக் கொண்டு பரிகாரிமாரிடம் போவீர்களா
என்று கேள்வி கேட்பது போல ஓர் எள்ளளுடன் கதை முடிகின்றது
அழகு. நமது தாய்மாருக்குப் பாசம் இருக்குமளவுக்குப் புத்தி கிடையாது.

நட்டுமை 

இந்த நாவல் பற்றி நான் அதிகம் எழுதத்
தேவையில்லை. பேராசிரியர்
 எம்.ஏ. நுஃமான் அவர்கள், நான் சொல்ல
 நினைத்த அத்தனையையும்
அச்சசொட்டாக அப்படியே
சொல்லி முடித்திருக்கிறார். நீண்ட
முன்னுரையைக் கண்ணுற்றதும்
அதைப் படிப்பதைத் தவிர்த்துக்
கொண்டு நாவலை வாசித்து
முடித்துவிட்டுத்தான் படித்தேன்
. எப்போதும் அனைத்து உரைகளையும்
படித்துவிட்டுத்தான்
விடயத்திற்கே செல்வது எனது வழக்கம்.
 சோலைக் கிளியின்
 பொன்னாலே புழுதி பறந்த பூமிக்கு கலாநிதி
றமீஸ் அப்துல்லா
வழங்கியிருந்த நீண்ட முன்னுரை அயர்ச்சியாக்கியது
போல
இதிலும் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில்தான்
 நட்டுமையில்
பேராசிரியரின் குறிப்பை முதலில் படிப்பதைத் தவிர்த்தேன்.
ஆயினும் கடைசியில் வாசித்ததன் சாதகத்தை முழுமனதோடு
ஏற்கின்றேன். நட்டுமை குறித்து நான் ஏதேனும் எழுதுவதானால்
பேராசிரியன் எழுத்துக்களை அப்படியே கொப்பி பேஸ்ட் பண்ணினால்
 சரி. ஆகவே எதற்கு வீண் வம்பு? எல்லோரும் பேராசிரியரின்
குறிப்பைப் படியுங்கள், அதன் பின்னர் நாவலைப் படியுங்கள்,
1930 களில் சுதந்திரத்திற்கு முற்பட்ட காலத்து முஸ்லிம்
கிராமமொன்றில் வாழும் சுகானுபவத்தைப் பெற்றுக் கொள்ளலாம். 

நௌஸாத் ஆகிய தீரன் என்ற 
சைலன்ட் டெரரின் 
அடுத்த படைப்புக்களை ஆவலோடு 
எதிர்பார்க்கின்றேன். 
இப்படி அடுத்த படைப்பை ஆவலோடு 
எதிர்பார்க்க வைக்கும்
 படைப்பாளிகள் நம்மிடம் வெகு குறைவு
 என்பதை மனதிற் கொண்டு
 அவசரமாக செயற்படுங்கள்.






ஜே.வஹாப்தீன் -+ கவிஞர் எ.எம்.எம் அலி


ஜே.வஹாப்தீன் -

வெள்ளிவிரல் மின்னுகின்ற தீரன்
வெட்டவெளிக் காற்றினிலே பாரன்
சொல்லினிலே கலைசெய்து
சோக்கான கதைபுனைய
தென்கிழக்கில் இவர்தானே சூரன்.

ஜே.வஹாப்தீன் -
-------------------------------------------



ஞானத் திரட்சியில்
நமது கலைஞன் தீரன் --கலை
ஏனத் திலிட்டு

இலக்கியப் பசி தீர்த்தபின்
மோனத் தவஞ்செய்து
முக்தி பெறும்
மோகத்தில் ஆழ்ந்தனனோ ?
இல்லையேல் இவன் வேறு
சோ(வே )கத்தில் வீழ்ந்தனனோ ??

தம்பிலுவில் ஜெகா பீ.ஏ.--ஞாயிறு தினக்குரல். நேர்காணல்

ஞாயிறு தினக்குரல். நேர்காணல்--- தம்பிலுவில் ஜெகா பீ.ஏ.

ஞாயிறு தினக்குரல். 2013.11.03
நேர்காணல்--- தீரன். ஆர்.எம். நௌஸாத்

தம்பிலுவில் ஜெகா பீ.ஏ.




