தீராவெளி

Thursday, March 17, 2022

சாதிர் அஹமத்

 Shathir Ahamed is with R.M. Nowsaath.


மொழி வழி கூடுகை 2022
வனம்- ஆதிரை
விருந்தினர் - 03 தீரன் நௌஷாத்


தீரன் ஆர். எம். நௌஷாத் கிழக்கின் நிலவியல் குறித்து மிக நேர்த்தியான கதைகளை வாசிப்புலகிற்கு தந்தவர். தனக்கான கதை மொழியினை வடிவமைத்ததிலும், மண்வாசனைச் சொற்களில் பிரத்தியேக கவனத்தினைச் செலுத்தியதும் தீரனின் தனித்த அடையாளமாக இலக்கியப் பரப்பில் விசாலமாகியது. தீரனின் கதைகள் முழுக்க உலாவித்திரிந்த மாந்தர்கள் வாசகர்களிடம் மிக அண்டிய உறவினை பேணிக் கொண்டார்கள். தீரனின் கதைகளைப் போல கவிதைகளும் மேம்பட்ட அரசியலினை கொண்டியங்கியது.
‘நட்டுமை’, ‘கொல்வதெழுதுதல் 90’ இவரது நாவல்கள். ‘வெள்ளி விரல்’, ‘தீரதம்’, ‘வக்காத்துக் குளம்’ ஆகியவை சிறுகதை தொகுப்புகள்.
நட்டுமை நாவலானது காலச்சுவடு அறக்கட்டளையின் 'சுந்தர ராமசாமி -75 ‘ இலக்கியப் போட்டியில் முதலிடம் பெற்றது. வெள்ளிவிரல் சிறுகதைத் தொகுதி 2011ல் தேசிய அரச சாகித்திய விருது பெற்றது. ‘கொல்வதெழுதுதல் 90’ காலச்சுவடு பதிப்பகத்தினால் வெளியிடப்பட்டு தமிழ்நாடு அரசின் ஆயிரம் பிரதிகளுக்கான நூலக ஆணை பெற்றது. 2017ல் அக்கினிக்குஞ்சு இணையம் நடாத்திய எஸ்.பொன்னுத்துரை நினைவு நாவல் போட்டியில் இவரின் ‘வக்காத்துக்குளம்’ குறுநாவல் மூன்றாம் இடத்தைப் பெற்றது. தினக்குரல் நாளிதழும் பிரான்ஸ் தமிழ் வானொலியும் இணைந்து நடத்திய சில்லையூர் செல்வராசன் ஞாபகார்த்த உலக வானொலி நாடகப் போட்டியில் ‘காகித உறவுகள்’ எனும் வானொலி நாடகம் மூன்றாம் பரிசு பெற்றது.

‘நல்லதொரு துரோகம்’ என்ற சிறுகதைக்கு பேராதனை பல்கலைக்கழக தமிழ் சங்கம் முதற்பரிசாக தங்கப்பதக்கம் அளித்தது. ‘சாகும்-தலம்’ சிறுகதை எழுத்தாளர் சுஜாதா அறக்கட்டளை நிறுவனம் நடத்திய அறிவியல் புனைகதைப் போட்டியில் முதற்பரிசு பெற்றது. ஞானம் சஞ்சிகை நடத்திய புலோலியுர் க. சதாசிவம் நினைவுச் சிறுகதைப் போட்டியில் ‘தாய் மொழி’ சிறுகதைக்கு முதற்பரிசு கிடைத்தது.
"தானே பின்னிக்கொண்ட உலக வலைப்பின்னலில் தானே சிக்கிக் கொண்ட மனிதச் சிலந்திகளுக்கு, சில காலங்களின் பின்னர், இதனைவிட்டும் விடுதலையாகித் தம் ஆரம்பம் நோக்கிய எத்தனம் அடிமன ஏக்கமாக உறைகிறது. அது, தொடர்ந்து விஸ்வரூபமெடுத்து, தொடரான பின்னிணைவாக மனதில் ஆக்கிரமிக்கிறது" என்பார் தீரன். அவரது படைப்புக்களும் உரையாடலும் நினைவுகளின் வழியே ஒழுகும் நீர்ச்சுனைகளுக்கு சமாந்தரமானது.
நட்டுமை நாவலை வாசிக்க:-
வக்காத்துக்குளம் குறுநாவல் மற்றும் ‘கொல்வதெழுதுதல் 90’ வாங்க:-
தீரன் நேர்காணல்:



