தீராவெளி

Tuesday, July 16, 2024

கிண்ணியா அமீர் அலி

 

தீரன்

 

நூரெனு மொளியை நாடி 

நூறுபா யாக்கு மெங்கள் 

தீரனார்க் கெம்து ஆக்கள்!

ஜும் ஆமுபா றக்குஞ் சேர்த்து..!


காரணக் கலிமாக் கல்பால் 

ஹக்கெனுஞ் சத்தி யத்தைப்

பூரண மாகத் தேடும் 

புலவநும் புலமை வாழ்க!

தோரண வாழ்வுத் தோப்புத் 

தொடர்வாசங் கரையும் மாயைக் 

காரண மறிந்த ஞானக் 

கவிதீரன் மேன்மை வாழ்க! 

o

கிண்ணியா அமீர் அலி 

 

No comments:

Post a Comment