இதுவரை அறியப்படாத தளங்களில் இருந்தும்
அறியப்பட்ட தளங்களில் உள்ளää தெரியப்படாத பக்கங்கள் பற்றியும் கூடுதலாகச் சிந்திக்கிறேன்.




தீரன். ஆர்.எம். நௌஸாத்

00 ~வல்லமை தாராயோ..|ää (2000)ää ~வெள்ளிவிரல்| (2011)ää ஆகிய இரண்டு சிறுகதைத் தொகுதிகளையும் ~நட்டுமை| (2009) என்ற நாவலையும்  தமிழிலக்கிய உலகுக்கு அளித்தவர்.

00 தமிழ்நாடு ~காலச்சுவடு|  இதழ் நிறுவுனர் சுந்தர ராமசாமி 75 பவழவிழா இலக்கியப்போட்டியில்  இவர் தனது ~நட்டுமை| நாவலுக்கு முதற் பரிசு வென்றவர்.

00 தனது ~வெள்ளிவிரல்| சிறுகதைத் தொகுதிக்கு  2011ல் தேசிய அரச சாகித்திய விருதும் கிழக்கு மாகாண சாகித்திய விருதும் ஒருங்கே பெற்றுக் கொண்டவர்.

00 1998ல்  ~தினக்குரல்| நாளிதழும் பிரான்ஸ் தமிழ்வானொலியும் இணைந்து நடத்திய சில்லையூர் செல்வராசன் ஞாபகார்த்த உலக வானொலி நாடகப் போட்டியில் ~காகித உறவுகள்| என்ற தனது வானொலி நாடகத்திற்கு 3ம் பரிசு பெற்றவர்.

00 இவரது ~நல்லதொரு துரோகம்|  என்ற சிறுகதைக்கு பேராதனை பல்கலைக் கழக தமிழ்சங்கம்  முதற்பரிசாக தங்கப் பதக்கம் அளித்தது..

00 அத்துடன்ää இவரது ~சாகும்-தலம்.| சிறுகதை தமிழ்நாடு எழுத்தாளர் சுஜாதா அறக்கட்டளை நிறுவனம் நடத்திய அறிவியல் புனைகதைப் போட்டியில் முதற்பரிசு பெற்றது.

00 ~ஞானம்| சஞ்சிகை நடத்திய புலோலியூர் க. சதாசிவம் நினைவுச் சிறுகதைப் போட்டியில் தனது  ~தாய்-மொழி| சிறுகதைக்கு முதற்பரிசு உட்பட  மேலும்ää பற்பல இலக்கியப் போட்டிகளில்  தமது வித்தியாசமான வார்ப்பிலான சுமார் 19 சிறுகதைகளுக்கு பற்பல பரிசில்கள் பெற்றவர்.  அவருடனான ஒரு நேர்காணல் இது..........






கேள்வி--- முதலில் உங்களது பிரத்தியேக வாழ்நிலை பற்றி ஒரு சுருக்க அறிமுகம் செய்வதானால்....?


பதில்---- நல்லது..நான் தொழிலால் ஒரு தபால் அதிபர். இலங்கையின் பற்பல பகுதிகளிலும்  சுமார் 30 வருடங்கள் சேவையாற்றிய பின் தற்போது என் சொந்த இடமான சாய்ந்தமருது தபாலகத்தில் பொறுப்புத் தபாலதிபராக கடமை செய்கின்றேன்.. மூன்று பிள்ளைகளின் தந்தை.. மனைவி பாத்திமா றிபாயா..

கேள்வி--- எழுத்துத் துறைக்கு எப்படி வந்தீர்கள்..?

பதில்---- ~கல்முனை ஸாஹிறா| இலக்கியப் பண்ணையில்தான் இது ஆரம்பமாயிற்று. 1975ல் பாடசாலை வெளியீடான ~அம்பு| சஞ்சிகைக்கு ஒரு வாசகர் கடிதம் எழுதியதன் மூலம் எழுத்துலகில் உட்பிரவேசித்தேன். அப்புறம் துணுக்குகள்ää கேள்வி பதில்...உருவகக் கதை.. குறுங்கதை... ஒன்றிரண்டு சிறுகதைகள்.. அப்படி இப்படியென்று கொஞ்ச காலம்... 1990க்குப்  பின்னர் ஒன்றும் எழுதாமல் ~இலக்கிய நெடுந்தூக்கம்.|... இக்காலப்பகுதி முழுவதும் படிப்புää தொழில்..திருமணம் குடும்பம்..என்று போயிற்று.. இருப்பினும் தோன்றும் போதெல்லாம் எழுதி எழுதி வைத்துக் கொண்டும் செவ்வை பார்த்துக் கொண்டும் அநேகமாக புத்தகங்கள் வாசித்துக் கொண்டும்தானிருந்தேன்.. இலக்கிய நெடுந்தூக்கத்திலிருந்து மீண்டெழுந்து ..2000ம் ஆண்டில் ~வல்லமை தாராயோ!| சிறுகதைத் தொகுதியை கொணர்ந்தேன்.. அதிலிருந்து தொடர்ச்சியாக  எழுதி வருகின்றேன்..



கேள்வி--- உங்களது சிறுகதைத் தொகுதிகள் பற்றியும் அவற்றின் வார்ப்பு நிலைகள் பற்றியும் அறிய விரும்புகிறோம்....?

பதில்---- ~வல்லமை தாராயோ..!| என்பது எனது முதல் சிறுகதைத் தொகுதி.. 2000ல் வெளியானது. எட்டுச் சிறுகதைகளை உள்ளடக்கியது இது. எனினும் நமது ~விமர்சன மற்றும் இரசனைக் குறிப்பு| எழுதுகிற ~அறிஞர்களால|; அவ்வளவாகக் கண்டு கொள்ளப்படாமல் முடங்கி விட்டது. புpன்னர்ää பற்பல இலக்கியப் போட்டிகளில் பரிசுகள் பெற்ற 12 சிறுகதைகளைத் தொகுத்து தமிழ்நாடு காலச்சுவடு நிறுவனம் ~வெள்ளிவிரல்| என்ற பெயரில் ஒரு தொகுதியாக வெளியிட்டது. இது 2011ன் அரச சாகித்திய விருதையும்ää கிழக்கு மாகாண சாகித்திய விருதையும் பெற்றது.

வார்ப்பு நிலை என்று கேட்டீர்கள்.. இது விரிவான விசயம்.. ஓரு சிறுகதையின் வெற்றிக்கு பல காரணங்கள் இருந்த போதிலும்ää என்னைப் பொறுத்த வரையிலும் இதுவரை அறியப்படாத தளங்களில் இருந்தும் அறியப்பட்ட தளங்களில்உள்ளää தெரியப்படாத பக்கங்கள் பற்றியும் கூடுதலாகச் சிந்திக்கிறேன். முதலில் நுகர்பவரை கதைக்குள்ளே வரவைக்;கிறேன். அப்புறம் அவர் என்னை வாங்காமல் போக முடியாதபடி செய்து விடுவது என் கதைத் தந்திரம். இதில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை. எல்லோரும் ஒரே விதமாக ~கதை|த்துக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. இக்காலத்தில் கூட என்னால் இன்னும் வெகுசுதந்திரமாக எழுத முடியவில்லை என்றே விசனிக்கிறேன்;.


கேள்வி---- நாவல் முயற்சிகளைப் பற்றிக் கூறுவதானால்...?

