Tuesday, July 28, 2015
நவாஸ் சௌபி - எதுவரை
நவாஸ் சௌபி சாய்ந்தமருது 'எதுவரை'யில்
‘ ஷோபா சக்தியின் எம்.ஜி.ஆர் கொலை வழக்குச் சிறுகதையின் மொழிப் பயன்பாடு இன்னும் 20 வருடங்களாகக் கடந்து வாசிப்புச் செய்யக் கூடிய ஒரு எழுத்துப் பண்பாட்டை இப்போதே படம் போடுகிறது. ஷோபா சக்தியின் சிறுகதையை மொழிக் கையாள்கையின் ஆளுமையோடு நோக்குவது போல்
தீரன் ஆர்.எம். நௌசாத் எழுதிய‘விட்டு விடுதலையாகி’ எனும் சிறுகதையை கதைசெல்லும் நுட்ப ஆளுமையாகவும் மதிப்பிடுகிறேன்.
இவ்வாறு எதுவரை சஞ்சிகையின் உள்ளடக்கம் மற்றும் வடிவமைப்புக் குறித்து நாம் விரிவாகப் பேசவேண்டிய இலக்கிய அரசியல்கள் எமக்குள் பல வழிகளையும் திறந்துவிடுகிறது. இத்தகைய காத்திரமான ஒரு இலக்கிய அரசியலை பேசும் எதுவரையின் குரல் நின்றுவிடாது அதனை யாரும் நசுக்கிவிடாது தொடரும் வல்லமைகளை கொள்ள வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment