தீராவெளி

Friday, September 23, 2022

Muhseen

 ‘தீரனுடன்’ ஒரு தீரா உரையாடல்.


பண்ணூலாசிரியர் அ.வா.முஹ்சீன் அவர்கள்

Abthul Wahid Muhseen


20.09.22 மாலை 6.00 மணியளவில் ‘தீரன்’ ஆர்.எம். நௌசாத்தை அவருடைய வீட்டில் சந்தித்தேன். அதன் பின்னரான ஆறு மணித்தியாலங்களும் அடுத்த நாள் காலை 6.00 மணியிலிருந்து 9.00 மணி வரையிலான மூன்று மணித்தியாலங்களும் உரையாடல்களால் நிரம்பின. 


இந்த நூற்றாண்டில், இலங்கை முஸ்லிம்களின் நாவல் எழுதியலை ஒரு புதிய தளத்திற்கு எடுத்து சென்றிருக்கின்ற நௌசாத்தை சந்தித்து உரையாட வேண்டும் என்ற என்னுடைய அவா அன்று நிறைவேறியது. நௌசாத்! நான் அனுபவித்த சிறந்த தருணங்களில் உங்களுடனான உரையாடலும் ஒன்று. 


வாய் ஓயாமல் நான் கதைத்த அனைத்தையும் பெரு மனது கொண்டு, தூக்கத்தையும் கட்டுப்படுத்தியவாறு கேட்டுக் கொண்டிருந்த நண்பர் நௌசாத்திற்கு நான் பெரும் நன்றி சொல்ல வேண்டும். உண்மையாகவே, இப்போது என் தலையின் பாரம் சற்றுக் குறைந்திருப்பதுபோல உணர்கிறேன்.


கடற்கரைப் பள்ளியூடாக என்னை அழைத்துச் சென்று, அப்பள்ளிவாசலை நான் பார்ப்பதற்கு உதவியமைக்கும் நன்றிகள்! பல் பிடுங்கிய வலியுடனும், எனை உபசரிப்பதற்காக கடுமையாக முயன்ற உங்கள் துணைவியாருக்கு என்னுடைய விசேட நன்றிகள்!