பதில்---- என் முதல் குறுநாவல் ~வானவில்லே ஒரு கவிதை கேளு..| ஈழநாதம் பத்திரிகையில் 2005 தொடக்கம் ஏழு தொடர்கள் ஏழு வண்ணங்களாக வெளியாயிற்று. இரண்டாவது குறுநாவல் ~பள்ளிமுனைக் கிராமத்தின் கதை| தொடர்ச்சியாக 2003 தொடக்கம் முஸ்லிம் குரலில் 40 அங்கங்களாக பிரசுரமானது. இது 1990 களின் தென் கிழக்கின் யுத்த காலத்தைப் பின்புலமாகக் கொண்டது. அக்காலத்து அரசியல் போக்கினால்  பாதிக்கப்பட்ட ஒரு அப்பாவிக் கிராம மக்களின்  வாழ்வியல் பற்றிய இக்குறுநாவல் பின்னர்ää நண்பர்களான எம். பௌசர்ää எம்.எம்.எம்.நூறுல்ஹக் ஆகியோரின் ஊக்குவிப்பினால் தனி ஒரு முழுநாவலாக உருவெடுத்தது. இது தற்போது மேலும் செவ்விதாக்கப்பட்டு  ~கொல்வதெழுதுதல். 90| என்ற தலைப்பு மாற்றத்துடன் இவ்வருட இறுதியில் இன்ஸா அல்லாஹ் வெளியாக உள்ளது..
என் மூன்றாவது முழு நாவல் ~நட்டுமை|  இது கிழக்கு மண்ணின் 1940க்கு முந்திய விவசாய மக்களின் வாழ்வியலைப் பேசுகிறது. கிழக்கு முஸ்லிம் மக்களின் வட்டார வழக்குப் பேச்சோசையில் ஒலிக்கும் இந்நாவல் கடல்கடந்து  தமிழ்நாட்டில் சுந்தரராமசாமி நினைவு நாவல் போட்டியிலும் முதற்பரிசு பெற்றது. 2009ல் காலச்சுவடு வெளியீடாக வந்தது. சில ~இலக்கிய இருட்டடிப்புகளையும்| மீறி எனக்கு ஓரு ஒளிவட்டம் தந்தது இந்நாவல். புகழனைத்தும் இறைவனுக்கே!
எனது  நான்காவது நாவல் ~சாந்த-மாமா| பிரசுரமாகாதுள்ளது.. ஐந்தாவது நாவல் ~யுத்த பிக்குகள்| - இது தற்போது உருவாக்கத்தில் உள்ளது.
 .
நாவல் எழுதுவது தனி ஒரு நுட்பம். மிக நீண்ட சிறுகதையை ஒரு முழுநாவலாக்கி விடுவோரும் ஒரு நாவலையே ஒரு சிறுகதையாக்கி விடுவோரும் இந்த நுட்பம் தெரியாதோரே... இந்த நாவல்த் தொழிநுட்பத்தை நான் கற்றுக் கொண்டு கையாள ஆரம்பித்த போது வாசகர்கள் பொதுவாகää நாவல்கள் வாசிப்பதையே பெரும்பாலும் நிறுத்தியிருந்தனர்....
இந்த தேக்க நிலையிலும் இப்போதும் நாவல்கள் வந்து கொண்டுதானிருக்கின்றன.. வாசிக்கப்பட்டுக் கொண்டுமிருக்கின்றன.. ஒரு சிறுகதைக்குள் அடக்கி விட முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் ~கரு எச்சங்கள்| வியாபித்து வெடிப்பது நாவலில்தானே...அந்தப் பிரசவம் தரும் வலி இனிது. அதன் வடிவமைப்புகள் பெரிது.. அதனூடான சஞ்சாரம் ஒரு ஆபத்தான அழகு.. ஓரு நாவலைப் படித்த பின் அக்கதை மாந்தருடன் வாசகர் வாழும் காலமெல்லாம் அந்நாவலும் அதன் தயாரிப்பாளியும் நித்திய ஜீவியமடைகிறார்கள்; என்பதே உண்மை.

கேள்வி---- கவிதைத் துறை ஈடுபாடுகள் மற்றும் அனுபவங்களைக் கூறுவதாயின்....?

