தீராவெளி

Thursday, July 23, 2015

காலச்சுவடு

                                                                        
காலச்சுவடு பதிப்பக நூல்களுக்கு
இலங்கை அரசின் சாகித்திய விருது.-

2012ம் ஆண்டுக்கான இலங்கை அரசின் சாகித்திய விருது வழங்கும் விழா கடந்த அக்டோபரில் கொழும்பில் நடைபெற்றது. இதில் சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான விருது எம் ரிசான் சரிப் மொழிபெயர்த்த சுனந்த தேசப்பிரியாவின் அம்மாவின் ரகசியம் நாவலுக்கும் சிறந்த கவிதை நூலுக்கான விருது கஜந்தனின் நிலம் பிரிந்தவனின் கவிதை தொகுப்புக்கும் சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான விருது ஆர்.எம். நௌஸாத்தின் வெள்ளிவிரலுக்கும் வழங்கப்பட்டுள்ளன.

இம்மூன்று நூல்களும் காலச்சுவடு பதிப்பக வெளியீடாக கடந்த 2011 ஆம்’ஆண்டு வெளிவந்தவை. விருதுபெற்ற எழுத்தாளர்களுக்கு காலச்சுவடு தன் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

காலச்சுவடு. டிசம்பர் 2012. இதழ் 156- பக்கம் 79