Thursday, December 22, 2016
முஸ்டீன்---- தமிழ் மிரர் (1)
முஸ்டீன்---- தமிழ் மிரர் (1)
தீரன்- பதில்கள்
01. உங்களைப் பற்றிய உங்களின் மதிப்பீடு என்ன?
என் பட்டோலைகளை மீசானில் போட்டுள்ளேன். காலம் மறு தட்டில் படிக் கற்களை வைத்துக் கொண்டிருக்கிறது. எடை போட தாமதமாகும்
02. நீங்கள் எத்தனை பேருடன் முரண்பட்டுள்ளீர்கள்?
ஒரே ஒருவருடன்.... நபசுல் அம்மாராவுடன் மட்டுமே.
03. இலக்கியவாதிகளுக்கிடையேயான முரண்பாடுகளில் உங்களைக் கவர்ந்த நிகழ்வு எது?
இலக்கிய மேடைகளில் அவர்களின் ஓரங்க ஈரங்க நாடகக் கூத்துக்கள் என்னை மிகவும் கவர்வதுண்டு,
04. உங்களைப் பற்றி உங்கள் இலக்கிய நண்பர்கள் யார்யார் எழுதியிருக்கின்றார்கள் பெயர் விபரங்களுடன்?
இதற்குப் பிறகு எழதவே மாட்டார்களா.!!!
05. நீங்கள் யார் யாரைப் பற்றி அல்லது படைப்புக்களைப் பற்றி எழுதியிருக்கின்றீர்கள்?
விரல் விட்டு எண்ணி விடலாம்
06. யாரை மிகவும் மதிக்கின்றீர்கள்
தீரன் என்ற உள் மனிதனை
07. இதெல்லாம் ஒரு புத்தகமா என்று எதை வாசிக்கும் போது தோன்றியது?
நட்டுமை நாவலை வாசிக்கும் போது
08. இதுவல்லவோ புத்தகம் என்று எதை வாசிக்கும் போது தோன்றியது?
நட்டுமை நாவலை வாசிக்கும் போது
09. உங்களுக்குப் பிடித்த இலக்கிய சஞ்சிகை?
தூது
10. உங்கள் எழுத்தின் பொருளாதார மதிப்பு என்ன? ஒரு கவிதைக்கு, சிறுகதைக்கு, ஆய்வுக்கு அல்லது வேறேதுமோர் படைப்புக்கான விலை என்ன?
சாகித்திய விருதுக்காக ரூபா 55000- தந்தார்கள்
11. இலக்கியத்துக்கான நோபல் பரிசு பற்றிய தங்களின் அபிப்பிராயம்?
நாய்க்கு ஏன் தோல் தேங்காய்..?
12. உங்களக்கு என்னென்ன மொழிகளில் பாண்டித்தியம் இருக்கின்றது?
பழங்கால சுரியானி மொழியில்..
13. முகநூல், வலைப்பூ, இணையம் போன்ற இலத்திரணியற் பரப்பில் மலிந்துகிடக்கும் எழுத்தாக்கங்கள் குறித்து?
ஒவ்வொரு இணையக் கடையாக ஏறி ஒன்றும் வாங்கப் பிடிக்காமல் இறங்கிக் கொண்டிருக்கிறேன் ..
14. உங்களின் குடும்பம் பற்றி மிகச் சுருக்கமாக ஐந்தாறு வரிகளில்?
சரியாக கேட்டீர்கள் ஐந்தாறு வரிகளில் என்று- ஆறே பேர்தாம். நான்-- மனைவி- மூன்று பிள்ளைகள்—ஒரு வரிப் பூனைகுட்டி
15. எந்த இலக்கியவாதியின் முகத்தில் ஓங்கிக் குத்த வேண்டும் என்று தோன்றும்?
தானே அச்சடித்த தனது நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழில் தன பெயருக்கு முன்னால் பிரபல எழுத்தாளர் என்ற அடைமொழி சேர்த்தவனை இப்போதும் தேடிக் கொண்டிருக்கிறேன் ...

பன்னூலாசிரியர். எம்.எம்.எம். நூறுல்ஹக்.---செந்தூரம்- நேர்காணல் -
செந்தூரம்- நேர்காணல் -
செந்தூரம்-(27.02.2011 )
போட்டிகளில் பரிசுபெறாது திரும்பிவந்த
எனது சிறுகதைகளை
அதிகமாக நேசிக்கின்றேன்.
நேர்காணல்.- பன்னூலாசிரியர். எம்.எம்.எம். நூறுல்ஹக்.
சாய்ந்தமருதைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட தீரன்.ஆர்.எம். நௌஸாத் ஆளுமைமிக்க ஒரு புனைவாளர் ஆவார். தபால் அதிபராகத் தொழில்புரியும் இவர் சுமார் முப்பது வருட எழுத்துலக வாழ்வில் இருப்புக் கொண்டவர். ~வல்லமை தாராயோ..| (2000) சிறுகதைத் தொகுதிää ~நட்டுமை| (2009) நாவல்ää ஆகிய இரு நூல்களை தனது அடையாளமாகத் தந்திருக்கும் இவர் கவிதைகளுக்காள தனிச் சிற்றிதழாக தூது என்ற சஞ்சிகையின் 16 இதழ்களை வெளியிட்டதோடு தனது பிரதேசத்திலிருந்து இதுவரை வெளிவந்த சிற்றிதழ்கள் எதுவும் இவ்வெளியீட்டுச் சாதனையை முறியடிக்கவில்லை.
நமது இலங்கையின் தமிழ்மொழிப் படைப்பாளிகளுள் கவிதை சிறுகதை நாவல் கட்டுரை போன்ற பன்முக ஆளுமை கொண்டு தடம் பதித்த எழுத்தாளர்கள் மிகக்குறைவு. ஆந்த வரிசையில் தீரன்.ஆர்.எம். நௌஸாத் தன்னை இடம்பிடிக்கச் செய்தவர்.
மட்டுமன்றி தனது சந்தக் கவிதைகளில் ரசிகர்களைக் கட்டி வைத்து கவிதை பாடிய ஒரு கவிஞருமாவார். மற்றும் வீரியமிக்க புனைவு இலக்கியத்தின் ஊடாக தன்னைத் திரும்பிப் பார்க்க வைத்த வல்லவர். அவருடனான நேர்காணல் இது-
தீரன்.ஆர்.எம். நௌஸாத்
படைப்பு பற்றிய உங்கள் பார்வை…?
அது எவ்வகையான படைப்பாக இருந்தாலும் ஒருமின்னலைப் போல பளிச்சிட்டு அது மனதில் கருக்கொள்கிறது. இனிஅதில் செய்ய வேண்டியதெல்லாம் செதுக்கல்களே.. இதற்கு வலிமையான ஒரு கருமென்பொருளும் அதற்கேற்ற தனமமைப்பு நோக்குநிலை- வார்ப்புக்கள்- போன்ற வன்பொருட்களும் தேவையாகின்றன. ஏல்லாம் இயைந்து வருகின்றபோது அது வெற்றிபெற்ற படைப்பாகின்றது.
உங்கள் சிறுகதைகள் கொண்டிருக்கும் வித்தியாசமான கருப்பொருட்கள் தொடர்பில்…?
ஒரு சிறுகதையில் கையாண்ட உத்திகள் எவற்றையும் அடுத்த கதையில் நான் கையாள்வதில்லை. எழுதிய ஒரு சிறுகதையின் கருவை விட்டும் முழுமையாக வெளிப்பட்டு இன்னொரு எழுதப்படாத கதையின் தளத்துக்குள் வருகின்றேன். தளமாறுபாடுகளும் வித்தியாசமான வார்ப்பு முறைகளும் பலவீனமான கருக்களைக் கூட வன்மையடன் கட்டமைக்கின்றன.
தவிரவும் வாசகனுக்கு சொல்லவேண்டிய செய்தி என்னவாக இருப்பினும் வாசகனைக் கதைக்குள் ஈர்த்தல் முக்கியமானது. அதற்கு வித்தியாசமான வாசல்கள் திறக்கப்படல்வேண்டும்.. வாசகனின் கவனம் நமது எழுத்தால் திருடப்படும் போது நமது செய்தியை அவனது உள்ளத்தில் இலேசாக ஊன்றிவிட முடிகிறது.. இது எனது தனிப்பட்ட உத்திதான். கதை சொல்லிகளிடையே வேறுபாடுகள் உண்டு..
ஒரு படைப்பாளியின் இறதி எல்லை எதுவெனக் கருதுகிறீர்கள்..?
ஒரு மனிதனின் வரலாற்று எச்சம் அவனது மரணத்தின் பின் பெறப்படுகின்றது.. அதேபோல் ஒரு படைப்பாளியின் எச்சம் அவன் எதைப்படைத்துவிட்டுச் செல்கின்றான் என்பதைப் பொறுத்தது.. காலஓட்டத்தில் அவன் விட்டுச்சென்ற படைப்புக்களின் ஊடாகNவு அவன் மீண்டும் மீண்டும் உயிர்ப்பிக்கப்படுகின்றான்.. படைப்பாளிக்கு ஒருபோதும் மரணமில்லை.. அவன்தன்படைப்புக்கள் ஊடே வாழ்கிறான்.. பல தலைமுறை இடைவெளிகளிலும் சஞ்சரிக்கின்றான்.. அவை வாசிக்கப்படும் போதெல்லாம் வாழ்கிறான்.
உங்கள் நாவல்துறை முயற்சிகள்…?
முஸ்லிம் குரலில் வெளியான ~பள்ளிமுனைக்கிராமத்தின்கதை| நாவலின் தளம் ஒலுவில் கிராமத்தில் போடப்பட்டது.. பரிசுபெற்ற ~நட்டுமை| நாவலின் கரு சம்மாந்துறையின் வயல்வெளிகளிலிருந்து கிடைத்தது.. ஈழநாதம் இதழில் வெளியான ~வானவில்லே ஒரு கவிதை கேளு| குறுநாவலின் வார்ப்பு கல்லடிப் பாலத்தில் உருவானது.. ~சாந்தமாமா| குறுநாவல் தீகவாபி விகாரையில் கருக்கொண்டது.. இப்படிப் பல கருக்கள்…பல தளங்கள்.. எனினும் இவை வடிவத்தாலும் செதுக்குதல்களாலும் ஒருபோதும் முழுமையுறுவதாயில்லை.. ஒன்றுமே எனக்கு நிறைவு தருவதாயுமில்லை…
சிற்;றிதழ் துறையில் உங்கள் பங்களிப்பு எப்படி..?
அப்படி ஒன்றும் பெரிதாக இல்லை.. 1985களின் போர்க்காலச்சூழலில்
உற்பவித்த ரோணியோக் கவியேடுகளில் ~அன்படன்ää| ~இன்னாலில்லாஹி|..ää~தீ.வை.|ää என்றெல்லாம் தூள்கிளப்பிக் கொண்டிருந்தாலும் தூது என்ற பெயரில் 16 இதழ்களை அச்சில் கொண்டு வந்தேன்.. இது ஒரு கவிதைச் சிற்றிதழ். தூதில் ஆசிரியர் தலையங்கங்களை குறும்பாää வெண்பா வடிவங்களில் எழுதிப் பரிசோதித்தேன்.. மரபோ புதிதோ ~கவிதை நமக்குத் தொழில்..| என்றாகி விட்டிருந்தது.
புpன்னர் ஹைக்கூ கவிதைகளுக்காகவே ~புள்ளி| என்ற இலங்கையின் முதல் ஹைக்கூ கவியேட்டை றாபிக்குடன் இணைந்து கொணர்ந்Nதூம்.. அதன் பின்னர் ~இரண்டாவது பக்கம்.|.. இதில் ஐhபிர்ääநகீபு நான்.. மிக வித்தியாசமான புதக்கவிதைகள் விதைத்தோம்.. இப்படிச் சில முயற்சிகள்..
உங்கள் வானொலி நாடகப் பங்களிப்பின் வகிபாகம் என்ன..?
இலங்கை வானொலி முஸ்லிம் சேவையின் வானொலி நாடகங்களுக்காக மக்கள் காத்துக் கிடந்த காலமொன்று இருந்தது.. 1982 தொடக்கம் ஏறக்குறைய 14 நாடகங்கள்தான் எழுதியிருக்கிறேன்.. அவற்றில் ~ஒருகிராமத்தின் கவிதை..| நாடகம்ää இன்றுவரை இடையிடையே மறுஒலிபரப்புச் செய்யப்பட்டு வருகின்றது. ~காகிதஉறவுகள்| நாடகம் 2002 ல்.. பிரான்ஸ் தமிழ்வானொலியும் தினக்குரல் பத்திரிகையும் இணைந்து நடத்திய உலக வானொலிநாடகப் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்றது..
பத்தி எழுத்துத் துறையோடு உங்களை பிணைப்பு எவ்வாறு..?
விடிவெள்ளி வாரஇதழில் ~ஒரு சிற்றெறும்புக்கும் நிழல் இருக்கிறது..| என்ற தலைப்பில் பாவலரின் படைப்புலகில் சஞ்சரித்தல் என்ற தொடரையும் நல்லுறவு இதழில் ~விழித்திரையில் விரியும் வெண்திரை| என்ற தலைப்பில் பிறமொழிச் சினமாக்களின் அறிமுகத் தொடரையும் யாத்ரா சஞ்சிகையில் ~கொல்வதெழுதுதல|; என்ற சமுக விவரணப் பகுதியையும் சிலகாலம் எழுதிவந்தேன்..
உங்கள் புனைவுகள் பரிசுகளைச் சந்தித்த அனுபவம்..?
மலேசிய நண்பன் இதழ் நடத்திய சிறுகதைப் போட்டிää தமிழ்நாடு சென்னை சுஐhதா அறக்கட்டளைääநடத்திய அறிவியல் விஞ்ஞானப் புனைவுபோட்டி நாகர்கோயில் காலச்சுவடு இதழ் நடத்திய சுந்தரராமசாமி 75 நாவல் போட்டி பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கீதம் இலக்கியப் போட்டிää அரச ஊழியருக்கான ஆக்கற்திறன் போட்டிää ஞானம்ää அமுது சஞ்சிகைகள் நடத்திய சிறுகதைப் போட்டிகள் போன்ற சுமார் 19 இலக்கியப் போட்டிகளில் பற்பல பரிசுகள் பெற்றிருப்பினும் சில போட்டிகளில் பரிசு பெறாது திரும்பிவந்த எனது சிறுகதைகளை அதிகமாக நேசிக்கின்றேன்..
காரியப்பர்கள் வரலாறு எழுதுவதாக அறிகின்றோம்.. அதன் பின்னணி என்ன..?
இது ஒரு தற்செயல் விபத்துத்தான்.. என் தொழில்நிமித்தம் நான் சந்தித்த சிறிமைத்திதிரிபோதி நாயக்கரான போகொல்லாநந்த தேரர் அவர்கள் இப்பகுதியிலுள்ள காரியப்பர்கள் பலரை என்னிடம் விசாரித்த போது அவர்களில் பலரை எனக்குத் தெரிந்திரு;க்கவில்லை.. காரியப்பர்கள் பற்றி அவர் பல வரலாற்றுத் தொடர்புகளைக் கூறியபோது எனது அறியாமையின் மீது கோபமாக இருந்தது.. அக்கணமே இதனை அறியத் தீர்மானித்தேன்..
ஐந்துவருடகால சிரமமிக்க தேடலகளின் முடிவில் இலங்கை முஸ்லிம்களுள் காரியப்பர்கள் என்ற பெயருடன் விளங்கும் என் இரத்த உறவினர்ப் பரம்பரையை அறியமுடிந்தது.. கி;பி; 1400களில் ஆரம்பமாகும் இக்காரியப்பர் பரம்பரை புராதன காலத்து சிங்கள மன்னர் காலம் தொடக்கம் இன்றுவரை இலங்கை அரசியல் மற்றம் சமுகவியலில் அவர்களின் வகிபாகம் பற்றிய விவரணமே காரியப்பர்கள் வரலாற என்னும் எனது ஆய்வு நூல் ஆகும். இது தற்போது அச்சில் இருக்கிறது…




நவாஸ் சௌபி---‘ எதுவரை-இதழில்...
‘
எதுவரை-இதழில்....
ஷோபா சக்தியின் எம்.ஜி.ஆர் கொலை வழக்குச் சிறுகதையின் மொழிப் பயன்பாடு இன்னும் 20 வருடங்களாகக் கடந்து வாசிப்புச் செய்யக் கூடிய ஒரு எழுத்துப் பண்பாட்டை இப்போதே படம் போடுகிறது. ஷோபா சக்தியின் சிறுகதையை மொழிக் கையாள்கையின் ளுமையோடு நோக்குவது போல்
தீரன் ஆர்.எம். நௌசாத் எழுதிய
‘விட்டு விடுதலையாகி’ எனும் சிறுகதையை கதை
செல்லும் நுட்ப ஆளுமையாகவும்
மதிப்பிடுகிறேன்.
இவ்வாறு எதுவரை சஞ்சிகையின் உள்ளடக்கம் மற்றும் வடிவமைப்புக் குறித்து நாம் விரிவாகப் பேசவேண்டிய இலக்கிய அரசியல்கள் எமக்குள் பல வழிகளையும் திறந்துவிடுகிறது. இத்தகைய காத்திரமான ஒரு இலக்கிய அரசியலை பேசும் எதுவரையின் குரல் நின்றுவிடாது அதனை யாரும் நசுக்கிவிடாது தொடரும் வல்லமைகளை கொள்ள வேண்டும்.
நவாஸ் சௌபி சாய்ந்தமருது
எதுவரை-இதழில்....
ஷோபா சக்தியின் எம்.ஜி.ஆர் கொலை வழக்குச் சிறுகதையின் மொழிப் பயன்பாடு இன்னும் 20 வருடங்களாகக் கடந்து வாசிப்புச் செய்யக் கூடிய ஒரு எழுத்துப் பண்பாட்டை இப்போதே படம் போடுகிறது. ஷோபா சக்தியின் சிறுகதையை மொழிக் கையாள்கையின் ளுமையோடு நோக்குவது போல்
தீரன் ஆர்.எம். நௌசாத் எழுதிய
‘விட்டு விடுதலையாகி’ எனும் சிறுகதையை கதை
செல்லும் நுட்ப ஆளுமையாகவும்
மதிப்பிடுகிறேன்.
இவ்வாறு எதுவரை சஞ்சிகையின் உள்ளடக்கம் மற்றும் வடிவமைப்புக் குறித்து நாம் விரிவாகப் பேசவேண்டிய இலக்கிய அரசியல்கள் எமக்குள் பல வழிகளையும் திறந்துவிடுகிறது. இத்தகைய காத்திரமான ஒரு இலக்கிய அரசியலை பேசும் எதுவரையின் குரல் நின்றுவிடாது அதனை யாரும் நசுக்கிவிடாது தொடரும் வல்லமைகளை கொள்ள வேண்டும்.
நவாஸ் சௌபி சாய்ந்தமருது
-முஸ்டீன்---------தீரன் என்ற சைலன்ட் டெரர் -
தீரன் என்ற சைலன்ட் டெரர்
--முஸ்டீன்--
http://simproduction2002.blogspot.com/
இலக்கிய உலகம் எத்தனையோ படைப்பாளிகளைக் கண்டுவிட்டது.
பம்மாத்துக்காட்டிப் பீத்தித் திரியும் பன்னிக் குட்டிகளையும், திருட்டு
ஆசாமிகளையும், வீர வசனமும் கோட்பாடுகளும் பேசித்திரியும்
போதகர்களையும், அவிழ்த்துப்போட்டு நிர்வானமாய் உடலை
வர்ணித்து ஆபாசமாய் எழுதிப் புகழ்பெறும் பெண்ணியக்
குஞ்சுகளையும், முதுகு சொரிந்தே விரல் தேய்ந்து ஊராப்பட்ட
வலிசல்களையெல்லாம் ஒன்று திரட்டி பட்டமும் சேலையும் போர்த்தி
தனிமரமாகும் அச்சத்தில் தோப்பு செய்து குறளி வித்தை காட்டும்
வித்துவர்களையும், முகாம் அமைத்து பேத்தைக் குட்டிகள் போல
தம்மைப் பெரியவர்களாகக் காட்டும் அற்பர்களையும் அப்பப்பா... இது போல
இன்னும் பல.. முடியல .....இது இப்படியே இருக்க,
பம்மாத்துக்காட்டிப் பீத்தித் திரியும் பன்னிக் குட்டிகளையும், திருட்டு
ஆசாமிகளையும், வீர வசனமும் கோட்பாடுகளும் பேசித்திரியும்
போதகர்களையும், அவிழ்த்துப்போட்டு நிர்வானமாய் உடலை
வர்ணித்து ஆபாசமாய் எழுதிப் புகழ்பெறும் பெண்ணியக்
குஞ்சுகளையும், முதுகு சொரிந்தே விரல் தேய்ந்து ஊராப்பட்ட
வலிசல்களையெல்லாம் ஒன்று திரட்டி பட்டமும் சேலையும் போர்த்தி
தனிமரமாகும் அச்சத்தில் தோப்பு செய்து குறளி வித்தை காட்டும்
வித்துவர்களையும், முகாம் அமைத்து பேத்தைக் குட்டிகள் போல
தம்மைப் பெரியவர்களாகக் காட்டும் அற்பர்களையும் அப்பப்பா... இது போல
இன்னும் பல.. முடியல .....இது இப்படியே இருக்க,
வீரியமிக்க வாசிப்பு, ஆழமான பார்வை, தேடிப்படித்தும் போதாமை
யை உணர்ந்து தம்மைச் சிற்றெறும்பாய் உணர்ந்து காரியமாற்றுகி
ன்ற, பேரையும் புகழையும் பாராட்டையும் எதிர்பார்க்காமல் அமைதியாகப்
படைப்பிலக்கியத்தில் ஆழம் தேடிப் பாய்கின்ற பெரு நதிகளும்
தன்பாட்டில் சலசலப்பில்லாமல் ஓடிக்கொண்டேதான் இருக்கின்றன.
அவை யாருடைய பார்வையிலும் உருத்திக் கொண்டிருப்பதில்லை.
ஓர் அழகிய சித்திரம் போல ஈர்க்கும் தன்மையோடு காலாகாலத்திற்கும்
மொனாலிசா மாதிரி நின்று நிலைக்கும்.
யை உணர்ந்து தம்மைச் சிற்றெறும்பாய் உணர்ந்து காரியமாற்றுகி
ன்ற, பேரையும் புகழையும் பாராட்டையும் எதிர்பார்க்காமல் அமைதியாகப்
படைப்பிலக்கியத்தில் ஆழம் தேடிப் பாய்கின்ற பெரு நதிகளும்
தன்பாட்டில் சலசலப்பில்லாமல் ஓடிக்கொண்டேதான் இருக்கின்றன.
அவை யாருடைய பார்வையிலும் உருத்திக் கொண்டிருப்பதில்லை.
ஓர் அழகிய சித்திரம் போல ஈர்க்கும் தன்மையோடு காலாகாலத்திற்கும்
மொனாலிசா மாதிரி நின்று நிலைக்கும்.
எனக்குத் தீரனை அறிமுகப்படுத்தியது
முஸ்லிம் குரல் பத்திரிகையில்
வெளிவந்த பள்ளிமுனைக் கிராமத்தின்
கதை
என்ற தலைப்பில் தொடராக
வந்த நாவல்தான். அதில் ஒரு அத்தியாயம்
கூட
மிஸ் ஆகிவிடக்கூடாது
என்ற தீவிரத்துடன் நான் படித்துவிட்டு
அதை
அப்படியே கிழித்து சேமித்து
வைக்கும் அளவுக்கு ஈர்க்கச் செய்தவர்
என்.ஏ.தீரன் என்ற ஆர்.எம். நௌசாத்
முஸ்லிம் குரல் பத்திரிகையில்
வெளிவந்த பள்ளிமுனைக் கிராமத்தின்
கதை
என்ற தலைப்பில் தொடராக
வந்த நாவல்தான். அதில் ஒரு அத்தியாயம்
கூட
மிஸ் ஆகிவிடக்கூடாது
என்ற தீவிரத்துடன் நான் படித்துவிட்டு
அதை
அப்படியே கிழித்து சேமித்து
வைக்கும் அளவுக்கு ஈர்க்கச் செய்தவர்
என்.ஏ.தீரன் என்ற ஆர்.எம். நௌசாத்
மிக அண்மையில் மீண்டும் ஞானம் சஞ்சிகையில் புத்தளத்தைச்
சேர்ந்த பரோபகாரி ஒருவர் எனது ஹராங்குட்டி என்ற சிறுகதைத்
தொகுதி மீதான
விமர்சனத்தை சிறுபிள்ளைத் தனமாக முன் வைக்க, அதற்கு நானும்
ஒரு பீரங்கி வேட்டுத் தீர்க்க, இன்னும் பலரும் பலதும் எழுத, இப்படியே
நான்கு மாதங்களாகிவிட்டது. அந்தத் தடுமல் பற்றி யாராவது
ஏதாவது எழுதிக் கொண்டுதான் இருக்கின்றார்கள். அதன் பயனாய்
விளைந்ததுதான் இவரின் நேரடித் தொடர்பு. அவராகவே பேசிய போது
அதுவோர் இன்ப அதிர்ச்சிதானே. நாம் முகம் காணாமல்
நேசித்த படைப்பாளிகள் நம்மோடு தொடர்புகொள்ளும் போது
அப்படியொரு பேரின்பத்தை அனுபவிப்பது
வாஸ்தவம்தானே.
சேர்ந்த பரோபகாரி ஒருவர் எனது ஹராங்குட்டி என்ற சிறுகதைத்
தொகுதி மீதான
விமர்சனத்தை சிறுபிள்ளைத் தனமாக முன் வைக்க, அதற்கு நானும்
ஒரு பீரங்கி வேட்டுத் தீர்க்க, இன்னும் பலரும் பலதும் எழுத, இப்படியே
நான்கு மாதங்களாகிவிட்டது. அந்தத் தடுமல் பற்றி யாராவது
ஏதாவது எழுதிக் கொண்டுதான் இருக்கின்றார்கள். அதன் பயனாய்
விளைந்ததுதான் இவரின் நேரடித் தொடர்பு. அவராகவே பேசிய போது
அதுவோர் இன்ப அதிர்ச்சிதானே. நாம் முகம் காணாமல்
நேசித்த படைப்பாளிகள் நம்மோடு தொடர்புகொள்ளும் போது
அப்படியொரு பேரின்பத்தை அனுபவிப்பது
வாஸ்தவம்தானே.
இது போல பலரது தொடர்பையும் எனக்கு ஏற்படுத்தித் தந்த புத்தளத்துப்
பரோபகாரிக்கு எனது நன்றிகள்.
பரோபகாரிக்கு எனது நன்றிகள்.
அறிந்திருப்பதும் அறிமுகமாகிக் கொள்வதும் பின்னர் நண்பராக
உறவாக குடும்பமாக இறுகி உணர்வதும் நடத்தையின்பால் விளையும்
நேசத்தின் பிரதிபலிப்புக்களே, அப்படித்தான் என்னைவிட 23 வருடங்கள்
மூத்த எனது தந்தையின் வயதையொத்த
ஆர்.எம்.நௌசாத் அவர்களின் தொடர்பும் எதிர்பார்ப்புகளில்லாத
அன்பினால் அடைப்புக்குறியிடப்பட்டுத்
தொடர்கின்றது.
உறவாக குடும்பமாக இறுகி உணர்வதும் நடத்தையின்பால் விளையும்
நேசத்தின் பிரதிபலிப்புக்களே, அப்படித்தான் என்னைவிட 23 வருடங்கள்
மூத்த எனது தந்தையின் வயதையொத்த
ஆர்.எம்.நௌசாத் அவர்களின் தொடர்பும் எதிர்பார்ப்புகளில்லாத
அன்பினால் அடைப்புக்குறியிடப்பட்டுத்
தொடர்கின்றது.
அடெல்ஸ் ஒன்லி என்ற வயது வந்தவர்களுக்கு மட்டும் எனச் சிறிதாகப்
பொறிக்கப்பட்டு நான்கெழுத்து விளக்கங்களுடனும் கவர்ச்சிப்
படத்துடனும் அடிக்கடி ஒட்டப்பட்டுக் கிழிக்கப்படும், கள்ளப்
பார்வைகளுக்கு மட்டும் தீனியாகும் நீலப்படப் போஸ்டர்கள் போல,
சிலரின் இலக்கியமும் சில இலக்கியவாதிகளும் தொங்கிக் கொண்டிரு
க்கும் முகநூல் சுவர்களில் கூட இவர் இன்னும் ஒட்டப்படவில்லை.
அபோகலிப்டா, அவதார், ப்ளக், கலர் ஒப் பெரடைஸ் போன்ற
கருத்தியல், வசூல், தொழிநுட்பப் பிரமாண்டம், அழகியல், ஆகர்சனமிக்க
படங்களுக்கான போஸ்டர்கள் போலும் தரமான படைப்பும்
படைப்பிலக்கியவாதியும் முகநூல் சுவர்களில் தொங்காமலில்லை.
பொறிக்கப்பட்டு நான்கெழுத்து விளக்கங்களுடனும் கவர்ச்சிப்
படத்துடனும் அடிக்கடி ஒட்டப்பட்டுக் கிழிக்கப்படும், கள்ளப்
பார்வைகளுக்கு மட்டும் தீனியாகும் நீலப்படப் போஸ்டர்கள் போல,
சிலரின் இலக்கியமும் சில இலக்கியவாதிகளும் தொங்கிக் கொண்டிரு
க்கும் முகநூல் சுவர்களில் கூட இவர் இன்னும் ஒட்டப்படவில்லை.
அபோகலிப்டா, அவதார், ப்ளக், கலர் ஒப் பெரடைஸ் போன்ற
கருத்தியல், வசூல், தொழிநுட்பப் பிரமாண்டம், அழகியல், ஆகர்சனமிக்க
படங்களுக்கான போஸ்டர்கள் போலும் தரமான படைப்பும்
படைப்பிலக்கியவாதியும் முகநூல் சுவர்களில் தொங்காமலில்லை.
எந்த முகாமுக்குள்ளும் அகப்பட்டுக் கொள்ளாமல் பயணித்துக்
கொண்டிருப்பவர். இரண்டு நாவல்களையும் ஒரு சிறுகதைத்
தொகுதியையு
ம் தந்திருப்பவர். சோளப் பொறி போல கொஞ்சோண்டு
எண்ணெய்யில்
பொரிந்து ஊதிப் பெருத்து வெண்மை காட்டி பார்வையைக் கவர்ந்து
பின்னர் கொஞ்ச நேரத்தில் காற்றேறி ஜவ்வாகி எதற்கும்
பிரயோசனப்படா
து குப்பைத் தொட்டியைத் தஞ்சமடையும் துரதிஸ்டத்திலிருந்து பல காத
தூரம் தள்ளியிருந்து தப்பித்து வாழும் ஓர் எளிமையான படைப்பிலக்
கியவாதி. யாருடைய சிபாரிசும் பரிந்துரையும் சேர்டிபிகட்டும்
இல்லாமலே
யே காலச்சுவடு பதிப்பகம் இவரது மூன்று நூல்களைப் பதிப்பித்து
இருக்கின்றது.
கொண்டிருப்பவர். இரண்டு நாவல்களையும் ஒரு சிறுகதைத்
தொகுதியையு
ம் தந்திருப்பவர். சோளப் பொறி போல கொஞ்சோண்டு
எண்ணெய்யில்
பொரிந்து ஊதிப் பெருத்து வெண்மை காட்டி பார்வையைக் கவர்ந்து
பின்னர் கொஞ்ச நேரத்தில் காற்றேறி ஜவ்வாகி எதற்கும்
பிரயோசனப்படா
து குப்பைத் தொட்டியைத் தஞ்சமடையும் துரதிஸ்டத்திலிருந்து பல காத
தூரம் தள்ளியிருந்து தப்பித்து வாழும் ஓர் எளிமையான படைப்பிலக்
கியவாதி. யாருடைய சிபாரிசும் பரிந்துரையும் சேர்டிபிகட்டும்
இல்லாமலே
யே காலச்சுவடு பதிப்பகம் இவரது மூன்று நூல்களைப் பதிப்பித்து
இருக்கின்றது.
காலச்சுவட்டின் பதிப்பு நேர்த்தியும் வாசகர் வட்டமும் கவனம்
பெறுபவை. சுந்தர ராமசாமி என்ற ஆளுமைதான் காலச்சுவட்டின்
ட்ரேட் முத்திரை, தரச் சான்றிதழ் என்பது எனது அவதானம்.
சுந்தர ராமசாமியின் நினைவாக நடாத்தப்பட்ட நாவல் போட்டியில்
முதல்பரிசு பெற்றதுதான் நட்டுமை. பல்வேறு போட்டிகளில் பரிசு
பெற்ற
சிறுகதைகளின் தொகுப்புதான் வெள்ளிவிரல், இவை வெளிவந்த
பின்னர்
நௌஸாத்தின் புத்தகங்களை ஏன் பதிப்பித்தீர்கள் என்று கேள்வி
கேட்டு கண்ணனுக்கு நிச்சயம் இங்கிருந்து கடிதம் போயிருக்க
வேண்டும். அல்லது அவரைப் பற்றிக் கண்ணனிடம் தாறுமாறாக
மோசமான தரச் சான்றிதழ் வழங்கப்பட்டிருக்க வேண்டும். அதுவும்
பிரதேச
இலக்கியப் பொம்மைகளால் இவை மேற்கொள்ளப்பட்டிருக்கும்.
அப்படி நடந்ததா இல்லையா என்பதைக் காலச்சுவடு கண்ணன்தான்
தெளிவுறுத்த வேண்டும். ஏனெனில் இங்குள்ள சில முக்கிய புள்ளிகளின்
இரத்தத்தில் ஊறிப் போய் நாய் வாலைப் போல நிமிர்த்திட முடியாத பண்பு
அது. ஆயினும் காலச்சுவடு இதெற்கெல்லாம் ஆட்டம்கண்டு
முடிவெடுக்கும் வக்கற்ற கூனல் நிலையில் இல்லையென்பதும் எனது
அவதானம்.
பெறுபவை. சுந்தர ராமசாமி என்ற ஆளுமைதான் காலச்சுவட்டின்
ட்ரேட் முத்திரை, தரச் சான்றிதழ் என்பது எனது அவதானம்.
சுந்தர ராமசாமியின் நினைவாக நடாத்தப்பட்ட நாவல் போட்டியில்
முதல்பரிசு பெற்றதுதான் நட்டுமை. பல்வேறு போட்டிகளில் பரிசு
பெற்ற
சிறுகதைகளின் தொகுப்புதான் வெள்ளிவிரல், இவை வெளிவந்த
பின்னர்
நௌஸாத்தின் புத்தகங்களை ஏன் பதிப்பித்தீர்கள் என்று கேள்வி
கேட்டு கண்ணனுக்கு நிச்சயம் இங்கிருந்து கடிதம் போயிருக்க
வேண்டும். அல்லது அவரைப் பற்றிக் கண்ணனிடம் தாறுமாறாக
மோசமான தரச் சான்றிதழ் வழங்கப்பட்டிருக்க வேண்டும். அதுவும்
பிரதேச
இலக்கியப் பொம்மைகளால் இவை மேற்கொள்ளப்பட்டிருக்கும்.
அப்படி நடந்ததா இல்லையா என்பதைக் காலச்சுவடு கண்ணன்தான்
தெளிவுறுத்த வேண்டும். ஏனெனில் இங்குள்ள சில முக்கிய புள்ளிகளின்
இரத்தத்தில் ஊறிப் போய் நாய் வாலைப் போல நிமிர்த்திட முடியாத பண்பு
அது. ஆயினும் காலச்சுவடு இதெற்கெல்லாம் ஆட்டம்கண்டு
முடிவெடுக்கும் வக்கற்ற கூனல் நிலையில் இல்லையென்பதும் எனது
அவதானம்.
அண்மையில் கண்ணன் அவர்கள் வருகை தந்த போது பல்வேறு
குழுக்களைச் சந்தித்துவிட்டுச் சென்றதாக அறிந்தேன் நௌஸாதையம்
சோலைக் கிளியையும் சந்திக்க அவர் விரும்பியிருக்கக் கூடும்
ஆயினும்
அது நிறைவேறியிருக்காது என்று நம்புகின்றேன். இதனால்
தான் கிட்டத்தட்ட நான்கு மணித்தியாலங்கள் தொடர்ந்த சந்திப்பில்
முக்கால்வாசி என்னைக் கதைக்க வைத்துக் கேட்டுக்
கொண்டிருந்தார்.
விடைபெறும் போது அவரது நட்டுமை, வெள்ளிவிரல்,
கொல்வதெழுதுதல் 90 ஆகிய மூன்று புத்தகங்களையும்
அன்பளிப்புச் செய்தார். அன்றைய பிராயாணத்திலேயே
கொல்வதெழுதுதல் 90 நாவலைப்படித்து முடித்துவிட்டேன், அத்துடன்
பாதிச் சிறுகதைகளையும் கூட,
குழுக்களைச் சந்தித்துவிட்டுச் சென்றதாக அறிந்தேன் நௌஸாதையம்
சோலைக் கிளியையும் சந்திக்க அவர் விரும்பியிருக்கக் கூடும்
ஆயினும்
அது நிறைவேறியிருக்காது என்று நம்புகின்றேன். இதனால்
தான் கிட்டத்தட்ட நான்கு மணித்தியாலங்கள் தொடர்ந்த சந்திப்பில்
முக்கால்வாசி என்னைக் கதைக்க வைத்துக் கேட்டுக்
கொண்டிருந்தார்.
விடைபெறும் போது அவரது நட்டுமை, வெள்ளிவிரல்,
கொல்வதெழுதுதல் 90 ஆகிய மூன்று புத்தகங்களையும்
அன்பளிப்புச் செய்தார். அன்றைய பிராயாணத்திலேயே
கொல்வதெழுதுதல் 90 நாவலைப்படித்து முடித்துவிட்டேன், அத்துடன்
பாதிச் சிறுகதைகளையும் கூட,
கொல்வதெழுதுதல்90
ஏற்கனவே பள்ளிமுனைக் கிராமத்தின் கதை
என்ற பெயரில் முஸ்லிம் குரலில்
படித்ததற்கும் இப்போது புத்தகமாகப்
படித்ததற்கும் நிறைய வேறுபாடுகளை
உணர முடியுமாக இருந்தது. கதையிலும்
கூட மாற்றம் நிகழ்ந்திருக்கின்றது. பார்த்துப்
பார்த்துச் செதுக்கிச் சிற்பமாக்கி
இருக்கின்றார் என்பதை முதலிரு
அத்தியாயங்களைத் தாண்டும் முன்னரே
புரிந்து கொள்ள முடியுமாக இருந்தது.
பள்ளிமுனைக் கிராமத்தின் கதை ஏன்
கொல்வதெழுதல்90 ஆக மாறிப் போனது
என்று தெரியவில்லை, செழுமை
பெற்ற படைப்புக்கு என்ன பெயர்
வைத்தால்தான் என்ன!
என்ற பெயரில் முஸ்லிம் குரலில்
படித்ததற்கும் இப்போது புத்தகமாகப்
படித்ததற்கும் நிறைய வேறுபாடுகளை
உணர முடியுமாக இருந்தது. கதையிலும்
கூட மாற்றம் நிகழ்ந்திருக்கின்றது. பார்த்துப்
பார்த்துச் செதுக்கிச் சிற்பமாக்கி
இருக்கின்றார் என்பதை முதலிரு
அத்தியாயங்களைத் தாண்டும் முன்னரே
புரிந்து கொள்ள முடியுமாக இருந்தது.
பள்ளிமுனைக் கிராமத்தின் கதை ஏன்
கொல்வதெழுதல்90 ஆக மாறிப் போனது
என்று தெரியவில்லை, செழுமை
பெற்ற படைப்புக்கு என்ன பெயர்
வைத்தால்தான் என்ன!
ஆரம்பித்தவுடன் முழுமையாகப் படித்துவிட்டே
மூட வைக்கும்
எழுத்துக்கள் இப்போதெல்லாம் வெகு குறைவு
அண்மையில் வாசித்த
புத்தகக் குவியவில் மனதில் நிற்பது அஷ்ரப் சிஹாப்தீனின்
ஒரு குடம்
கண்ணீர் மற்றும் தீர்க்கவர்ணம், சோலைக்கிளியின்
பொன்னாலே
புழுதி பறந்த பூமி, யோகர்ணணின் சேகுவேரா இருந்த வீடு,
நாச்சியாதீவு பர்வீனின் பேனாவால் பேசுகின்றேன், ஜின்னாஹ்
ஷரிபுத்தீன் மொழிபெயர்த்த அல்லாமா இக்பாலின் ஜவாபே
ஷிக்வா
ஜவாபே, சுதாராஜின் மனைவி மகாத்மியம், ஹாமித்
அன்சாரியின் எழுச்சியின் சரிதை ஆகியவைகள்தான். இவற்றின்
ஈர்ப்பு இன்னும் மனதில் இருக்கிறது. அது போன்றதொரு அலாதி
வாசிப்பனுபவத்தை ஆர்.எம். நௌஸாத்தின் கொல்வதெழுதுதல்90
உம், வெள்ளிவிரலும் தந்தன. அதிலும் கொல்வதெழுதுதல்90 அலாதி.
மூட வைக்கும்
எழுத்துக்கள் இப்போதெல்லாம் வெகு குறைவு
அண்மையில் வாசித்த
புத்தகக் குவியவில் மனதில் நிற்பது அஷ்ரப் சிஹாப்தீனின்
ஒரு குடம்
கண்ணீர் மற்றும் தீர்க்கவர்ணம், சோலைக்கிளியின்
பொன்னாலே
புழுதி பறந்த பூமி, யோகர்ணணின் சேகுவேரா இருந்த வீடு,
நாச்சியாதீவு பர்வீனின் பேனாவால் பேசுகின்றேன், ஜின்னாஹ்
ஷரிபுத்தீன் மொழிபெயர்த்த அல்லாமா இக்பாலின் ஜவாபே
ஷிக்வா
ஜவாபே, சுதாராஜின் மனைவி மகாத்மியம், ஹாமித்
அன்சாரியின் எழுச்சியின் சரிதை ஆகியவைகள்தான். இவற்றின்
ஈர்ப்பு இன்னும் மனதில் இருக்கிறது. அது போன்றதொரு அலாதி
வாசிப்பனுபவத்தை ஆர்.எம். நௌஸாத்தின் கொல்வதெழுதுதல்90
உம், வெள்ளிவிரலும் தந்தன. அதிலும் கொல்வதெழுதுதல்90 அலாதி.
ஒரு கதையினதோ அல்லது நாவலினதோ வெற்றியில் பங்காற்றும்
முக்கிய விடயம் பாத்திரங்கள் மனதில் பதிந்து போவது, பாடசாலைக்கா
லத்தில் படித்த வைரமுத்துவின் 'வானம் தொட்டுவிடும் தூரம்தான்'
நாவலில் வரும் அம்சவள்ளியும் வாஞ்சிநாதனும் இன்னும் மனதில்
அப்படியே அதே செழுமையுடன் இருக்கின்றார்கள்.
அப்படிப்பட்ட பாத்திரப்படைப்பினை கொல்வதெழுதுதல் 90 இல்
முத்து முகமதுவும், மைம்னாவும், தலைவரும், சப்பு சுல்தானும்
பெற்றுவிடுகின்றார்கள்.
முக்கிய விடயம் பாத்திரங்கள் மனதில் பதிந்து போவது, பாடசாலைக்கா
லத்தில் படித்த வைரமுத்துவின் 'வானம் தொட்டுவிடும் தூரம்தான்'
நாவலில் வரும் அம்சவள்ளியும் வாஞ்சிநாதனும் இன்னும் மனதில்
அப்படியே அதே செழுமையுடன் இருக்கின்றார்கள்.
அப்படிப்பட்ட பாத்திரப்படைப்பினை கொல்வதெழுதுதல் 90 இல்
முத்து முகமதுவும், மைம்னாவும், தலைவரும், சப்பு சுல்தானும்
பெற்றுவிடுகின்றார்கள்.
முத்துமுகம்மது மீது நமக்கேற்படும் பரிதாபமும் பிடிப்பும் மைம்னாவின்
மீதேற்படும் கழிவிரக்கமும் தலைவர் மீதேற்படும் மரியாதையும்
சப்பு சுல்தான் மீதேற்படும் பொல்லாத கோபமும் நாலலை
வெற்றியடைச் செய்துவிடுகின்றது. ஊர்ப்பாசை அப்படியே
நம்மை அந்த மண்ணுக்குள்ளேயே தள்ளிவிட்டு வேடிக்கை
பார்க்கின்றது. தென்னிலங்கைச் சமுகம் அந்தப் பேச்சுவழக்கில்
பரிச்சயமற்றுத் தள்ளிநிற்க முயன்றாலும் கதை வளர்ந்து செல்லும்
பாங்கு அப்படியே கட்டிப்போட்டு விடும் என்பதில் சந்தேகமில்லை.
சமுகத்தளத்தில் அப்போது மட்டுமல்ல இப்போதும் புரையோடிப் போய்
நின்று மிரட்டிப் பார்க்கும் பல பிரச்சினைகளை இலாவகமாக
நகர்த்திச் சென்று ஆங்காங்கே போடப்படும் முடிச்சு அவிழ்க்கப்படும்
வரை நமக்குள் பரவும் பரவசத்தின் வேகம் குறைவதில்லை.
மீதேற்படும் கழிவிரக்கமும் தலைவர் மீதேற்படும் மரியாதையும்
சப்பு சுல்தான் மீதேற்படும் பொல்லாத கோபமும் நாலலை
வெற்றியடைச் செய்துவிடுகின்றது. ஊர்ப்பாசை அப்படியே
நம்மை அந்த மண்ணுக்குள்ளேயே தள்ளிவிட்டு வேடிக்கை
பார்க்கின்றது. தென்னிலங்கைச் சமுகம் அந்தப் பேச்சுவழக்கில்
பரிச்சயமற்றுத் தள்ளிநிற்க முயன்றாலும் கதை வளர்ந்து செல்லும்
பாங்கு அப்படியே கட்டிப்போட்டு விடும் என்பதில் சந்தேகமில்லை.
சமுகத்தளத்தில் அப்போது மட்டுமல்ல இப்போதும் புரையோடிப் போய்
நின்று மிரட்டிப் பார்க்கும் பல பிரச்சினைகளை இலாவகமாக
நகர்த்திச் சென்று ஆங்காங்கே போடப்படும் முடிச்சு அவிழ்க்கப்படும்
வரை நமக்குள் பரவும் பரவசத்தின் வேகம் குறைவதில்லை.
வெள்ளிவிரல்

தொகுதியும், ஒவ்வொரு கதையும் படிக்கத்
தூண்டும் சுவையை ரகசியமாகத்
தன்னுள் பதுக்கி வைத்திருக்கும் அதிசயத்தை
படிக்கும் போதுதான் உணர்ந்து கொள்ள
முடியும்.
தமிழர் விடுதலைப் போராட்டம் ஆயுதம்
தரித்தது, ஊர்காவற்படை, அரச ஆயுதப்படை
என்பவற்றின் பாலும் வெகு இலகுவாகப்
பயணித்து மீளும் கதை லாவகம் இவரது
எழுத்துக்களில் இயல்பாய் ஊடுறுவுகின்றது.
அத்துடன் முஸ்லிம் காங்கிரசின் தோற்றம்
சிதைவு வக்கற்ற போக்கு ஆகியவற்றிலும்
நிலைகுத்தி மீண்டு சுய விமர்சனம்
செய்கின்றது. தலைவர் அஸ்ரபின்
மரணத்திற்குப் பின்னர் என்னென்ன
கூத்தெல்லாம் நடந்து முடிந்தது
என்பதையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை
உம்மாவாகச்சித்தரித்து
நகர்த்தப்பட்டிருக்கும் கதை ஒரு வகையில் வரலாற்றுப்
பதிவும் கூட.
அதில் சொல்லப்பட்டிருக்கும் பாத்திரங்களின் உண்மைப்
பெயர்களை
நாம் ஊகித்துக் கொள்வது அவ்வளவு பெரிய கஸ்டமாக இல்லை.
தரித்தது, ஊர்காவற்படை, அரச ஆயுதப்படை
என்பவற்றின் பாலும் வெகு இலகுவாகப்
பயணித்து மீளும் கதை லாவகம் இவரது
எழுத்துக்களில் இயல்பாய் ஊடுறுவுகின்றது.
அத்துடன் முஸ்லிம் காங்கிரசின் தோற்றம்
சிதைவு வக்கற்ற போக்கு ஆகியவற்றிலும்
நிலைகுத்தி மீண்டு சுய விமர்சனம்
செய்கின்றது. தலைவர் அஸ்ரபின்
மரணத்திற்குப் பின்னர் என்னென்ன
கூத்தெல்லாம் நடந்து முடிந்தது
என்பதையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை
உம்மாவாகச்சித்தரித்து
நகர்த்தப்பட்டிருக்கும் கதை ஒரு வகையில் வரலாற்றுப்
பதிவும் கூட.
அதில் சொல்லப்பட்டிருக்கும் பாத்திரங்களின் உண்மைப்
பெயர்களை
நாம் ஊகித்துக் கொள்வது அவ்வளவு பெரிய கஸ்டமாக இல்லை.
'தலைவர் வந்திருந்தார்' என்ற கதை படிக்கும் போது, உடனேயே
மனதில் தோன்றியவர், அரபு இஸ்லாமிய இலக்கியவாதியான நஜீப்
அல்கைலானிதான். அவரது 'உமர் யழ்ஹரு பில் குத்ஸ்' என்ற நாவல்
மிக முக்கியமானது. 'குத்ஸ்சில் உமர் தோன்றினார்' என்றோ
'குத்ஸில் உமர் உதித்தார்' என்றோ தமிழ்ப்படுத்தலாம். தூங்கிக்
கொண்டிருக்கும் ஒருவனைத் தட்டியெழுப்புவதுடன் கதை
ஆரம்பிக்கிறது. யூதர்கள் பலஸ்தீனை ஆக்கிரமித்திருப்பது
பற்றியும் மஸ்ஜிதுல் அக்ஸாவை முஸ்லிம்கள் இழந்திருப்பது
பற்றியும் முஸ்லிம் உம்மத்தின் கையாளாகாத் தனத்தையும்
பிழவுகளையும் பலவீனங்களையும் அப்படியே சுயவிமர்ச
னத்திற்குட்படுத்துவதோடு அரபுத் தலைவர்களின் யோக்கியத்தையும்
தோலுரித்துக் காட்டும் நாவல் அது. நஜீப் அல்கைலானியின் அரபு
நாவலை ஆர்எம்.நௌசாத் படித்திருக்க வாய்ப்பில்லை. ஆயினும் ஒரே
சிந்தனைப் போக்கு. உலக இஸ்லாமிய உம்மத்தின் மீது நஜீப்;
அல்கைலானி கொண்ட தீராக்காதலை, ஆர்எம் நௌஸாத் தனது
சமுகத்தின் மீதும் முஸ்லிம்களுக்காக உருவாக்கப்பட்டு, தியாகங்களால்
செதுக்கப்பட்ட கட்சி மீதும் கொள்வதில் ஆச்சரியமில்லை. உண்மையான
கலப்பற்ற கவலை அவ்வாறு ஒத்த சிந்தனைகளை மனிதர்களில்
விதைப்பது அதிசயமானதுமல்ல. மரணித்த தலைவர் அஸ்ரப் ஒரு
போராளியிடம் வந்திருக்கிறார் அதன் பின்னர் நடைபெற்ற, மற்றும்
நடைபெற்றுக் கொண்டிருக்கும் அனைத்துச் சித்து விளையாட்டுக்களை
யும் முஸ்லிம் கட்சிகளையும் அரசியல் வாதிகளையும் மக்களையும்
சேர்த்தே செருப்பால் அடிக்கின்ற மாதிரி ஒரு கதை.
மனதில் தோன்றியவர், அரபு இஸ்லாமிய இலக்கியவாதியான நஜீப்
அல்கைலானிதான். அவரது 'உமர் யழ்ஹரு பில் குத்ஸ்' என்ற நாவல்
மிக முக்கியமானது. 'குத்ஸ்சில் உமர் தோன்றினார்' என்றோ
'குத்ஸில் உமர் உதித்தார்' என்றோ தமிழ்ப்படுத்தலாம். தூங்கிக்
கொண்டிருக்கும் ஒருவனைத் தட்டியெழுப்புவதுடன் கதை
ஆரம்பிக்கிறது. யூதர்கள் பலஸ்தீனை ஆக்கிரமித்திருப்பது
பற்றியும் மஸ்ஜிதுல் அக்ஸாவை முஸ்லிம்கள் இழந்திருப்பது
பற்றியும் முஸ்லிம் உம்மத்தின் கையாளாகாத் தனத்தையும்
பிழவுகளையும் பலவீனங்களையும் அப்படியே சுயவிமர்ச
னத்திற்குட்படுத்துவதோடு அரபுத் தலைவர்களின் யோக்கியத்தையும்
தோலுரித்துக் காட்டும் நாவல் அது. நஜீப் அல்கைலானியின் அரபு
நாவலை ஆர்எம்.நௌசாத் படித்திருக்க வாய்ப்பில்லை. ஆயினும் ஒரே
சிந்தனைப் போக்கு. உலக இஸ்லாமிய உம்மத்தின் மீது நஜீப்;
அல்கைலானி கொண்ட தீராக்காதலை, ஆர்எம் நௌஸாத் தனது
சமுகத்தின் மீதும் முஸ்லிம்களுக்காக உருவாக்கப்பட்டு, தியாகங்களால்
செதுக்கப்பட்ட கட்சி மீதும் கொள்வதில் ஆச்சரியமில்லை. உண்மையான
கலப்பற்ற கவலை அவ்வாறு ஒத்த சிந்தனைகளை மனிதர்களில்
விதைப்பது அதிசயமானதுமல்ல. மரணித்த தலைவர் அஸ்ரப் ஒரு
போராளியிடம் வந்திருக்கிறார் அதன் பின்னர் நடைபெற்ற, மற்றும்
நடைபெற்றுக் கொண்டிருக்கும் அனைத்துச் சித்து விளையாட்டுக்களை
யும் முஸ்லிம் கட்சிகளையும் அரசியல் வாதிகளையும் மக்களையும்
சேர்த்தே செருப்பால் அடிக்கின்ற மாதிரி ஒரு கதை.
நல்லதொரு துரோகம் என்ற கதை இன்னுமோர் ஆய்வுக் கதவைத்
திறந்து விட்டிருக்கின்றது. ஆயுதம் தரித்த பேரின மற்றும்
ஆக்கிரமிப்புச் சக்திகளால் பெண்கள் வன்புணரப்படுவதை எதிர்க்கும்
கதை மாந்தர்கள் என்பதுதான் அது. அல் அஸூமத்தின் புறமுதுகுகள்
கதையின் இறுதிப்பகுதி இப்படி வருகின்றது
திறந்து விட்டிருக்கின்றது. ஆயுதம் தரித்த பேரின மற்றும்
ஆக்கிரமிப்புச் சக்திகளால் பெண்கள் வன்புணரப்படுவதை எதிர்க்கும்
கதை மாந்தர்கள் என்பதுதான் அது. அல் அஸூமத்தின் புறமுதுகுகள்
கதையின் இறுதிப்பகுதி இப்படி வருகின்றது
ஒரு ஜவான் தனது துப்பாக்கியை கீழே போட்டுவிட்டுக் குப்புறக்
கிடந்த அவளின் கையைப் பற்றியிழுத்து
கிடந்த அவளின் கையைப் பற்றியிழுத்து
அவளை மல்லாக்கக் கிடத்தி...
'டேடேய்...' என்று கத்திக் கொண்டே ஓடினான் இவன்
அவள்மீது உட்கார்ந்தான் அவன்
'எந்திரிடா ' என்று கத்தினான் இவன். 'அந்த வெளயாட்டுக்கெல்லாம்
போய்றாதீங்க! அது ஒன்ன மட்டும் உட்டுட்டு மத்ததுகள வெளயாடுங்க'
போய்றாதீங்க! அது ஒன்ன மட்டும் உட்டுட்டு மத்ததுகள வெளயாடுங்க'
என்று ஒரு பெண் வன்புணர்வுக்குட்படுத்தப்படுவதைத்
தடுக்கிறான் அதுவரை அனைத்தையும் வேடிக்கை பார்த்துக்
கொண்டிருந்தவன்
தடுக்கிறான் அதுவரை அனைத்தையும் வேடிக்கை பார்த்துக்
கொண்டிருந்தவன்
ஆர்.எம்.நௌஸாத்தின் நல்லதொரு துரோகம் கதையின் இறுதிப் பகுதி
அய்யுபைக் கண்ட நிஸ்ஸங்க ஆத்திரம் பொங்க
-அடோ ஹூத்திக்க புத்தோ... பளயாங்...பளயாங் என்று கத்தினார்.
ஆனால் அய்யுப் சிறுமியைக் காப்பாற்றும் உச்ச வேகத்தில் வர
ஆனால் அய்யுப் சிறுமியைக் காப்பாற்றும் உச்ச வேகத்தில் வர
சட்டென எழுந்த நிஸ்ஸங்க, கைத் துப்பாக்கியால் சிறுமியின் தலை
மீது மிக இரக்கமின்றிச் சுட்டார். கூந்தல் பிய்ந்து தலை வழியாக, சிவப்புத்
துண்டங்கள் வெளிப்பறந்தன. அதே வேகத்தில் திரும்பி வெறியுடன் ஓடி
வந்த அய்யுபை நோக்கி
மீது மிக இரக்கமின்றிச் சுட்டார். கூந்தல் பிய்ந்து தலை வழியாக, சிவப்புத்
துண்டங்கள் வெளிப்பறந்தன. அதே வேகத்தில் திரும்பி வெறியுடன் ஓடி
வந்த அய்யுபை நோக்கி
-உம்பத் பளையாங் ஹூத்தோவ்...!
என்று கத்திக் கொண்டே கைத் துப்பாக்கியை நீட்...டிய, சரியாய் அதே
கணத்தில், அய்யுப், மின்னல் வேகத்தில் எஸ்எல்ஆரை உயர்த்தி, ஒரே
குறியில்... அந்தத் துரோகத்தைச் செய்து முடித்திருந்தான்.
கணத்தில், அய்யுப், மின்னல் வேகத்தில் எஸ்எல்ஆரை உயர்த்தி, ஒரே
குறியில்... அந்தத் துரோகத்தைச் செய்து முடித்திருந்தான்.
இங்கு அய்யுப் என்பவன் ஒரு ஊர்காவற்படை வீரன். நிஸ்ஸங்க என்ற
பொலிஸ் அதிகாரியின் கையாள் போன்ற ஒரு மிகச்
சாதாரனமானவன். அதிகாரி ஒரு தமிழ்ச் சிறுமியை வன்புணர்வதை
அவன் விரும்பவில்லை அதைத் தடுக்க முயல்கின்றான் இறுதியில்
தனது அதிகாரியையே சுட்டுக் கொல்கின்றான்.
பொலிஸ் அதிகாரியின் கையாள் போன்ற ஒரு மிகச்
சாதாரனமானவன். அதிகாரி ஒரு தமிழ்ச் சிறுமியை வன்புணர்வதை
அவன் விரும்பவில்லை அதைத் தடுக்க முயல்கின்றான் இறுதியில்
தனது அதிகாரியையே சுட்டுக் கொல்கின்றான்.
அல் அஸூமத் கதையில் வரும் கதா பாத்திரமும் அதைத் தடுக்கப் பாய்து
ஓடுகின்றது, நௌஸாத்தின் பாத்திரமும் அவன் குடிகாரனாக
இருந்தாலும் கூட இந்த விடயத்தைத் தடுக்க பாய்ந்து வருகின்றான்.
அதுதான் முக்கியமானது. பல்வேறு ஈழத்துக் கதைகளிலும் இது ஒரு பேசு
பொருளாக கதை புணையும் அம்சமாக மாறிப் போகும்அளவுக்கு பெண்கள்
சீரழிக்கப்பட்டிருக்கிறார்கள். அதற்கு கால வரையறை கிடையாது.
இந்திய அமைதிப்படையும் அதைச் செய்தது, இராணுவமும் அதைச்
செய்தது, இயக்கம் உடைந்த போது விடுதலைப் புலிகளும்
வெருகலில் அதைச் செய்தார்கள், கருணாவுடன் பிரிந்தவர்களும்
அதைச் செய்தார்கள். இப்படி ஒரு தரப்பும் வன்புணர்ச்சி விடயத்தில் சுத்தம்
என்று சொல்வதற்கில்லை.
ஓடுகின்றது, நௌஸாத்தின் பாத்திரமும் அவன் குடிகாரனாக
இருந்தாலும் கூட இந்த விடயத்தைத் தடுக்க பாய்ந்து வருகின்றான்.
அதுதான் முக்கியமானது. பல்வேறு ஈழத்துக் கதைகளிலும் இது ஒரு பேசு
பொருளாக கதை புணையும் அம்சமாக மாறிப் போகும்அளவுக்கு பெண்கள்
சீரழிக்கப்பட்டிருக்கிறார்கள். அதற்கு கால வரையறை கிடையாது.
இந்திய அமைதிப்படையும் அதைச் செய்தது, இராணுவமும் அதைச்
செய்தது, இயக்கம் உடைந்த போது விடுதலைப் புலிகளும்
வெருகலில் அதைச் செய்தார்கள், கருணாவுடன் பிரிந்தவர்களும்
அதைச் செய்தார்கள். இப்படி ஒரு தரப்பும் வன்புணர்ச்சி விடயத்தில் சுத்தம்
என்று சொல்வதற்கில்லை.
காலவட்டம் கதை மிகவும் வித்தியாசமான புனைவு. ஆச்சரியமிக்க
கதையுக்தி. மிக வித்தியாசமாகச் சிந்தித்திருக்கிறார். கதை வளர்த்துச்
செல்லப்படும் பாங்கு இன்னும் நம்மை அதிசயிக்க வைக்கிறது. காலச்
சுழற்சியில் ஒவ்வொரு நிகழ்வும் அற்புதமாகக் கோக்கப்பட்டுள்ளன.
அது போல மீள்தகவு கதை மனதைக் கனக்கச் செய்கின்றது.
நீலாவணிண் போதியோ பொன்னியம்மா என்ற கவிதை ஞாபகத்திற்கு
வந்து போகின்றது. பிச்சைச் சம்பளத்திற்காக பத்து வருடங்கள் அலைந்து
திரிந்து இறுதியில் பிச்சைச் சம்பளம் கிடைக்கும் போது பொன்னியம்மா
செத்துப் போயினாள். அது போலவே இந்த ஏழையும் இழப்பீடு
பெறுவதற்காக அலைவது. ஆயினும் நிறைந்த அரசியல்
விவகாரங்களை அடுக்கடுக்காகச் செருகிச் செல்கின்றார். தமிழ்
அதிகாரிகளிடமும் சிங்கள அதிகாரிகளிடமும் சிக்கித் தவிக்கும்
விசயம் தெரியாத முகம்மது யூசுப் அப்துல்லாவின் பரிதாபம் மனதில்
சோகத்தை விதைத்துவிடுகின்றது. இந்தக் கதையை நேரடியாக ஒரு
குறும்படமாக்கவுள்ளேன். இந்தக் கதையை வைத்து இந்திய
சினமாப் பானியில் ஒரு சீர்திருத்த ஹீரோவைக் கொண்டு முழுநீளத்
திரைப்படமாகவே ஆக்க முடியும். அவ்வளவு விசயம் புதைந்து
கிடக்கிறது அதற்குள். பாவம் பொதுமகன்.
கதையுக்தி. மிக வித்தியாசமாகச் சிந்தித்திருக்கிறார். கதை வளர்த்துச்
செல்லப்படும் பாங்கு இன்னும் நம்மை அதிசயிக்க வைக்கிறது. காலச்
சுழற்சியில் ஒவ்வொரு நிகழ்வும் அற்புதமாகக் கோக்கப்பட்டுள்ளன.
அது போல மீள்தகவு கதை மனதைக் கனக்கச் செய்கின்றது.
நீலாவணிண் போதியோ பொன்னியம்மா என்ற கவிதை ஞாபகத்திற்கு
வந்து போகின்றது. பிச்சைச் சம்பளத்திற்காக பத்து வருடங்கள் அலைந்து
திரிந்து இறுதியில் பிச்சைச் சம்பளம் கிடைக்கும் போது பொன்னியம்மா
செத்துப் போயினாள். அது போலவே இந்த ஏழையும் இழப்பீடு
பெறுவதற்காக அலைவது. ஆயினும் நிறைந்த அரசியல்
விவகாரங்களை அடுக்கடுக்காகச் செருகிச் செல்கின்றார். தமிழ்
அதிகாரிகளிடமும் சிங்கள அதிகாரிகளிடமும் சிக்கித் தவிக்கும்
விசயம் தெரியாத முகம்மது யூசுப் அப்துல்லாவின் பரிதாபம் மனதில்
சோகத்தை விதைத்துவிடுகின்றது. இந்தக் கதையை நேரடியாக ஒரு
குறும்படமாக்கவுள்ளேன். இந்தக் கதையை வைத்து இந்திய
சினமாப் பானியில் ஒரு சீர்திருத்த ஹீரோவைக் கொண்டு முழுநீளத்
திரைப்படமாகவே ஆக்க முடியும். அவ்வளவு விசயம் புதைந்து
கிடக்கிறது அதற்குள். பாவம் பொதுமகன்.
ஸீனத்தும்மா கதையின் முக்கிய நிகழ்விலிருந்துதான் எனது
இரத்தக்குளியல் எனும் நாவல் பிதுங்குகின்றது. ஸீனத்தும்மாவில்
ஆக்ரோசமாகத் தொனிக்கும் அதே விடயங்கள் கொஞ்சம் வேறுபட்ட
வார்த்தைகளில் இரத்தக் குளியல் நாவலிலும் தொனிக்கிறது. இப்படிப்பட்ட
பெண்கள் மீது நௌஸாத்தும் நானும் கொண்டிருக்கும் நிலைப்பாடு
ஒன்றுதான் என்பதற்கு இது நல்ல சான்று. நௌஸாத்தின் ஸீனத்தும்மா,
இரத்தக் குளியலில் வரும் எனது ஹூதா ஆகிய இரண்டு பாத்திரங்களும்
விபச்சாரக் குற்றச் சாட்டில் கொல்லப்படுதல் என்பதுதான் விடயம்.
பின்னாட்களில் வரும் ஓர் ஆய்வாளன் ஸீனத்தும்hவின் கருவில்
இருந்துதான் இரத்தக் குளியல் பிறந்தது என்று சொன்னாலும்
ஆச்சரியப்படுவதற்கில்லை. அப்படியொரு ஒற்றுமை. ஸீனத்தும்மா
பிறந்தது 1989ல் இரத்தக்குளியல் பிறந்தது 2011ல் ஆக மொத்தத்தில்
சும்மா இருக்கும் வாய்க்கு அவள் கிடைத்தமாதிரி.
இரத்தக்குளியல் எனும் நாவல் பிதுங்குகின்றது. ஸீனத்தும்மாவில்
ஆக்ரோசமாகத் தொனிக்கும் அதே விடயங்கள் கொஞ்சம் வேறுபட்ட
வார்த்தைகளில் இரத்தக் குளியல் நாவலிலும் தொனிக்கிறது. இப்படிப்பட்ட
பெண்கள் மீது நௌஸாத்தும் நானும் கொண்டிருக்கும் நிலைப்பாடு
ஒன்றுதான் என்பதற்கு இது நல்ல சான்று. நௌஸாத்தின் ஸீனத்தும்மா,
இரத்தக் குளியலில் வரும் எனது ஹூதா ஆகிய இரண்டு பாத்திரங்களும்
விபச்சாரக் குற்றச் சாட்டில் கொல்லப்படுதல் என்பதுதான் விடயம்.
பின்னாட்களில் வரும் ஓர் ஆய்வாளன் ஸீனத்தும்hவின் கருவில்
இருந்துதான் இரத்தக் குளியல் பிறந்தது என்று சொன்னாலும்
ஆச்சரியப்படுவதற்கில்லை. அப்படியொரு ஒற்றுமை. ஸீனத்தும்மா
பிறந்தது 1989ல் இரத்தக்குளியல் பிறந்தது 2011ல் ஆக மொத்தத்தில்
சும்மா இருக்கும் வாய்க்கு அவள் கிடைத்தமாதிரி.
நாட்டுப்புறப் பரிசாரிகள் மீதான குருட்டு நம்பிக்கைதான் இன்னும்
அவர்களை ஜாம்பவான்களாக வைத்திருக்கின்றது. பாலியல்
மன்னர்களாக அவர்கள் திகழ்வதற்கு மக்கள்தான் வழிவகுக்கின்றார்கள்.
இந்தியாவில் மலிந்திருக்கும் போலிச் சாமியார்களுக்கும் நமது
பரிகாரிமார்களுக்கும் பெரிதாக இந்த விடயத்தில் வித்தியாசம் கிடையாது.
அன்மையில் பரிகாரிமாரிடம் சிக்கிக் கொள்ளும் நிகழ்வினை
மையப்படுத்தி ஒரு நீண்ட கவிதையை பொத்துவில் கிராமத்தான்
கலீபா வகவக் கவியரங்கில் வாசித்திருந்தார். கிழக்கு மாகாணப்
பரிகாரிகள் மட்டுமல்ல நாடு முழுவதுமுள்ள எல்லாப் பரிகாரி
மார்களுக்கும் ப்ரேமானந்தா, சங்கராச்சாரியார், நித்தியானந்தா
என இது போன்ற எல்லா வகையறாக்களும் செய்யும்
சில்மிசம்தான் வெள்ளிவிரல் பரிகாரியும் செய்கின்றார். இதன்
பின்னரும் பெண்களைக் கூட்டிக் கொண்டு பரிகாரிமாரிடம் போவீர்களா
என்று கேள்வி கேட்பது போல ஓர் எள்ளளுடன் கதை முடிகின்றது
அழகு. நமது தாய்மாருக்குப் பாசம் இருக்குமளவுக்குப் புத்தி கிடையாது.
அவர்களை ஜாம்பவான்களாக வைத்திருக்கின்றது. பாலியல்
மன்னர்களாக அவர்கள் திகழ்வதற்கு மக்கள்தான் வழிவகுக்கின்றார்கள்.
இந்தியாவில் மலிந்திருக்கும் போலிச் சாமியார்களுக்கும் நமது
பரிகாரிமார்களுக்கும் பெரிதாக இந்த விடயத்தில் வித்தியாசம் கிடையாது.
அன்மையில் பரிகாரிமாரிடம் சிக்கிக் கொள்ளும் நிகழ்வினை
மையப்படுத்தி ஒரு நீண்ட கவிதையை பொத்துவில் கிராமத்தான்
கலீபா வகவக் கவியரங்கில் வாசித்திருந்தார். கிழக்கு மாகாணப்
பரிகாரிகள் மட்டுமல்ல நாடு முழுவதுமுள்ள எல்லாப் பரிகாரி
மார்களுக்கும் ப்ரேமானந்தா, சங்கராச்சாரியார், நித்தியானந்தா
என இது போன்ற எல்லா வகையறாக்களும் செய்யும்
சில்மிசம்தான் வெள்ளிவிரல் பரிகாரியும் செய்கின்றார். இதன்
பின்னரும் பெண்களைக் கூட்டிக் கொண்டு பரிகாரிமாரிடம் போவீர்களா
என்று கேள்வி கேட்பது போல ஓர் எள்ளளுடன் கதை முடிகின்றது
அழகு. நமது தாய்மாருக்குப் பாசம் இருக்குமளவுக்குப் புத்தி கிடையாது.
நட்டுமை

தேவையில்லை. பேராசிரியர்
எம்.ஏ. நுஃமான் அவர்கள், நான் சொல்ல
நினைத்த அத்தனையையும்
அச்சசொட்டாக அப்படியே
சொல்லி முடித்திருக்கிறார். நீண்ட
முன்னுரையைக் கண்ணுற்றதும்
அதைப் படிப்பதைத் தவிர்த்துக்
கொண்டு நாவலை வாசித்து
முடித்துவிட்டுத்தான் படித்தேன்
. எப்போதும் அனைத்து உரைகளையும்
படித்துவிட்டுத்தான்
விடயத்திற்கே செல்வது எனது வழக்கம்.
சோலைக் கிளியின்
பொன்னாலே புழுதி பறந்த பூமிக்கு கலாநிதி
றமீஸ் அப்துல்லா
வழங்கியிருந்த நீண்ட முன்னுரை அயர்ச்சியாக்கியது
போல
இதிலும் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில்தான்
நட்டுமையில்
பேராசிரியரின் குறிப்பை முதலில் படிப்பதைத் தவிர்த்தேன்.
ஆயினும் கடைசியில் வாசித்ததன் சாதகத்தை முழுமனதோடு
ஏற்கின்றேன். நட்டுமை குறித்து நான் ஏதேனும் எழுதுவதானால்
பேராசிரியன் எழுத்துக்களை அப்படியே கொப்பி பேஸ்ட் பண்ணினால்
சரி. ஆகவே எதற்கு வீண் வம்பு? எல்லோரும் பேராசிரியரின்
குறிப்பைப் படியுங்கள், அதன் பின்னர் நாவலைப் படியுங்கள்,
1930 களில் சுதந்திரத்திற்கு முற்பட்ட காலத்து முஸ்லிம்
கிராமமொன்றில் வாழும் சுகானுபவத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.
நௌஸாத் ஆகிய தீரன் என்ற
சைலன்ட் டெரரின்
அடுத்த படைப்புக்களை ஆவலோடு
எதிர்பார்க்கின்றேன்.
இப்படி அடுத்த படைப்பை ஆவலோடு
எதிர்பார்க்க வைக்கும்
படைப்பாளிகள் நம்மிடம் வெகு குறைவு
என்பதை மனதிற் கொண்டு
அவசரமாக செயற்படுங்கள்.


சைலன்ட் டெரரின்
அடுத்த படைப்புக்களை ஆவலோடு
எதிர்பார்க்கின்றேன்.
இப்படி அடுத்த படைப்பை ஆவலோடு
எதிர்பார்க்க வைக்கும்
படைப்பாளிகள் நம்மிடம் வெகு குறைவு
என்பதை மனதிற் கொண்டு
அவசரமாக செயற்படுங்கள்.


ஜே.வஹாப்தீன் -+ கவிஞர் எ.எம்.எம் அலி
ஜே.வஹாப்தீன் -
வெள்ளிவிரல் மின்னுகின்ற தீரன்
வெட்டவெளிக் காற்றினிலே பாரன்
சொல்லினிலே கலைசெய்து
சோக்கான கதைபுனைய
தென்கிழக்கில் இவர்தானே சூரன்.
ஜே.வஹாப்தீன் -
-------------------------------------------
தம்பிலுவில் ஜெகா பீ.ஏ.--ஞாயிறு தினக்குரல். நேர்காணல்
ஞாயிறு தினக்குரல். நேர்காணல்--- தம்பிலுவில் ஜெகா பீ.ஏ.