பதில்---  1977 தொடக்கம் கவிதைகள் என்று நினைத்துக் கொண்டு சிலவற்றை பற்பல பத்திரிகைகளில் எழுதி வந்தேன். எல்லாம் புதுக்கவிதைகள்தாம். ~கொக்கூர்கிழான்| கா.வை. இரத்தினசிங்கம் ஐயா அவர்களின் பயிற்சியின் பின் மரபுக் கவிதை வாள் சுழற்றவும்ää ~குறும்பா. வெண்பாக் கத்திகள் எறியவும் ஓரளவு கற்றுக் கொண்டேன்.. அல்அஸ_மத்தின் ~பூபாளம்| கவியேடு நடத்திய குறும்பாப் போட்டியில் பரிசு பெற்றது ஒரு தனி ஆனந்தம்.  1981 இலிருந்து 1989 வரை ~தூது| என்ற பேரில் ஒரு கவிதைச் சிற்றேட்டை நண்பர் றாபீக்குடன் சேர்ந்து  16 இதழ்கள் வரை வெளியிட்டேன்... தூது இதழில் ஆசிரியத் தலையங்கங்களை வெண்பாääகுறும்பாக்களில் எழுதித் தீ மிதித்தேன்.  நண்பர் கல்முனை முபாறக்கின் ~அல்ஜஸீறா| பத்திரிகையின் அச்சுச் சாதனங்களைக் கொண்டு நானே எழுத்துக் கோர்த்து அச்சகம்  கொண்டு சென்று அச்சடித்து  வெளியிட்ட அந்தப் போர்க் காலங்கள் கூட அழகியன... கவிதைத் தொகுதி ஏதும்  இன்னும் வெளியிடவில்லை..

1986களில் ~வாஷிங்டன் கனவு|ää 1989 ல்- ~இன்னாலில்லாஹி...| போன்ற  ரோணியோ கவிதைத் தொகுப்புக்கள். 1993 ல் ஹைக்கூ கவிதைகளுக்கென்றே ~புள்ளி| என்ற சிற்றிதழ்.. (இரண்டே இதழ்கள்தாம்  வந்தன) . பிறகு 2002ல் ஏ.எம். ஜாபீர்ää நகிபுடன் சேர்ந்து ~இரண்டாவது பக்கம்| கவியேடு.. இப்படிச் சில..

கவிதையின் மூலப் பொருட்கள் வட்டார வழக்காக இருக்கட்டும் அல்லது அம்மண வார்த்தையாயிருக்கட்டும்ää அல்லது மரபுப் பர்தாவைப் போர்த்திக் கொண்டிருக்கட்டும்ää எதுவாயினும்ää ~பெருகிய உணர்வின் இறுகிய சிந்தனைச் சிறைப்பிடிப்பே கவிதை| என்று எனது குருநாதர் பாவலர் பஸீல் காரியப்பர் கூறுவதை விடவும்  அவை வேறானதல்ல என்றே இன்னமும் உணர்கிறேன்.


கேள்வி---    இலங்கை வானொலி நாடகங்களின் மீதான  உங்கள் ஈடுபாடுகள் பற்றி...?

பதில்--- ஆ..அது ஒரு பொற்காலம்.! இப்போது தமிழக தொலைக்காட்சி நாடகங்களுக்கு நேயர்களிடம்  இருக்கும்  வரவேற்பு அப்போது இலங்கை வானொலி நாடகங்களுக்கு இருந்தன.. வானொலி நாடகங்களுக்காக  நேயர்கள் காத்துக் கிடந்தனர்..  வானொலி நாடக குறியீட்டொலி கேட்டே தம் கைக்கடிகாரங்களை திருப்பி வைக்கின்ற காலம் அது..! 1985ல்  எனது முதல் வானொலி நாடகம் ~வாக்கு| முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பானது. தொடர்ந்து 1990 வரை  சுமார் 12 வானொலி நாடகங்கள் கலைமாமணி எம். அஸ்ரப்கான்  அவர்களின் நெறியாழ்கையில்ää எழுதியிருக்கின்றேன். இவற்றில் ~ஒரு கிராமத்தின் கவிதை| சுமார் 25 தடவைகள் ஒலிபரப்பானது.. வானொலி நாடகப் போட்டியில் ~காகித உறவுகள்| நாடகத்திற்கு  தினக்குரலும் பிரான்ஸ் தமிழ் வானொலியும் இணைந்து 3ம்  பரிசளித்தது. தத்துவஞானி உமர்கையாமின் வாழ்வியலின் ஒரு துளியாக ஒலிபரப்பான ~விண்மீன் வீடு| என்ற நாடகத்திற்கு நேயர்கள் பொழிந்த பாராட்டுமழையை நினைந்துää இப்போதும் நனைந்து மகிழ்கிறேன்..