  • மருதூர் ஜமால்தீன்
    மிக அருமையான குறிப்புக்கள் மேலும் எழுதப்படவேண்டியவர்
    • Love
    • Reply
    • 4d
  • H.M. Farook
    மகிழ்ச்சி 
    வாழ்த்துக்கள்
    • Love
    • Reply
    • 4d
  • Meelaud Keeran
    தீரன் பற்றிய நல்ல வாசிப்பு...
    • Love
    • Reply
    • 4d
  • Abdul Jameel
    தீரன் கொண்டாடப்பட வேண்டிய பன்முக ஆளுமை அவரை வனம் தேர்ந்தெடுத்தது மனதுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி தருகிறது கூடுகையில் உரையாடுவோம் தீரனுக்கு நெஞ்சார்ந்த 
    வாழ்த்துக்கள்
     தோழர்
    • Love
    • Reply
    • 4d
  • R.M. Nowsaath
    கொஞ்சம் வெட்கமாகவும், கொஞ்சம் மகிழ்ச்சியாகவும் இருக்கு Dr... மிக்க நன்றிகள்.என்று சொல்வதை விட வேறென்ன கைமாறு செய்வேன்..
    4
    • Like
    • Reply
    • 4d
  • Mohamed Kaleel - adr
    வாசிக்கப்பட வேண்டிய இளந்தாரி..
    • Haha
    • Reply
    • 4d
  • Rathydevi Kandasamy
    சிறப்பு. மனமார்ந்த 
    வாழ்த்துகள்
    .
    • Like
    • Reply
    • 4d
  • எம் எம் நெளஷாத்
    நல் 
    வாழ்த்துக்கள்
     மகிழ்ச்சி அளிக்கிறது
    மண் மணம் கமழும் எழுத்துகளைத் தருபவர்
    • Like
    • Reply
    • 4d
    • Edited
  • Jalaldeen Mahakavi
    வாழ்த்துக்கள்
    • Like
    • Reply
    • 4d
  • Alex Paranthaman
    அங்கத எழுத்துகளை
    நமக்கு
    இங்கிதமாகத் தருபவர்.
    • Like
    • Reply
    • 4d
  • Sihan Mkm
    "கொல்வதெழுதுதல் 90" 🔥🔥🔥
    • Like
    • Reply
    • 4d
  • பாவேந்தல் பாலமுனை பாறூக்
    தீரன் நமது மண்ணின் சிறந்த கதை சொல்லி.
    • Like
    • Reply
    • 4d
  • Ayoob Seeni
    வக்காத்துக் குளம் மட்டுமல்ல அவருடைய எல்லா எழுத்துக்களும் அதிர்வுகளை அலைகளை வாசித்து முடித்த பின்னரும் எழுப்பிக் கொண்டே இருக்கின்றன.
    தீரன் தூக்கிப் பிடிக்க வேண்டிய ஆளுமை.
    • Like
    • Reply
    • 4d
  • Mohamed Ismail Mubaraque
    ஆன்மீகக் கவிதைளின் சொந்தக்காரர். தீராக் கத சொல்லி
    • Like
    • Reply
    • 4d
  • Thamby Lebby Jawferkhan
    நல்
    வாழ்த்துக்கள்
    • Like
    • Reply
    • 4d
  • Firoskhan Jamaldeen
    கால் மேலே கால் போடுவன்டா
    கோட் சூட் போடுவேன்டா
    காலாடா
    • Haha
    • Reply
    • 4d
  • Fahmiya Shareef
    ஆப்ரஹாம்லிங்கன் மாதிரியே இருக்கேள்...☺
    May be an image of monument and text
    • Haha
    • Reply
    • 4d
  • Abdulrazack Mohamedibrahim
    'தீரன்' கலையின் 'வீரன்'
    • Like
    • Reply
    • 4d
  • Ahamed Jinnahsherifudeen
    அடுத்த ஜனாதிபதிக்கான அழகிய விண்ணப்பம். நாங்கொண்டும் ஏமாறமாட்டம். இப்ப படுற பாடு போதாதா!
    2
    • Haha
    • Reply
    • 4d
  • Abdul Rasak
    எங்கள் தீரா ஆளுமை
    2
    • Like
    • Reply
    • 4d
  • Abdul Gaffoor
    எண்ணத்திலும் எழுத்திலும் தீராத
    உவகை கொண்ட தீரனவர் செயல் வீரனவர்.👍👍👍👍👍
    • Like
    • Reply
    • 4d
  • Bisthamy Ahamed
    தீரன் கொண்டாடித்தீர்க்க வேண்டிய வீரம் மிக்க இலக்கிய எழுத்தாளர்
    வாழ்த்துக்கள்
     sir
    2
    • Like
    • Reply
    • 4d
  • Fareed Amm
    நல்
    வாழ்த்துகள்
    • Like
    • Reply
    • 4d
  • Chandirasekaram Shakila
    நல் வாழ்த்துக்கள்
    • Like
    • Reply
    • 4d
  • Moosa Vijily
    சிறப்பு//
    • Like
    • Reply
    • 4d
  • Slm Hanifa
    தீரன் நமது பெருமைமிகு ஆளுமை.அவரைப்போற்றுவோம்
    2
    • Like
    • Reply
    • 4d
  • Thassim Ahamed
    தீரன் ஒரு கம்பீரன்(புதுச் சொல்)
    கதை சொல்வதிலும் கதை அளப்பதிலும் சொல் வீரன்
    நம்மூரன் நகைச்சுவைச் சூரன்… 
    See more
    2
    • Love
    • Reply
    • 4d
    • Edited
  • Smbm Anssar
    ஐனாதிபதி விண்ணப்பம் பற்றி சொல்லப்பட்டுள்ளது. என்ன? சுயேச்சை ஆகவா? சூப்பர்! ஆரு என்ன பாடு பட்டாலும் எனது முழு ஆதரவு தீரனுக்கே
    • Love
    • Reply
    • 4d
    • Edited
  • எழுகவி ஜெலில்
    தீரன் நமது அடையாளம்
    • Like
    • Reply
    • 4d
  • Murugan Sivalingam
    கதையுலகில். தனித்துவமான. எழுத்து நடை கொண்டவர். தீரன்!
    • Like
    • Reply
    • 4d
  • Mahdy Hassan Ibrahim
    மிகவும் சுவாரசியமான பல படைப்புகள் மூலம் மனதில் இடம் பிடித்தவர்!
    • Like
    • Reply
    • 3d
  • க. ஷியா
    தீரரே நீர் வாழி
    • Like
    • Reply
    • 3d
  • Mohamad Buhari Naleem
    தீரன்
    வாழ்த்தப்படவேண்டிய எழுத்து
    • Like
    • Reply
    • 3d