ஞாயிறு தினக்குரல். 2013.11.03
இதுவரை அறியப்படாத தளங்களில் இருந்தும்
அறியப்பட்ட தளங்களில் உள்ளää தெரியப்படாத பக்கங்கள் பற்றியும் கூடுதலாகச் சிந்திக்கிறேன்.
தீரன். ஆர்.எம். நௌஸாத்
00 ~வல்லமை தாராயோ..|ää (2000)ää ~வெள்ளிவிரல்| (2011)ää ஆகிய இரண்டு சிறுகதைத் தொகுதிகளையும் ~நட்டுமை| (2009) என்ற நாவலையும் தமிழிலக்கிய உலகுக்கு அளித்தவர்.
00 தமிழ்நாடு ~காலச்சுவடு| இதழ் நிறுவுனர் சுந்தர ராமசாமி 75 பவழவிழா இலக்கியப்போட்டியில் இவர் தனது ~நட்டுமை| நாவலுக்கு முதற் பரிசு வென்றவர்.
00 தனது ~வெள்ளிவிரல்| சிறுகதைத் தொகுதிக்கு 2011ல் தேசிய அரச சாகித்திய விருதும் கிழக்கு மாகாண சாகித்திய விருதும் ஒருங்கே பெற்றுக் கொண்டவர்.
00 1998ல் ~தினக்குரல்| நாளிதழும் பிரான்ஸ் தமிழ்வானொலியும் இணைந்து நடத்திய சில்லையூர் செல்வராசன் ஞாபகார்த்த உலக வானொலி நாடகப் போட்டியில் ~காகித உறவுகள்| என்ற தனது வானொலி நாடகத்திற்கு 3ம் பரிசு பெற்றவர்.
00 இவரது ~நல்லதொரு துரோகம்| என்ற சிறுகதைக்கு பேராதனை பல்கலைக் கழக தமிழ்சங்கம் முதற்பரிசாக தங்கப் பதக்கம் அளித்தது..
00 அத்துடன்ää இவரது ~சாகும்-தலம்.| சிறுகதை தமிழ்நாடு எழுத்தாளர் சுஜாதா அறக்கட்டளை நிறுவனம் நடத்திய அறிவியல் புனைகதைப் போட்டியில் முதற்பரிசு பெற்றது.
00 ~ஞானம்| சஞ்சிகை நடத்திய புலோலியூர் க. சதாசிவம் நினைவுச் சிறுகதைப் போட்டியில் தனது ~தாய்-மொழி| சிறுகதைக்கு முதற்பரிசு உட்பட மேலும்ää பற்பல இலக்கியப் போட்டிகளில் தமது வித்தியாசமான வார்ப்பிலான சுமார் 19 சிறுகதைகளுக்கு பற்பல பரிசில்கள் பெற்றவர். அவருடனான ஒரு நேர்காணல் இது..........
கேள்வி--- முதலில் உங்களது பிரத்தியேக வாழ்நிலை பற்றி ஒரு சுருக்க அறிமுகம் செய்வதானால்....?
பதில்---- நல்லது..நான் தொழிலால் ஒரு தபால் அதிபர். இலங்கையின் பற்பல பகுதிகளிலும் சுமார் 30 வருடங்கள் சேவையாற்றிய பின் தற்போது என் சொந்த இடமான சாய்ந்தமருது தபாலகத்தில் பொறுப்புத் தபாலதிபராக கடமை செய்கின்றேன்.. மூன்று பிள்ளைகளின் தந்தை.. மனைவி பாத்திமா றிபாயா..
கேள்வி--- எழுத்துத் துறைக்கு எப்படி வந்தீர்கள்..?
பதில்---- ~கல்முனை ஸாஹிறா| இலக்கியப் பண்ணையில்தான் இது ஆரம்பமாயிற்று. 1975ல் பாடசாலை வெளியீடான ~அம்பு| சஞ்சிகைக்கு ஒரு வாசகர் கடிதம் எழுதியதன் மூலம் எழுத்துலகில் உட்பிரவேசித்தேன். அப்புறம் துணுக்குகள்ää கேள்வி பதில்...உருவகக் கதை.. குறுங்கதை... ஒன்றிரண்டு சிறுகதைகள்.. அப்படி இப்படியென்று கொஞ்ச காலம்... 1990க்குப் பின்னர் ஒன்றும் எழுதாமல் ~இலக்கிய நெடுந்தூக்கம்.|... இக்காலப்பகுதி முழுவதும் படிப்புää தொழில்..திருமணம் குடும்பம்..என்று போயிற்று.. இருப்பினும் தோன்றும் போதெல்லாம் எழுதி எழுதி வைத்துக் கொண்டும் செவ்வை பார்த்துக் கொண்டும் அநேகமாக புத்தகங்கள் வாசித்துக் கொண்டும்தானிருந்தேன்.. இலக்கிய நெடுந்தூக்கத்திலிருந்து மீண்டெழுந்து ..2000ம் ஆண்டில் ~வல்லமை தாராயோ!| சிறுகதைத் தொகுதியை கொணர்ந்தேன்.. அதிலிருந்து தொடர்ச்சியாக எழுதி வருகின்றேன்..
கேள்வி--- உங்களது சிறுகதைத் தொகுதிகள் பற்றியும் அவற்றின் வார்ப்பு நிலைகள் பற்றியும் அறிய விரும்புகிறோம்....?
பதில்---- ~வல்லமை தாராயோ..!| என்பது எனது முதல் சிறுகதைத் தொகுதி.. 2000ல் வெளியானது. எட்டுச் சிறுகதைகளை உள்ளடக்கியது இது. எனினும் நமது ~விமர்சன மற்றும் இரசனைக் குறிப்பு| எழுதுகிற ~அறிஞர்களால|; அவ்வளவாகக் கண்டு கொள்ளப்படாமல் முடங்கி விட்டது. புpன்னர்ää பற்பல இலக்கியப் போட்டிகளில் பரிசுகள் பெற்ற 12 சிறுகதைகளைத் தொகுத்து தமிழ்நாடு காலச்சுவடு நிறுவனம் ~வெள்ளிவிரல்| என்ற பெயரில் ஒரு தொகுதியாக வெளியிட்டது. இது 2011ன் அரச சாகித்திய விருதையும்ää கிழக்கு மாகாண சாகித்திய விருதையும் பெற்றது.
வார்ப்பு நிலை என்று கேட்டீர்கள்.. இது விரிவான விசயம்.. ஓரு சிறுகதையின் வெற்றிக்கு பல காரணங்கள் இருந்த போதிலும்ää என்னைப் பொறுத்த வரையிலும் இதுவரை அறியப்படாத தளங்களில் இருந்தும் அறியப்பட்ட தளங்களில்உள்ளää தெரியப்படாத பக்கங்கள் பற்றியும் கூடுதலாகச் சிந்திக்கிறேன். முதலில் நுகர்பவரை கதைக்குள்ளே வரவைக்;கிறேன். அப்புறம் அவர் என்னை வாங்காமல் போக முடியாதபடி செய்து விடுவது என் கதைத் தந்திரம். இதில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை. எல்லோரும் ஒரே விதமாக ~கதை|த்துக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. இக்காலத்தில் கூட என்னால் இன்னும் வெகுசுதந்திரமாக எழுத முடியவில்லை என்றே விசனிக்கிறேன்;.
கேள்வி---- நாவல் முயற்சிகளைப் பற்றிக் கூறுவதானால்...?
பதில்---- என் முதல் குறுநாவல் ~வானவில்லே ஒரு கவிதை கேளு..| ஈழநாதம் பத்திரிகையில் 2005 தொடக்கம் ஏழு தொடர்கள் ஏழு வண்ணங்களாக வெளியாயிற்று. இரண்டாவது குறுநாவல் ~பள்ளிமுனைக் கிராமத்தின் கதை| தொடர்ச்சியாக 2003 தொடக்கம் முஸ்லிம் குரலில் 40 அங்கங்களாக பிரசுரமானது. இது 1990 களின் தென் கிழக்கின் யுத்த காலத்தைப் பின்புலமாகக் கொண்டது. அக்காலத்து அரசியல் போக்கினால் பாதிக்கப்பட்ட ஒரு அப்பாவிக் கிராம மக்களின் வாழ்வியல் பற்றிய இக்குறுநாவல் பின்னர்ää நண்பர்களான எம். பௌசர்ää எம்.எம்.எம்.நூறுல்ஹக் ஆகியோரின் ஊக்குவிப்பினால் தனி ஒரு முழுநாவலாக உருவெடுத்தது. இது தற்போது மேலும் செவ்விதாக்கப்பட்டு ~கொல்வதெழுதுதல். 90| என்ற தலைப்பு மாற்றத்துடன் இவ்வருட இறுதியில் இன்ஸா அல்லாஹ் வெளியாக உள்ளது..
என் மூன்றாவது முழு நாவல் ~நட்டுமை| இது கிழக்கு மண்ணின் 1940க்கு முந்திய விவசாய மக்களின் வாழ்வியலைப் பேசுகிறது. கிழக்கு முஸ்லிம் மக்களின் வட்டார வழக்குப் பேச்சோசையில் ஒலிக்கும் இந்நாவல் கடல்கடந்து தமிழ்நாட்டில் சுந்தரராமசாமி நினைவு நாவல் போட்டியிலும் முதற்பரிசு பெற்றது. 2009ல் காலச்சுவடு வெளியீடாக வந்தது. சில ~இலக்கிய இருட்டடிப்புகளையும்| மீறி எனக்கு ஓரு ஒளிவட்டம் தந்தது இந்நாவல். புகழனைத்தும் இறைவனுக்கே!
எனது நான்காவது நாவல் ~சாந்த-மாமா| பிரசுரமாகாதுள்ளது.. ஐந்தாவது நாவல் ~யுத்த பிக்குகள்| - இது தற்போது உருவாக்கத்தில் உள்ளது.
.
நாவல் எழுதுவது தனி ஒரு நுட்பம். மிக நீண்ட சிறுகதையை ஒரு முழுநாவலாக்கி விடுவோரும் ஒரு நாவலையே ஒரு சிறுகதையாக்கி விடுவோரும் இந்த நுட்பம் தெரியாதோரே... இந்த நாவல்த் தொழிநுட்பத்தை நான் கற்றுக் கொண்டு கையாள ஆரம்பித்த போது வாசகர்கள் பொதுவாகää நாவல்கள் வாசிப்பதையே பெரும்பாலும் நிறுத்தியிருந்தனர்....
இந்த தேக்க நிலையிலும் இப்போதும் நாவல்கள் வந்து கொண்டுதானிருக்கின்றன.. வாசிக்கப்பட்டுக் கொண்டுமிருக்கின்றன.. ஒரு சிறுகதைக்குள் அடக்கி விட முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் ~கரு எச்சங்கள்| வியாபித்து வெடிப்பது நாவலில்தானே...அந்தப் பிரசவம் தரும் வலி இனிது. அதன் வடிவமைப்புகள் பெரிது.. அதனூடான சஞ்சாரம் ஒரு ஆபத்தான அழகு.. ஓரு நாவலைப் படித்த பின் அக்கதை மாந்தருடன் வாசகர் வாழும் காலமெல்லாம் அந்நாவலும் அதன் தயாரிப்பாளியும் நித்திய ஜீவியமடைகிறார்கள்; என்பதே உண்மை.
கேள்வி---- கவிதைத் துறை ஈடுபாடுகள் மற்றும் அனுபவங்களைக் கூறுவதாயின்....?
பதில்--- 1977 தொடக்கம் கவிதைகள் என்று நினைத்துக் கொண்டு சிலவற்றை பற்பல பத்திரிகைகளில் எழுதி வந்தேன். எல்லாம் புதுக்கவிதைகள்தாம். ~கொக்கூர்கிழான்| கா.வை. இரத்தினசிங்கம் ஐயா அவர்களின் பயிற்சியின் பின் மரபுக் கவிதை வாள் சுழற்றவும்ää ~குறும்பா. வெண்பாக் கத்திகள் எறியவும் ஓரளவு கற்றுக் கொண்டேன்.. அல்அஸ_மத்தின் ~பூபாளம்| கவியேடு நடத்திய குறும்பாப் போட்டியில் பரிசு பெற்றது ஒரு தனி ஆனந்தம். 1981 இலிருந்து 1989 வரை ~தூது| என்ற பேரில் ஒரு கவிதைச் சிற்றேட்டை நண்பர் றாபீக்குடன் சேர்ந்து 16 இதழ்கள் வரை வெளியிட்டேன்... தூது இதழில் ஆசிரியத் தலையங்கங்களை வெண்பாääகுறும்பாக்களில் எழுதித் தீ மிதித்தேன். நண்பர் கல்முனை முபாறக்கின் ~அல்ஜஸீறா| பத்திரிகையின் அச்சுச் சாதனங்களைக் கொண்டு நானே எழுத்துக் கோர்த்து அச்சகம் கொண்டு சென்று அச்சடித்து வெளியிட்ட அந்தப் போர்க் காலங்கள் கூட அழகியன... கவிதைத் தொகுதி ஏதும் இன்னும் வெளியிடவில்லை..
1986களில் ~வாஷிங்டன் கனவு|ää 1989 ல்- ~இன்னாலில்லாஹி...| போன்ற ரோணியோ கவிதைத் தொகுப்புக்கள். 1993 ல் ஹைக்கூ கவிதைகளுக்கென்றே ~புள்ளி| என்ற சிற்றிதழ்.. (இரண்டே இதழ்கள்தாம் வந்தன) . பிறகு 2002ல் ஏ.எம். ஜாபீர்ää நகிபுடன் சேர்ந்து ~இரண்டாவது பக்கம்| கவியேடு.. இப்படிச் சில..
கவிதையின் மூலப் பொருட்கள் வட்டார வழக்காக இருக்கட்டும் அல்லது அம்மண வார்த்தையாயிருக்கட்டும்ää அல்லது மரபுப் பர்தாவைப் போர்த்திக் கொண்டிருக்கட்டும்ää எதுவாயினும்ää ~பெருகிய உணர்வின் இறுகிய சிந்தனைச் சிறைப்பிடிப்பே கவிதை| என்று எனது குருநாதர் பாவலர் பஸீல் காரியப்பர் கூறுவதை விடவும் அவை வேறானதல்ல என்றே இன்னமும் உணர்கிறேன்.
கேள்வி--- இலங்கை வானொலி நாடகங்களின் மீதான உங்கள் ஈடுபாடுகள் பற்றி...?