நடிகமணி கேஎம் ஜவாஹர்ääஞெய்ரகீம் ஸஹீத்ää ஸில்மியா ஹாதிää நூர்ஜஹான் மர்ஸ_க்ää அஸ்ரப் சிகாப்தீன்ää ஸனோஸ் முகம்மத் பெரோஸ்ää ஏ.எல்.ஜபீர்ää ஏ.ஆர்.எம். ஜிப்ரிää எம். தாஜ்ää எம்.எம்.ரவ்ப்ää ஹ_ஸைன்ää லத்தீப்ää புர்கான்பீ இப்திகார்ää என்று ஒரு கலைஞர் பட்டாளமே ~குரல் நடிக நட்சத்திரங்களாக| திகழ்ந்த காலத்தை எண்ணி வியக்கிறேன்.

ஓலிபரப்பாகிய நாடகங்களில்  கைவசம் உள்ள 10 நாடகங்களின் தொகுப்பு ~முஸ்லிம் நிகழ்ச்சியில் அடுத்ததாக....| என்ற பெயரில் இறுவட்டுத் தொகுதியாக அடுத்த மாதமளவில் வெளிவருகிறது.


கேள்வி---  கதைகளைத் தவிர வேறு என்னென்ன தளங்களில் இயங்கியிருக்கிறீர்கள்...?

பதில்----   2008ல் ~விடிவெள்ளி|யில் ~ஒரு சிற்றெறும்புக்கும் நிழல் இருக்கிறது..||என்ற தலைப்பில் பாவலரின் படைப்புலகில சஞ்சாரம் செய்திருக்கிறேன்.. (10 தொடர்கள் எழுதி இடைநடுவில் நிறுத்தி விட்டார்கள்) நவாஸ்சௌபியின் ~நல்லுறவு|;  இதழில் 2009ல் ~விழித்திரையில் விரியும் வெண்திரை|  என்று அயல்மொழிச் சினிமாக்கள் பற்றிய  தொடர் மற்றும்ää  ~யாத்ரா| வில்  ~செல்லிடம் பேசேல்| என்ற தலைப்பில் சில வாழ்வியல் நகைச்சுவைக் கட்டுரைகள்.. இப்போது  அபாபீல்கள் வலைத்தளத்தில் ~ஆத்மாவின் வலைகள்...| என்ற தலைப்பில் சில ஆன்மீகத் தகவல்கள் தொகுத்து வருகிறேன்..

கேள்வி---  யாரையெல்லாம் வாசிக்கிறீர்கள்...  என்ன வாசிக்கிறீர்கள்..?

பதில்-- தமிழகம் புலம்பெயர் ஈழம் என்றில்லாமல் கைக்குக் கிடைப்பதையெல்லாம் வாசித்து விடுவதுண்டு.. முன்னரெல்லாம் நமக்குத் தொழில் வாசிப்பு.. யோசிப்பு என்றிருந்தேன்.. இப்போதெல்லாம் தேர்ந்தெடுத்தே வாசிக்கின்றேன். வலைப் பூக்களிலும்  இணைய தளங்களிலும் கொஞ்சம் வலம் வருகின்றேன்..  தற்போது சூபித்துவ மெய்ஞான தமிழ்மொழி இலக்கியங்களை ஆய்ந்து வருகின்றேன்..

கேள்வி---  நாவல்ää சிறுகதைகள் உருவாக்கத்தில் உங்களின் உத்தி என்ன..? ஒரு நல்ல படைப்பு எப்படி இருக்க வேண்டும் எனக் கருதுகிறீர்கள்...?

