தீராவெளி

Saturday, May 30, 2015

விபத்து 2015.05.24

எருமை மாட்டில்  மாட்டிவிட்ட மாடு வெட்டி


கடந்த வாரம் ஒரு நாள் 2015.05.24ஆம் திகதி கொழும்பு செல்ல சம்மாந்துறை ரவ்சூன் ரவல்ஸ் பஸ்ஸில் ஏறினேன். விதி அறியாமல் ஏறினேன்..
ஒழுங்காகத்தான் போய்க் கொண்டிருந்தது..

இரவு 11.15 மானிய;ளவில் அம்பாறையிலிருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள புலுக்குனாவ என்ற காடுப் பகுதியில் வைத்து அந்த பாரிய விபத்து நடந்தது.
காட்டுக்குள்ளிருந்து சடுதியாக பாய்ந்து வந்த ஒரு எருமைக்கிடா எமது பஸ்ஸை மோத பஸ் பாரிய சத்தத்துடன் எருமையை மோதி ... அல்லோல கல்லோலப்பட்டு பஸ் எருமை மீது ஏறி குடை சாய்ந்து 12 அடி பள்ளத்தில் விழுந்தது. பஸ் உள்ளிருந்த அனைவருக்கும் பலத்த காயம் ....

என் தலையில் இரத்தம் விளாரிட ---
ஆத்திரமாக பஸ் சாரதியை தேடினேன்..
அடே மட்டுப் பண்டி ... இப்படியாடா பஸ் ஓடுவாய்.. எருமையில் மோதினாயடா.... மாடா... நீ யாருடா.. பேர் என்னடா என்று உலுக்கினேன்

அருகில் காயப்பட்டுக் கிடந்த ஒருவர் சொன்னார்,


தம்பி இவன் ரைவர் நம்மட ஊர்தான்.. நம்மட ~``கிடா மாடு வெட்டி``ர மகன்... இவன்ட பேரு நாம்பங்கண்டு