பதில்--- ஆ..அது ஒரு பொற்காலம்.! இப்போது தமிழக தொலைக்காட்சி நாடகங்களுக்கு நேயர்களிடம் இருக்கும் வரவேற்பு அப்போது இலங்கை வானொலி நாடகங்களுக்கு இருந்தன.. வானொலி நாடகங்களுக்காக நேயர்கள் காத்துக் கிடந்தனர்.. வானொலி நாடக குறியீட்டொலி கேட்டே தம் கைக்கடிகாரங்களை திருப்பி வைக்கின்ற காலம் அது..! 1985ல் எனது முதல் வானொலி நாடகம் ~வாக்கு| முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பானது. தொடர்ந்து 1990 வரை சுமார் 12 வானொலி நாடகங்கள் கலைமாமணி எம். அஸ்ரப்கான் அவர்களின் நெறியாழ்கையில்ää எழுதியிருக்கின்றேன். இவற்றில் ~ஒரு கிராமத்தின் கவிதை| சுமார் 25 தடவைகள் ஒலிபரப்பானது.. வானொலி நாடகப் போட்டியில் ~காகித உறவுகள்| நாடகத்திற்கு தினக்குரலும் பிரான்ஸ் தமிழ் வானொலியும் இணைந்து 3ம் பரிசளித்தது. தத்துவஞானி உமர்கையாமின் வாழ்வியலின் ஒரு துளியாக ஒலிபரப்பான ~விண்மீன் வீடு| என்ற நாடகத்திற்கு நேயர்கள் பொழிந்த பாராட்டுமழையை நினைந்துää இப்போதும் நனைந்து மகிழ்கிறேன்..
நடிகமணி கேஎம் ஜவாஹர்ääஞெய்ரகீம் ஸஹீத்ää ஸில்மியா ஹாதிää நூர்ஜஹான் மர்ஸ_க்ää அஸ்ரப் சிகாப்தீன்ää ஸனோஸ் முகம்மத் பெரோஸ்ää ஏ.எல்.ஜபீர்ää ஏ.ஆர்.எம். ஜிப்ரிää எம். தாஜ்ää எம்.எம்.ரவ்ப்ää ஹ_ஸைன்ää லத்தீப்ää புர்கான்பீ இப்திகார்ää என்று ஒரு கலைஞர் பட்டாளமே ~குரல் நடிக நட்சத்திரங்களாக| திகழ்ந்த காலத்தை எண்ணி வியக்கிறேன்.
ஓலிபரப்பாகிய நாடகங்களில் கைவசம் உள்ள 10 நாடகங்களின் தொகுப்பு ~முஸ்லிம் நிகழ்ச்சியில் அடுத்ததாக....| என்ற பெயரில் இறுவட்டுத் தொகுதியாக அடுத்த மாதமளவில் வெளிவருகிறது.
கேள்வி--- கதைகளைத் தவிர வேறு என்னென்ன தளங்களில் இயங்கியிருக்கிறீர்கள்...?
பதில்---- 2008ல் ~விடிவெள்ளி|யில் ~ஒரு சிற்றெறும்புக்கும் நிழல் இருக்கிறது..||என்ற தலைப்பில் பாவலரின் படைப்புலகில சஞ்சாரம் செய்திருக்கிறேன்.. (10 தொடர்கள் எழுதி இடைநடுவில் நிறுத்தி விட்டார்கள்) நவாஸ்சௌபியின் ~நல்லுறவு|; இதழில் 2009ல் ~விழித்திரையில் விரியும் வெண்திரை| என்று அயல்மொழிச் சினிமாக்கள் பற்றிய தொடர் மற்றும்ää ~யாத்ரா| வில் ~செல்லிடம் பேசேல்| என்ற தலைப்பில் சில வாழ்வியல் நகைச்சுவைக் கட்டுரைகள்.. இப்போது அபாபீல்கள் வலைத்தளத்தில் ~ஆத்மாவின் வலைகள்...| என்ற தலைப்பில் சில ஆன்மீகத் தகவல்கள் தொகுத்து வருகிறேன்..
கேள்வி--- யாரையெல்லாம் வாசிக்கிறீர்கள்... என்ன வாசிக்கிறீர்கள்..?
பதில்-- தமிழகம் புலம்பெயர் ஈழம் என்றில்லாமல் கைக்குக் கிடைப்பதையெல்லாம் வாசித்து விடுவதுண்டு.. முன்னரெல்லாம் நமக்குத் தொழில் வாசிப்பு.. யோசிப்பு என்றிருந்தேன்.. இப்போதெல்லாம் தேர்ந்தெடுத்தே வாசிக்கின்றேன். வலைப் பூக்களிலும் இணைய தளங்களிலும் கொஞ்சம் வலம் வருகின்றேன்.. தற்போது சூபித்துவ மெய்ஞான தமிழ்மொழி இலக்கியங்களை ஆய்ந்து வருகின்றேன்..
கேள்வி--- நாவல்ää சிறுகதைகள் உருவாக்கத்தில் உங்களின் உத்தி என்ன..? ஒரு நல்ல படைப்பு எப்படி இருக்க வேண்டும் எனக் கருதுகிறீர்கள்...?
பதில்--- உத்தி என்பது என்ன.. நாம் உருவாக்குவதுதானே.. ஒரு கணத்தில் மின்னி மனதில் வீழ்படிகின்ற கருவைப் படைப்பதில் எத்தனையோ விசயங்களை யோசிக்கின்றேன். பாத்திர வார்ப்புää கதா மாந்தர்ää நிகழ்தளம் யாதர்த்தப் பூச்சுää மொழிநடைää உரையாடல் என்றெல்லாம் படைப்பின் முன்னுள்ள நிலை குழப்பமானது. எல்லாவற்றையும் கருத்திற் கொண்டு உருவாக்கிய படைப்புரு என்னை இலேசில் திருப்திப்படுத்துவதில்லை. மீண்டும்ää செவ்விதாக்கல் என்ற செதுக்கும் தொழிற்சாலையிலிட்டு (அது எத்தனை நாளாகுமோ தெரியாது) கடைச்சல் வேலை செய்கின்றேன். அது ஒரு தனிக்கலை. உண்மையில் படைப்புலகம் ஒரு இருள். படைப்புத் திறமை ஒரு அருள். அது எல்லலோருக்கும் அருளப்படுவது கிடையாது. நினைத்தவுடன் பேப்பரை எடுத்து கதை (எழுதி) விடுவதில் எனக்குச் சம்மதமில்லை..
கேள்வி--- இறுதியாக தினக்குரல் வாசகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்...?
பதில்--- ஞாயிறு தினக்குரலில் என் 7 சிறுகதைகள் வெளியாகியிருக்கின்றன.. தினக்குரலின் அனுசரனையில் நடத்தப்பட்ட வானொலி நாடகப் போட்டியில் பரிசு பெற்றுள்ளேன். என் ~வல்லமை தாராயோ!| சிறகதைத் தொகுதி விமர்சனம் தினக்குரலில்தான் முதலில் வெளிவந்தது. நான் தினக்குரலின் நீண்டகால வாசகன். ஓரு தினக்குரல் வாசகி என் கதைகளை வியந்துää ~நீ ஒரு இடது கை இறைவன்..|என ஒரு வாசகர் கடிதம் எழுதியிருந்தார். அவருக்கும் அனைத்து தினக்குரல் வாசகருக்கும் என் மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்...! (071-4457593 — சஅயெறளாயன@பஅயடை.உழஅ)

நேர்காணல்--- தீரன். ஆர்.எம். நௌஸாத்

தம்பிலுவில் ஜெகா பீ.ஏ.
இதுவரை அறியப்படாத தளங்களில் இருந்தும்
அறியப்பட்ட தளங்களில் உள்ளää தெரியப்படாத பக்கங்கள் பற்றியும் கூடுதலாகச் சிந்திக்கிறேன்.
தீரன். ஆர்.எம். நௌஸாத்
00 ~வல்லமை தாராயோ..|ää (2000)ää ~வெள்ளிவிரல்| (2011)ää ஆகிய இரண்டு சிறுகதைத் தொகுதிகளையும் ~நட்டுமை| (2009) என்ற நாவலையும் தமிழிலக்கிய உலகுக்கு அளித்தவர்.
00 தமிழ்நாடு ~காலச்சுவடு| இதழ் நிறுவுனர் சுந்தர ராமசாமி 75 பவழவிழா இலக்கியப்போட்டியில் இவர் தனது ~நட்டுமை| நாவலுக்கு முதற் பரிசு வென்றவர்.
00 தனது ~வெள்ளிவிரல்| சிறுகதைத் தொகுதிக்கு 2011ல் தேசிய அரச சாகித்திய விருதும் கிழக்கு மாகாண சாகித்திய விருதும் ஒருங்கே பெற்றுக் கொண்டவர்.
00 1998ல் ~தினக்குரல்| நாளிதழும் பிரான்ஸ் தமிழ்வானொலியும் இணைந்து நடத்திய சில்லையூர் செல்வராசன் ஞாபகார்த்த உலக வானொலி நாடகப் போட்டியில் ~காகித உறவுகள்| என்ற தனது வானொலி நாடகத்திற்கு 3ம் பரிசு பெற்றவர்.
00 இவரது ~நல்லதொரு துரோகம்| என்ற சிறுகதைக்கு பேராதனை பல்கலைக் கழக தமிழ்சங்கம் முதற்பரிசாக தங்கப் பதக்கம் அளித்தது..
00 அத்துடன்ää இவரது ~சாகும்-தலம்.| சிறுகதை தமிழ்நாடு எழுத்தாளர் சுஜாதா அறக்கட்டளை நிறுவனம் நடத்திய அறிவியல் புனைகதைப் போட்டியில் முதற்பரிசு பெற்றது.
00 ~ஞானம்| சஞ்சிகை நடத்திய புலோலியூர் க. சதாசிவம் நினைவுச் சிறுகதைப் போட்டியில் தனது ~தாய்-மொழி| சிறுகதைக்கு முதற்பரிசு உட்பட மேலும்ää பற்பல இலக்கியப் போட்டிகளில் தமது வித்தியாசமான வார்ப்பிலான சுமார் 19 சிறுகதைகளுக்கு பற்பல பரிசில்கள் பெற்றவர். அவருடனான ஒரு நேர்காணல் இது..........
கேள்வி--- முதலில் உங்களது பிரத்தியேக வாழ்நிலை பற்றி ஒரு சுருக்க அறிமுகம் செய்வதானால்....?
பதில்---- நல்லது..நான் தொழிலால் ஒரு தபால் அதிபர். இலங்கையின் பற்பல பகுதிகளிலும் சுமார் 30 வருடங்கள் சேவையாற்றிய பின் தற்போது என் சொந்த இடமான சாய்ந்தமருது தபாலகத்தில் பொறுப்புத் தபாலதிபராக கடமை செய்கின்றேன்.. மூன்று பிள்ளைகளின் தந்தை.. மனைவி பாத்திமா றிபாயா..
கேள்வி--- எழுத்துத் துறைக்கு எப்படி வந்தீர்கள்..?
பதில்---- ~கல்முனை ஸாஹிறா| இலக்கியப் பண்ணையில்தான் இது ஆரம்பமாயிற்று. 1975ல் பாடசாலை வெளியீடான ~அம்பு| சஞ்சிகைக்கு ஒரு வாசகர் கடிதம் எழுதியதன் மூலம் எழுத்துலகில் உட்பிரவேசித்தேன். அப்புறம் துணுக்குகள்ää கேள்வி பதில்...உருவகக் கதை.. குறுங்கதை... ஒன்றிரண்டு சிறுகதைகள்.. அப்படி இப்படியென்று கொஞ்ச காலம்... 1990க்குப் பின்னர் ஒன்றும் எழுதாமல் ~இலக்கிய நெடுந்தூக்கம்.|... இக்காலப்பகுதி முழுவதும் படிப்புää தொழில்..திருமணம் குடும்பம்..என்று போயிற்று.. இருப்பினும் தோன்றும் போதெல்லாம் எழுதி எழுதி வைத்துக் கொண்டும் செவ்வை பார்த்துக் கொண்டும் அநேகமாக புத்தகங்கள் வாசித்துக் கொண்டும்தானிருந்தேன்.. இலக்கிய நெடுந்தூக்கத்திலிருந்து மீண்டெழுந்து ..2000ம் ஆண்டில் ~வல்லமை தாராயோ!| சிறுகதைத் தொகுதியை கொணர்ந்தேன்.. அதிலிருந்து தொடர்ச்சியாக எழுதி வருகின்றேன்..
கேள்வி--- உங்களது சிறுகதைத் தொகுதிகள் பற்றியும் அவற்றின் வார்ப்பு நிலைகள் பற்றியும் அறிய விரும்புகிறோம்....?
பதில்---- ~வல்லமை தாராயோ..!| என்பது எனது முதல் சிறுகதைத் தொகுதி.. 2000ல் வெளியானது. எட்டுச் சிறுகதைகளை உள்ளடக்கியது இது. எனினும் நமது ~விமர்சன மற்றும் இரசனைக் குறிப்பு| எழுதுகிற ~அறிஞர்களால|; அவ்வளவாகக் கண்டு கொள்ளப்படாமல் முடங்கி விட்டது. புpன்னர்ää பற்பல இலக்கியப் போட்டிகளில் பரிசுகள் பெற்ற 12 சிறுகதைகளைத் தொகுத்து தமிழ்நாடு காலச்சுவடு நிறுவனம் ~வெள்ளிவிரல்| என்ற பெயரில் ஒரு தொகுதியாக வெளியிட்டது. இது 2011ன் அரச சாகித்திய விருதையும்ää கிழக்கு மாகாண சாகித்திய விருதையும் பெற்றது.
வார்ப்பு நிலை என்று கேட்டீர்கள்.. இது விரிவான விசயம்.. ஓரு சிறுகதையின் வெற்றிக்கு பல காரணங்கள் இருந்த போதிலும்ää என்னைப் பொறுத்த வரையிலும் இதுவரை அறியப்படாத தளங்களில் இருந்தும் அறியப்பட்ட தளங்களில்உள்ளää தெரியப்படாத பக்கங்கள் பற்றியும் கூடுதலாகச் சிந்திக்கிறேன். முதலில் நுகர்பவரை கதைக்குள்ளே வரவைக்;கிறேன். அப்புறம் அவர் என்னை வாங்காமல் போக முடியாதபடி செய்து விடுவது என் கதைத் தந்திரம். இதில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை. எல்லோரும் ஒரே விதமாக ~கதை|த்துக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. இக்காலத்தில் கூட என்னால் இன்னும் வெகுசுதந்திரமாக எழுத முடியவில்லை என்றே விசனிக்கிறேன்;.
கேள்வி---- நாவல் முயற்சிகளைப் பற்றிக் கூறுவதானால்...?
பதில்---- என் முதல் குறுநாவல் ~வானவில்லே ஒரு கவிதை கேளு..| ஈழநாதம் பத்திரிகையில் 2005 தொடக்கம் ஏழு தொடர்கள் ஏழு வண்ணங்களாக வெளியாயிற்று. இரண்டாவது குறுநாவல் ~பள்ளிமுனைக் கிராமத்தின் கதை| தொடர்ச்சியாக 2003 தொடக்கம் முஸ்லிம் குரலில் 40 அங்கங்களாக பிரசுரமானது. இது 1990 களின் தென் கிழக்கின் யுத்த காலத்தைப் பின்புலமாகக் கொண்டது. அக்காலத்து அரசியல் போக்கினால் பாதிக்கப்பட்ட ஒரு அப்பாவிக் கிராம மக்களின் வாழ்வியல் பற்றிய இக்குறுநாவல் பின்னர்ää நண்பர்களான எம். பௌசர்ää எம்.எம்.எம்.நூறுல்ஹக் ஆகியோரின் ஊக்குவிப்பினால் தனி ஒரு முழுநாவலாக உருவெடுத்தது. இது தற்போது மேலும் செவ்விதாக்கப்பட்டு ~கொல்வதெழுதுதல். 90| என்ற தலைப்பு மாற்றத்துடன் இவ்வருட இறுதியில் இன்ஸா அல்லாஹ் வெளியாக உள்ளது..