பதில்---  உத்தி என்பது என்ன.. நாம் உருவாக்குவதுதானே.. ஒரு கணத்தில் மின்னி மனதில் வீழ்படிகின்ற கருவைப் படைப்பதில் எத்தனையோ விசயங்களை யோசிக்கின்றேன். பாத்திர வார்ப்புää கதா மாந்தர்ää நிகழ்தளம் யாதர்த்தப் பூச்சுää மொழிநடைää உரையாடல் என்றெல்லாம் படைப்பின் முன்னுள்ள நிலை குழப்பமானது. எல்லாவற்றையும் கருத்திற் கொண்டு உருவாக்கிய படைப்புரு என்னை இலேசில் திருப்திப்படுத்துவதில்லை. மீண்டும்ää  செவ்விதாக்கல் என்ற செதுக்கும் தொழிற்சாலையிலிட்டு (அது எத்தனை நாளாகுமோ தெரியாது) கடைச்சல் வேலை செய்கின்றேன். அது ஒரு தனிக்கலை. உண்மையில் படைப்புலகம் ஒரு இருள். படைப்புத் திறமை ஒரு அருள். அது எல்லலோருக்கும் அருளப்படுவது கிடையாது.  நினைத்தவுடன் பேப்பரை எடுத்து கதை (எழுதி) விடுவதில் எனக்குச் சம்மதமில்லை..


கேள்வி---  இறுதியாக தினக்குரல் வாசகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்...?

பதில்---  ஞாயிறு தினக்குரலில் என் 7 சிறுகதைகள் வெளியாகியிருக்கின்றன.. தினக்குரலின் அனுசரனையில் நடத்தப்பட்ட வானொலி நாடகப் போட்டியில் பரிசு பெற்றுள்ளேன்.  என் ~வல்லமை தாராயோ!|  சிறகதைத் தொகுதி விமர்சனம் தினக்குரலில்தான் முதலில் வெளிவந்தது. நான் தினக்குரலின் நீண்டகால வாசகன்.  ஓரு தினக்குரல் வாசகி என் கதைகளை வியந்துää ~நீ ஒரு இடது கை இறைவன்..|என ஒரு வாசகர் கடிதம் எழுதியிருந்தார். அவருக்கும் அனைத்து தினக்குரல் வாசகருக்கும் என் மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்...!  (071-4457593 — சஅயெறளாயன@பஅயடை.உழஅ)


Lafees Shaheed



 நட்டுமை நாவலின் பின்னணி 

உழைப்பு பிரமிக்கத்தக்கது. கதை நடைபெறும் 

காலப்பிரிவான சுதந்திரத்துக்கு முந்தைய 

கிழக்கிலங்கையை தத்ரூபமாக சித்தரிக்கும் 

மொழி வழக்கு, உணவுக் குறிப்புகள், பண்பாட்டுத் 

தகவமைப்பு என்று ஆசிரியர் மிகவுமே 

பிரயத்தனப்பட்டு இருக்கிறார். அதீதமான 

உழைப்பு. யதார்த்தவாத பாணியில் - 

யதார்த்தவாதம் என்ற கோட்பாட்டின் சிக்கல்கள் 

ஒரு புறம் இருக்க - கதை கூறிச் செல்கிறது 


நட்டுமை. ஆனால் நாவலில் அன்றைய 


நிலவுடமை சமூகத்தின் உள் முரண்கள் 

மெளனமாக்கப்பட்டுள்ளன. பியூடலிசம் சார்ந்த 


போடியார் எனப்படும் பாத்திரம் ரொமண்டிசைஸ் 

பண்ணப்பட்டுள்ளது. அரசியல் நீக்கம் 

செய்யப்பட்ட தூய கலை என்பவர்கள் இந்த 

நாவலை நெருடலின்றி ரசிக்கலாம். ஆனால் 



சமகாலத் தன்மையுடன் Political Correctness 



கொண்ட பிரக்ஞை கொண்டவர்கள் நட்டுமை 

நாவலின் கட்டமைப்பை கடுமையாக 

விமர்சனமே செய்வார்கள். நட்டுமை நாவலின் 


மொழி கவித்துவம் கொண்டது. ஆனால் 


உள்ளடக்கம் வரலாறு சார்ந்த இருட்டடிப்பு 

கொண்டது. ஆயினும் அருமையான Pleasure of the 

Text இனை தரும் பிரதியே நட்டுமை என்பதை 

மறுத்திட முடியாது.

-------------------------------------------






 நட்டுமை நாவலின் 


முக்கியத்துவத்தை மறுத்திட முடியாது 


நெஸஷாத் சேர். நாஸ்டல்ஜியா தன்மை 


கொண்ட கிளாஸிக் அது. 

👍