தீராவெளி

Wednesday, July 26, 2017

முஸ்டீன்


தீரன் --- A silent terror
------------------------------ 
முஸ்டீன்



எனக்குத் தீரனை அறிமுகப்படுத்தியது முஸ்லிம் குரல் பத்திரிகையில் வெளிவந்த பள்ளிமுனைக் கிராமத்தின் கதை என்ற தலைப்பில் தொடராக வந்த நாவல்தான். அதில் ஒரு அத்தியாயம்கூட மிஸ் ஆகிவிடக்கூடாது என்ற தீவிரத்துடன் நான் படித்துவிட்டுஅதை
 அப்படியே கிழித்து சேமித்து வைக்கும் அளவுக்கு ஈர்க்கச் செய்தவர்.தீரன் என்ற ஆர்.எம். நௌசாத்

. நாம் முகம் காணாமல் நேசித்த படைப்பாளிகள் நம்மோடு தொடர்புகொள்ளும் போது
அப்படியொரு பேரின்பத்தை அனுபவிப்பது வாஸ்தவம்தானே.  அறிந்திருப்பதும் அறிமுகமாகிக் கொள்வதும் பின்னர் நண்பராகஉறவாக குடும்பமாக இறுகி உணர்வதும் நடத்தையின்பால் விளையும் நேசத்தின் பிரதிபலிப்புக்களே, அப்படித்தான் என்னைவிட 23 வருடங்கள் மூத்த எனது தந்தையின் வயதையொத்தஆர்.எம்.நௌசாத் அவர்களின் தொடர்பும் எதிர்பார்ப்புகளில்லாத அன்பினால் அடைப்புக்குறியிடப்பட்டுத்
தொடர்கின்றது. 


எந்த முகாமுக்குள்ளும் அகப்பட்டுக் கொள்ளாமல் பயணித்துக்கொண்டிருப்பவர். இரண்டு நாவல்களையும் ஒரு சிறுகதைத் தொகுதியையும் தந்திருப்பவர். சோளப் பொறி போல கொஞ்சோண்டுஎண்ணெய்யில் பொரிந்து ஊதிப் பெருத்து வெண்மை காட்டி பார்வையைக் கவர்ந்துபின்னர் கொஞ்ச நேரத்தில் காற்றேறி ஜவ்வாகி எதற்கும்பிரயோசனப்படா
து குப்பைத் தொட்டியைத் தஞ்சமடையும் துரதிஸ்டத்திலிருந்து பல காத
தூரம் தள்ளியிருந்து தப்பித்து வாழும் ஓர் எளிமையான படைப்பிலக்கியவாதி. யாருடைய சிபாரிசும் பரிந்துரையும் சேர்டிபிகட்டும்இல்லாமலேயே காலச்சுவடு பதிப்பகம் இவரது மூன்று நூல்களைப் பதிப்பித்துஇருக்கின்றது. 

காலச்சுவட்டின் பதிப்பு நேர்த்தியும் வாசகர் வட்டமும் கவனம்பெறுபவை. சுந்தர ராமசாமி என்ற ஆளுமைதான் காலச்சுவட்டின் ட்ரேட் முத்திரை, தரச் சான்றிதழ் என்பது எனது அவதானம்.சுந்தர ராமசாமியின் நினைவாக நடாத்தப்பட்ட நாவல் போட்டியில்
முதல்பரிசு பெற்றதுதான் நட்டுமை. பல்வேறு போட்டிகளில் பரிசு பெற்றசிறுகதைகளின் தொகுப்புதான் வெள்ளிவிரல், 

இவை வெளிவந்த பின்னர்நௌஸாத்தின் புத்தகங்களை ஏன் பதிப்பித்தீர்கள் என்று கேள்விகேட்டு கண்ணனுக்கு நிச்சயம் இங்கிருந்து கடிதம் போயிருக்கவேண்டும். அல்லது அவரைப் பற்றிக் கண்ணனிடம் தாறுமாறாகமோசமான தரச் சான்றிதழ் வழங்கப்பட்டிருக்க வேண்டும். அதுவும் பிரதேச இலக்கியப் பொம்மைகளால் இவை மேற்கொள்ளப்பட்டிருக்கும்.அப்படி நடந்ததா இல்லையா என்பதைக் காலச்சுவடு கண்ணன்தான் தெளிவுறுத்த வேண்டும். ஏனெனில் இங்குள்ள சில முக்கிய புள்ளிகளின் இரத்தத்தில் ஊறிப் போய் நாய் வாலைப் போல நிமிர்த்திட முடியாத பண்புஅது. ஆயினும் காலச்சுவடு இதெற்கெல்லாம் ஆட்டம்கண்டுமுடிவெடுக்கும் வக்கற்ற கூனல் நிலையில் இல்லையென்பதும் எனதுஅவதானம். 

அண்மையில் கண்ணன் அவர்கள் வருகை தந்த போது பல்வேறுகுழுக்களைச் சந்தித்துவிட்டுச் சென்றதாக அறிந்தேன் நௌஸாதையம்சோலைக் கிளியையும் சந்திக்க அவர் விரும்பியிருக்கக் கூடும் ஆயினும் அது நிறைவேறியிருக்காது என்று நம்புகின்றேன். இதனால்தான் கிட்டத்தட்ட நான்கு மணித்தியாலங்கள் தொடர்ந்த சந்திப்பில்முக்கால்வாசி என்னைக் கதைக்க வைத்துக் கேட்டுக்கொண்டிருந்தார்.

விடைபெறும் போது அவரது நட்டுமை, வெள்ளிவிரல்கொல்வதெழுதுதல் 90 ஆகிய மூன்று புத்தகங்களையும்அன்பளிப்புச் செய்தார். அன்றைய பிராயாணத்திலேயே
கொல்வதெழுதுதல் 90 நாவலைப்படித்து முடித்துவிட்டேன், அத்துடன்
பாதிச் சிறுகதைகளையும் கூட,


நௌஸாத் ஆகிய தீரன் என்ற சைலன்ட் டெரரின் அடுத்த படைப்புக்களை ஆவலோடு எதிர்பார்க்கின்றேன். 

இப்படி அடுத்த படைப்பை ஆவலோடு எதிர்பார்க்க வைக்கும்

 படைப்பாளிகள் நம்மிடம் வெகு குறைவு என்பதை மனதிற் கொண்டு

 அவசரமாக செயற்படுங்கள்.

No comments:

Post a Comment