தீராவெளி

Saturday, November 19, 2022

பிஸ்தாமி அஹமட்....

 பிஸ்தாமி அஹமட்....

முகநூலில்

சாகித்திய விருது பெற்ற வெள்ளி விரலால் மட்டுமே எனக்குள் தங்க நினைவுகளைத்தந்த கிழக்கிழங்கையின் சிறந்த நாவலாசிரியர்களுள்ஒருவரான தீரன் R.M. Nowsaath அவர்களது முக்கிய ஐந்து நூல்கள் இவை


தீரன் எல்லோரையும் போன்ற எழுத்துக்களைக்கொண்டவரல்ல.

அவரது எழுத்துகளில்உயிர் உள்ளதுஉயிர்ப்பும் உயிரோட்டமும் உள்ளதுஉணர்வுள்ளது


இனசௌஜன்யத்தை

பேசும் உறவுப்பாலமாக அவை உள்ளன

ஆயிரம் உரைகளால் உபன்னியாசங்களால்

ஆக்க முடியாததை அவர் ஒரு கதைக்கூடாக

ஆக்கிவிடுவார்

அவரது எழுத்துக்களை

மக்கள் மயப்படுத்துவதால்

சகவாழ்வை

இன சௌஜன்யத்தை

அமைதியை

நல்லுறவை

வளர்க்கலாம்

இனங்களுக்கிடையிலான

நல்லுறவுக்கான

கலந்துரையாடல்களாக

ஆக்கலாம்

எழுத்தின் வலிமையை

உணர்த்தலாம்

எழுதப்படாமல் விடுபட்டவற்றை குறைநிரப்பு செய்யலாம்

அவரது கதைகளின்

கரு பாத்திரம்

சூழல்

மொழி என அத்தனையும்

உயர்ந்தவை

உன்னிப்பாக அவதானிக்க வேண்டியவை

வரலாற்றின் தவறுகளை

விடுபடல்களை

விபரீதங்களை

விளைவுகளை

மொழிவழியாக

இலக்கியம் வழியாக

எவ்வளவு சிறப்பாக

பகிரலாம் பதியலாம் என்பதற்கு தீரனின் எழுத்தும் சிறந்த சான்று

தீரன் நௌஸாத் இலக்கிய உலகில் மட்டுமன்றி ஈழத்திலும் தவிர்க்க முடியாத தன்னிகரற்ற நாமம்


தீரன் எழுதிதித்தீர்க்க

ஒரு மந்திரக்கோல்

மந்திர மொழி

மந்திர பாத்திரங்கள்

அவர்முன்னே

புதிது புதிதாக குவிந்து கிடக்கின்றன

No comments:

Post a Comment