என் மூன்றாவது முழு நாவல் ~நட்டுமை| இது கிழக்கு மண்ணின் 1940க்கு முந்திய விவசாய மக்களின் வாழ்வியலைப் பேசுகிறது. கிழக்கு முஸ்லிம் மக்களின் வட்டார வழக்குப் பேச்சோசையில் ஒலிக்கும் இந்நாவல் கடல்கடந்து தமிழ்நாட்டில் சுந்தரராமசாமி நினைவு நாவல் போட்டியிலும் முதற்பரிசு பெற்றது. 2009ல் காலச்சுவடு வெளியீடாக வந்தது. சில ~இலக்கிய இருட்டடிப்புகளையும்| மீறி எனக்கு ஓரு ஒளிவட்டம் தந்தது இந்நாவல். புகழனைத்தும் இறைவனுக்கே!
எனது நான்காவது நாவல் ~சாந்த-மாமா| பிரசுரமாகாதுள்ளது.. ஐந்தாவது நாவல் ~யுத்த பிக்குகள்| - இது தற்போது உருவாக்கத்தில் உள்ளது.
.
நாவல் எழுதுவது தனி ஒரு நுட்பம். மிக நீண்ட சிறுகதையை ஒரு முழுநாவலாக்கி விடுவோரும் ஒரு நாவலையே ஒரு சிறுகதையாக்கி விடுவோரும் இந்த நுட்பம் தெரியாதோரே... இந்த நாவல்த் தொழிநுட்பத்தை நான் கற்றுக் கொண்டு கையாள ஆரம்பித்த போது வாசகர்கள் பொதுவாகää நாவல்கள் வாசிப்பதையே பெரும்பாலும் நிறுத்தியிருந்தனர்....
இந்த தேக்க நிலையிலும் இப்போதும் நாவல்கள் வந்து கொண்டுதானிருக்கின்றன.. வாசிக்கப்பட்டுக் கொண்டுமிருக்கின்றன.. ஒரு சிறுகதைக்குள் அடக்கி விட முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் ~கரு எச்சங்கள்| வியாபித்து வெடிப்பது நாவலில்தானே...அந்தப் பிரசவம் தரும் வலி இனிது. அதன் வடிவமைப்புகள் பெரிது.. அதனூடான சஞ்சாரம் ஒரு ஆபத்தான அழகு.. ஓரு நாவலைப் படித்த பின் அக்கதை மாந்தருடன் வாசகர் வாழும் காலமெல்லாம் அந்நாவலும் அதன் தயாரிப்பாளியும் நித்திய ஜீவியமடைகிறார்கள்; என்பதே உண்மை.
கேள்வி---- கவிதைத் துறை ஈடுபாடுகள் மற்றும் அனுபவங்களைக் கூறுவதாயின்....?
பதில்--- 1977 தொடக்கம் கவிதைகள் என்று நினைத்துக் கொண்டு சிலவற்றை பற்பல பத்திரிகைகளில் எழுதி வந்தேன். எல்லாம் புதுக்கவிதைகள்தாம். ~கொக்கூர்கிழான்| கா.வை. இரத்தினசிங்கம் ஐயா அவர்களின் பயிற்சியின் பின் மரபுக் கவிதை வாள் சுழற்றவும்ää ~குறும்பா. வெண்பாக் கத்திகள் எறியவும் ஓரளவு கற்றுக் கொண்டேன்.. அல்அஸ_மத்தின் ~பூபாளம்| கவியேடு நடத்திய குறும்பாப் போட்டியில் பரிசு பெற்றது ஒரு தனி ஆனந்தம். 1981 இலிருந்து 1989 வரை ~தூது| என்ற பேரில் ஒரு கவிதைச் சிற்றேட்டை நண்பர் றாபீக்குடன் சேர்ந்து 16 இதழ்கள் வரை வெளியிட்டேன்... தூது இதழில் ஆசிரியத் தலையங்கங்களை வெண்பாääகுறும்பாக்களில் எழுதித் தீ மிதித்தேன். நண்பர் கல்முனை முபாறக்கின் ~அல்ஜஸீறா| பத்திரிகையின் அச்சுச் சாதனங்களைக் கொண்டு நானே எழுத்துக் கோர்த்து அச்சகம் கொண்டு சென்று அச்சடித்து வெளியிட்ட அந்தப் போர்க் காலங்கள் கூட அழகியன... கவிதைத் தொகுதி ஏதும் இன்னும் வெளியிடவில்லை..
1986களில் ~வாஷிங்டன் கனவு|ää 1989 ல்- ~இன்னாலில்லாஹி...| போன்ற ரோணியோ கவிதைத் தொகுப்புக்கள். 1993 ல் ஹைக்கூ கவிதைகளுக்கென்றே ~புள்ளி| என்ற சிற்றிதழ்.. (இரண்டே இதழ்கள்தாம் வந்தன) . பிறகு 2002ல் ஏ.எம். ஜாபீர்ää நகிபுடன் சேர்ந்து ~இரண்டாவது பக்கம்| கவியேடு.. இப்படிச் சில..
கவிதையின் மூலப் பொருட்கள் வட்டார வழக்காக இருக்கட்டும் அல்லது அம்மண வார்த்தையாயிருக்கட்டும்ää அல்லது மரபுப் பர்தாவைப் போர்த்திக் கொண்டிருக்கட்டும்ää எதுவாயினும்ää ~பெருகிய உணர்வின் இறுகிய சிந்தனைச் சிறைப்பிடிப்பே கவிதை| என்று எனது குருநாதர் பாவலர் பஸீல் காரியப்பர் கூறுவதை விடவும் அவை வேறானதல்ல என்றே இன்னமும் உணர்கிறேன்.
கேள்வி--- இலங்கை வானொலி நாடகங்களின் மீதான உங்கள் ஈடுபாடுகள் பற்றி...?
பதில்--- ஆ..அது ஒரு பொற்காலம்.! இப்போது தமிழக தொலைக்காட்சி நாடகங்களுக்கு நேயர்களிடம் இருக்கும் வரவேற்பு அப்போது இலங்கை வானொலி நாடகங்களுக்கு இருந்தன.. வானொலி நாடகங்களுக்காக நேயர்கள் காத்துக் கிடந்தனர்.. வானொலி நாடக குறியீட்டொலி கேட்டே தம் கைக்கடிகாரங்களை திருப்பி வைக்கின்ற காலம் அது..! 1985ல் எனது முதல் வானொலி நாடகம் ~வாக்கு| முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பானது. தொடர்ந்து 1990 வரை சுமார் 12 வானொலி நாடகங்கள் கலைமாமணி எம். அஸ்ரப்கான் அவர்களின் நெறியாழ்கையில்ää எழுதியிருக்கின்றேன். இவற்றில் ~ஒரு கிராமத்தின் கவிதை| சுமார் 25 தடவைகள் ஒலிபரப்பானது.. வானொலி நாடகப் போட்டியில் ~காகித உறவுகள்| நாடகத்திற்கு தினக்குரலும் பிரான்ஸ் தமிழ் வானொலியும் இணைந்து 3ம் பரிசளித்தது. தத்துவஞானி உமர்கையாமின் வாழ்வியலின் ஒரு துளியாக ஒலிபரப்பான ~விண்மீன் வீடு| என்ற நாடகத்திற்கு நேயர்கள் பொழிந்த பாராட்டுமழையை நினைந்துää இப்போதும் நனைந்து மகிழ்கிறேன்..
நடிகமணி கேஎம் ஜவாஹர்ääஞெய்ரகீம் ஸஹீத்ää ஸில்மியா ஹாதிää நூர்ஜஹான் மர்ஸ_க்ää அஸ்ரப் சிகாப்தீன்ää ஸனோஸ் முகம்மத் பெரோஸ்ää ஏ.எல்.ஜபீர்ää ஏ.ஆர்.எம். ஜிப்ரிää எம். தாஜ்ää எம்.எம்.ரவ்ப்ää ஹ_ஸைன்ää லத்தீப்ää புர்கான்பீ இப்திகார்ää என்று ஒரு கலைஞர் பட்டாளமே ~குரல் நடிக நட்சத்திரங்களாக| திகழ்ந்த காலத்தை எண்ணி வியக்கிறேன்.
ஓலிபரப்பாகிய நாடகங்களில் கைவசம் உள்ள 10 நாடகங்களின் தொகுப்பு ~முஸ்லிம் நிகழ்ச்சியில் அடுத்ததாக....| என்ற பெயரில் இறுவட்டுத் தொகுதியாக அடுத்த மாதமளவில் வெளிவருகிறது.
கேள்வி--- கதைகளைத் தவிர வேறு என்னென்ன தளங்களில் இயங்கியிருக்கிறீர்கள்...?
பதில்---- 2008ல் ~விடிவெள்ளி|யில் ~ஒரு சிற்றெறும்புக்கும் நிழல் இருக்கிறது..||என்ற தலைப்பில் பாவலரின் படைப்புலகில சஞ்சாரம் செய்திருக்கிறேன்.. (10 தொடர்கள் எழுதி இடைநடுவில் நிறுத்தி விட்டார்கள்) நவாஸ்சௌபியின் ~நல்லுறவு|; இதழில் 2009ல் ~விழித்திரையில் விரியும் வெண்திரை| என்று அயல்மொழிச் சினிமாக்கள் பற்றிய தொடர் மற்றும்ää ~யாத்ரா| வில் ~செல்லிடம் பேசேல்| என்ற தலைப்பில் சில வாழ்வியல் நகைச்சுவைக் கட்டுரைகள்.. இப்போது அபாபீல்கள் வலைத்தளத்தில் ~ஆத்மாவின் வலைகள்...| என்ற தலைப்பில் சில ஆன்மீகத் தகவல்கள் தொகுத்து வருகிறேன்..
கேள்வி--- யாரையெல்லாம் வாசிக்கிறீர்கள்... என்ன வாசிக்கிறீர்கள்..?
பதில்-- தமிழகம் புலம்பெயர் ஈழம் என்றில்லாமல் கைக்குக் கிடைப்பதையெல்லாம் வாசித்து விடுவதுண்டு.. முன்னரெல்லாம் நமக்குத் தொழில் வாசிப்பு.. யோசிப்பு என்றிருந்தேன்.. இப்போதெல்லாம் தேர்ந்தெடுத்தே வாசிக்கின்றேன். வலைப் பூக்களிலும் இணைய தளங்களிலும் கொஞ்சம் வலம் வருகின்றேன்.. தற்போது சூபித்துவ மெய்ஞான தமிழ்மொழி இலக்கியங்களை ஆய்ந்து வருகின்றேன்..
கேள்வி--- நாவல்ää சிறுகதைகள் உருவாக்கத்தில் உங்களின் உத்தி என்ன..? ஒரு நல்ல படைப்பு எப்படி இருக்க வேண்டும் எனக் கருதுகிறீர்கள்...?
பதில்--- உத்தி என்பது என்ன.. நாம் உருவாக்குவதுதானே.. ஒரு கணத்தில் மின்னி மனதில் வீழ்படிகின்ற கருவைப் படைப்பதில் எத்தனையோ விசயங்களை யோசிக்கின்றேன். பாத்திர வார்ப்புää கதா மாந்தர்ää நிகழ்தளம் யாதர்த்தப் பூச்சுää மொழிநடைää உரையாடல் என்றெல்லாம் படைப்பின் முன்னுள்ள நிலை குழப்பமானது. எல்லாவற்றையும் கருத்திற் கொண்டு உருவாக்கிய படைப்புரு என்னை இலேசில் திருப்திப்படுத்துவதில்லை. மீண்டும்ää செவ்விதாக்கல் என்ற செதுக்கும் தொழிற்சாலையிலிட்டு (அது எத்தனை நாளாகுமோ தெரியாது) கடைச்சல் வேலை செய்கின்றேன். அது ஒரு தனிக்கலை. உண்மையில் படைப்புலகம் ஒரு இருள். படைப்புத் திறமை ஒரு அருள். அது எல்லலோருக்கும் அருளப்படுவது கிடையாது. நினைத்தவுடன் பேப்பரை எடுத்து கதை (எழுதி) விடுவதில் எனக்குச் சம்மதமில்லை..
கேள்வி--- இறுதியாக தினக்குரல் வாசகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்...?
பதில்--- ஞாயிறு தினக்குரலில் என் 7 சிறுகதைகள் வெளியாகியிருக்கின்றன.. தினக்குரலின் அனுசரனையில் நடத்தப்பட்ட வானொலி நாடகப் போட்டியில் பரிசு பெற்றுள்ளேன். என் ~வல்லமை தாராயோ!| சிறகதைத் தொகுதி விமர்சனம் தினக்குரலில்தான் முதலில் வெளிவந்தது. நான் தினக்குரலின் நீண்டகால வாசகன். ஓரு தினக்குரல் வாசகி என் கதைகளை வியந்துää ~நீ ஒரு இடது கை இறைவன்..|என ஒரு வாசகர் கடிதம் எழுதியிருந்தார். அவருக்கும் அனைத்து தினக்குரல் வாசகருக்கும் என் மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்...! (071-4457593 — சஅயெறளாயன@பஅயடை.உழஅ)

Lafees Shaheed
நட்டுமை நாவலின் பின்னணி
உழைப்பு பிரமிக்கத்தக்கது. கதை நடைபெறும்
காலப்பிரிவான சுதந்திரத்துக்கு முந்தைய
கிழக்கிலங்கையை தத்ரூபமாக சித்தரிக்கும்
மொழி வழக்கு, உணவுக் குறிப்புகள், பண்பாட்டுத்
தகவமைப்பு என்று ஆசிரியர் மிகவுமே
பிரயத்தனப்பட்டு இருக்கிறார். அதீதமான
உழைப்பு. யதார்த்தவாத பாணியில் -
யதார்த்தவாதம் என்ற கோட்பாட்டின் சிக்கல்கள்
ஒரு புறம் இருக்க - கதை கூறிச் செல்கிறது
நட்டுமை. ஆனால் நாவலில் அன்றைய
நிலவுடமை சமூகத்தின் உள் முரண்கள்
மெளனமாக்கப்பட்டுள்ளன. பியூடலிசம் சார்ந்த
போடியார் எனப்படும் பாத்திரம் ரொமண்டிசைஸ்
பண்ணப்பட்டுள்ளது. அரசியல் நீக்கம்
செய்யப்பட்ட தூய கலை என்பவர்கள் இந்த
நாவலை நெருடலின்றி ரசிக்கலாம். ஆனால்
சமகாலத் தன்மையுடன் Political Correctness
கொண்ட பிரக்ஞை கொண்டவர்கள் நட்டுமை
நாவலின் கட்டமைப்பை கடுமையாக
விமர்சனமே செய்வார்கள். நட்டுமை நாவலின்
மொழி கவித்துவம் கொண்டது. ஆனால்
உள்ளடக்கம் வரலாறு சார்ந்த இருட்டடிப்பு
கொண்டது. ஆயினும் அருமையான Pleasure of the
Text இனை தரும் பிரதியே நட்டுமை என்பதை
மறுத்திட முடியாது.
-------------------------------------------
-------------------------------------------
No comments:
Post a Comment